முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காவல்துறைக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் பாராட்டு!


சென்னை: சமூக வலைத்தளைங்களில் இந்து முன்னணி சார்பில் தமிழகத்தை சூழும் ஜிஹாதிகள் என்ற தலைப்பில் தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பதற்றமாக காட்டும் வீடியோக்கள் பரப்பப்பட்டன.
இது தொடர்பாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் உரிய அழுத்தத்தைக் கொடுத்து வந்தன. இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் துணைத் தலைவர் முஹமது முனீர் தொடர்ந்து காவல் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதை நீக்காவிட்டால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தெரிவித்தார்.
நாகை, திருப்பூர், காஞ்சி மற்றும் திண்டுக்கல் என அனைத்து மாவட்ட  நிர்வாகிகளும் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை நேற்று இரவு ஒரு வாரத்தில் நீக்குவதாக வாக்குறுதி அளித்தனர். அதைப் போன்று யூடியூபில் இந்து முன்னணி வெளியிட்டுள்ள அனைத்து ஆவனப் படங்களும் நீக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அமைப்புகளின் தொடர் முயற்சியால் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து உள்ளது.
இவ்விசயத்தில் மக்களின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணை தலைவர் முஹமது முனீர் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார் மேலும், இந்த ஆவண படத்தை மக்களிடம் விநியோகம் செய்வதையும் தடை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

லண்டனில் இஸ்லாத்தை ஏற்ற 10 மணி நேரத்தில் பெனரல் (எ) ஜனாஜா என்ற பெண் மரணித்தார்.


லண்டனில் இஸ்லாத்தை ஏற்ற பத்து மணி நேரத்தில் பெனரல் (எ) ஜனாஜா என்ற பெண் மரணித்தார். இறுதி ஊர்வலத்திற்கு ஆள் இல்லாமல் மனம் குமறிய மகன், சமூக வளைத்தளத்தில் பதிவேற்றி உதவி கோரி அவருடைய விலாசத்தை பதிவு செய்தார்.
பதிவு செய்த சில மணி நேரங்களில்
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஜனாசா தொழுகையில் கலந்துக்கொண்டனர்.

இந்த மார்கத்தை அன்பினால் பிணைத்திருக்கின்றோம் என்ற இறை கூற்றை மெய்பித்த மக்கள் சாரை சாரையாக அணி திரண்டார்கள். 
அல்லாஹு அக்பர்.

இந்த சகோதரிக்கு அல்லாஹ் ஜன்னத் எனும் சொர்க்கத்தை தந்தருள்வானாக.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)