சென்னை: சமூக வலைத்தளைங்களில் இந்து முன்னணி சார்பில் தமிழகத்தை சூழும் ஜிஹாதிகள் என்ற தலைப்பில் தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பதற்றமாக காட்டும் வீடியோக்கள் பரப்பப்பட்டன.
இது தொடர்பாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் உரிய அழுத்தத்தைக் கொடுத்து வந்தன. இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் துணைத் தலைவர் முஹமது முனீர் தொடர்ந்து காவல் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதை நீக்காவிட்டால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தெரிவித்தார்.
நாகை, திருப்பூர், காஞ்சி மற்றும் திண்டுக்கல் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை நேற்று இரவு ஒரு வாரத்தில் நீக்குவதாக வாக்குறுதி அளித்தனர். அதைப் போன்று யூடியூபில் இந்து முன்னணி வெளியிட்டுள்ள அனைத்து ஆவனப் படங்களும் நீக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அமைப்புகளின் தொடர் முயற்சியால் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து உள்ளது.
இவ்விசயத்தில் மக்களின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணை தலைவர் முஹமது முனீர் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார் மேலும், இந்த ஆவண படத்தை மக்களிடம் விநியோகம் செய்வதையும் தடை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.