முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லிம்கள் தேசிய அரசியலை முன்னெடுக்கவேண்டும்!” – துபையில் நடந்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி விழாவில் வேண்டுகோள்!







துபாய், டிசம்பர் 28: பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி (ICS) துபையில் நேற்று (26.12.2014) நடத்திய மாபெரும் கருத்தரங்கில் அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் வலசை ஃபைஸல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

“தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு வெற்றிடமாகவே உள்ளது. ஹிந்துத்துவாவின் கட்டாய வெறுப்பு மற்றும் திணிப்பு அரசியலை உணர்ந்து உறுதியுடனும், விவேகத்துடனும் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என்று அவர் தனது சிறப்புரையில் கூறினார்.

முன்னதாக துபை மண்டல பொது செயளாலர் பத்ர் ஜமான் வரவேற்புரை நிகழ்த்தினார். அமீரக தமிழ் பிரிவு தலைவர் நிழாம் தலைமையுரை ஆற்றினார். துபை மண்டல தலைவர் சுஹைல் யூசுஃப் முன்னிலை வகித்தார்.

அடுத்து, சிறப்புரையாற்றிய ICS-யின்அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் அவர்கள் தனது சிறப்புரையில் மேலும் கூறியதாவது:
இந்தியாவை ஒருமைப்படுத்தியது முஸ்லிம்கள். இந்தியாவுக்கு முஸ்லிம்கள் செய்த சேவையைச் சொல்வதென்றால் இது ஒன்று போதும். இந்தியா என்னும் நாட்டை உருவாக்கவும், இந்திய விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரும் பாடுபட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆதிக்க சக்திகளுக்கெதிராக விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் முஸ்லிம்கள். அப்படி தியாகம் செய்துள்ள முஸ்லிம்களின் நிலை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மிகுந்த பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த உரிமைகள் கூட இன்று இல்லை. இந்நிலையை மாற்ற முஸ்லிம் சமுதாயம் அரசியல் தளத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்று நாம் போராடுகிறோம், கவலைப்படுகிறோம்.

ஆனால் இந்நிலைக்கு முக்கிய காரணம் அரசியல் தளத்தில் நாம் வலுவாக கால் பதிக்காததே. அரசியலில் வலுவாக காலூன்றிய சமூகங்கள் எல்லா துறைகளிலும் முன்னேறியுள்ளன. அது இல்லாத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ளனர்.

இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகள் என்பது தமிழக அளவிலுள்ள பிரச்னைகள் மட்டும் அல்ல. நாம் அந்தக் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளை நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். வடநாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ளது. அவர்கள் சேரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதில் அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). துவங்கிய குறைந்த காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக SDPI வளர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் நம்பிக்கையாக எஸ்.டி.பி.ஐ திகழ்கின்றது.

பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலை சமூகம் உணர்ந்து வீரியத்துடன் நமது உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொடர்ந்து ஆக்கபூர்வமான, தன்னலமற்ற அரசியல் பணிக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி தனது முழு பங்களிப்பையும் கொடுக்கும்.

இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ICS-ன் உறுப்பினர் சேர்க்கை படிவம் வெளியிடப்பட்டது. அதில் அமீரக தலைவர்கள் முன்னிலையில் திரளாக மக்கள் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியில் இணைந்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ICS-ன் கர்நாடக மாநில பொது செயலாளர் ஸஹீருல் ஹக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக, அமீரக செயலாளர் அபுல் ஹஸன் அவர்கள் நன்றியுரையை நவின்றார். கலந்துகொண்டவர்கள் ICS-ன் நிர்வாகிகளிடம் கைலாகு கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் இல்யாஸ்... 

சிங்கபூர் விமானம் Air Asia இன்று தொடர்பை இழந்து வலி தவறியது. 162 பயணிகள் மாயம்...


 
சிங்கப்பூர், டிசம்பர் 28: இந்தோனோசியாவில் இருந்து இன்று காலை 7 மணிக்கு சிங்கபூருக்கு புறப்பட்ட "Air Asia" விமானம் சரியாக 7.24 லோக்கல் நேரம் Air Asia விமான குழுவினரின் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றால் அதில் பயணித்த பயணிகளின் விபரமும் இன்னும் தெரியவில்லை. மேலும் இது குறித்த செய்தியை Air Asia நிறுவனத்தின் FACE BOOK பகுதியில் எங்களிடம் இருந்து விமானம் கட்டுப்பாட்டு தொடர்புக்கு வெளியில் சென்று விட்டது என்று விமான என்: QZ8501 Airbus A320-200 குறிப்பிட்டுள்ளது. விமானம் காலை சரியாக 8:30 மணிக்கு சிங்கப்பூர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை அந்நாட்டு தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது அதன் விபரம், 157 இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்றும், 3 சவுத் கொரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 1 சிங்கபூர், 1 மலேசியன் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

"AIR ASIA" விமானம் தொடர்பு இழந்தபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வளையத்தில் விமானம் ராடார்படி விமானம் ஜாவா கடலில் 32,000 அடி தூரத்தில் பயணித்துக்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக பயணிகள் மற்றும் எங்கள் குழு உறுபினர்கள் குறித்த எந்த செய்திகளும் எங்களுக்கு ஈனும் கிடைக்க வில்லை என்றும் ஆனால் மிக விரைவில் எங்களுக்கு அனைத்து தகவலும் கிடைத்து விடும் என்றும் எதிபார்க்கிறோம். 

"AIR ASIA" " ஏர்பஸ் A320-200 பதிவு எண் PK- AXC இந்த கட்டத்தில் எங்களுக்கு "AIR ASIA" நிறுவனம் தேடுதல் மற்றும் மீட்ப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் மலேசியா நாட்டின் விமான நிறுவனங்கள் ஒரு கடினமான ஆண்டு இறுதியில் இருந்து வருகிறது என்றும், தேசியக்கொடியை தாங்கி மலேசியா எர்லைன்ஸ் 2 விமானங்களை இந்த ஆண்டு தொலைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் இல்யாஸ். (All Rights Received)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)