முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லீம்களுக்கு மீண்டும் இதய சிறை --மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒரு தொகுதி --இஸ்லாமியர்களை இளிச்சவாயர்களாக பார்க்க விரும்பும் கருணாநிதி !!

சென்னை, மார்ச்.5–
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடு துறை, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொகுதி பங்கீடு: கூட்டணி தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை

LAST UPDATED ( TUESDAY, 04 MARC


விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
2–வது நாளான இன்று தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கலிபூங்குன்றன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து மற்றும் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தொகுதி பங்கீட்டை உறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)