முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஆண்மைக்குறைவும் -அதனை முறியடிக்கும் முறைகளும் !!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல் !! ஆண்கள் anaivarum கட்டாயம் படியுங்கள் !! +18

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.
விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.
ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.
ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

குஜராத் கலவர வேட்டைக்காரன் மோச்சியும்-உயிர்பிச்சை கேட்ட அன்சாரியும் ஒரே மேடையில் தோன்றிய அதிசயம்-- கேராளாவில் நிகழ்ந்த அபூர்வம் !!

2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரேமேடையில் தோன்றினார்கள்.
PEACE NOW: Qutubuddin Ansari (right) and Ashok Mochi, two faces of the 2002 Gujarat violence, at a function at Taliparamba in Kannur on Monday.
சங்க்பரிவார வெறியர்களுக்கு முன்னால் உயிர் பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடது கையில் சூலமும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் சங்க்பரிவார ஹிம்சையின் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்கள்.
பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் “இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்” என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
முஸ்லிம் இனப்படுகொலையின் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி மனம் வெதும்பி இறுதியில் சங்க்பரிவாரத்தின் துவேச அரசியலுக்கு எதிராக குரல் எழுப்ப முதன் முதலாக மேடையில் தோன்றியுள்ளார்.
வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் அபூர்வமான காட்சியை காண ஏராளமானோர் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
கலவரத்தின் அக்னிக்கு பதிலாக நேற்று அன்ஸாரிக்கு, மோச்சி சுகந்தம் மிகுந்த ரோஜாப்பூவை வழங்கினார். அன்றும், இன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் மோச்சி, செலவுகள் தாங்க முடியாததால் திருமணம் கூட செய்யாமல் இருக்கிறார். அவருடைய முகத்தில் பழைய கொடூரம் இன்று இல்லை. புன்சிரிப்புடன் காணப்பட்டார். மோச்சியின் வார்த்தைகளில் அன்பு கலந்திருந்தது. மனிதநேயத்தை விளக்க எந்த மொழியும் தடையில்லை என்று கூறி அன்ஸாரியை கட்டி அனைத்து மோச்சி கூறினார்.
மோச்சி மேலும் கூறும்போது; ‘இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும். இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையால் விழிப்புணர்வு பெற்ற நான் அதன் பிறகு யாருக்கும் வாக்கு அளிக்கவில்லை. எனது மனதில் உள்ள எதிர்ப்பை நான் தெரிவித்தேன். நான் என்னையே கொள்ளையடித்தேன். இனியாவது எனக்கு அதில் இருந்து விடுதலை வேண்டும்.’ என உரக்கக் கூறினார்.
குத்புதீன் அன்ஸாரி பேசும்போது; ‘இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும். கேரளாவின் அன்பு தாங்கமுடியாமல் தவிக்கிறேன். குஜராத் இன்று அமைதியாக உள்ளது. காரணம், மோடி பிரதமராக துடிப்பதே. வளர்ச்சியின் மந்திரங்களை அவர் கட்டவிழ்த்து விடுகிறார். அவ்வாறு குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் எனது மாநிலத்தவரான அசோக் மோச்சிக்கு செருப்பு தைத்து பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா?’ என்று கேள்வி எழுப்பிய அன்ஸாரி தனது உரையில் குஜராத் மோடியின் வளர்ச்சி என்ற மாயையை தோலுத்துக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஸஈத் ரூமி எழுதிய ‘நான் குத்புதீன் அன்ஸாரி’ என்ற சுய சரிதை நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு இடதுசாரி ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வேலூர் கிடைக்காத விரக்த்தியில் முஸ்லீம் லீக் -நெல்லையை நோக்கி நகர்கிறது பிறைகொடி -ராமநாதபுரம் மற்றும் திருச்சி தொகுதிகளை கேட்டு பச்சைக்கொடி விடாப்பிடி !!

சென்னை, மார்ச், 4–
இன்று நடந்த தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டனர். ஏற்கனவே 2 முறை அந்த தொகுதியை கொடுத்து இருப்பதால் இந்த முறை ராமநாதபுரத்தில் போட்டியிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதை முஸ்லிம் லீக் ஏற்கவில்லை.

இதையடுத்து திண்டுக்கல் தொகுதியையும் ஏற்கவில்லை. திருச்சியை கேட்டனர். அங்கு மாநாடு நடத்தியதால் விட்டுக்கொடுக்க தி.மு.க. விரும்பவில்லை என்று தெரிகிறது. பின்னர், நெல்லை தொகுதியை ஒதுக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, புதிய தமிழகம் கட்சி தென்காசியும், மனிதநேய கட்சிக்கு மயிலாடுதுறையும் ஒதுக்கப்படலாம் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி -மகிழ்ச்சியளிக்கவில்லை என காதர் மொஹைதீன் பேட்டி!!

சென்னை, மார்ச். 4–
தி.மு.க. நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. 40 தொகுதிகளுக்கு நடந்த நேர்காணலுக்கு 300 பெண்கள் உள்பட 1,500 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 887 பேர் நேரில் பங்கேற்றனர்.
நேற்று வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடந்தது. இது வரை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடத்திய நேர்காணலுக்கு வந்தவர்களின் தகுதி அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியல் தயார் ஆகி வருகிறது.
Prof. Kader Mohideen, president of the Indian Union Muslim League, confirmed that his party had received an invitation for talks. File Photo

நேர்காணலையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரை சாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன. இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவாலயத்திற்கு தனித்தனியாக வந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாநில தலைவர் காதர் மொய்தீன், பொது செயலாளர் அபுபக்கர், பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலேசனைக்குப்பின் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவாவது:–

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறது. இந்த முறை சிறுபான்மையினருக்கு 4 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் ஒரு தொகுதி ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். இதில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொண்டோம். வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, நெல்லை, திருச்சி ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறோம்.
இதில் எந்த தொகுதி என்பதை இன்று இரவு 7 மணிக்கு தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை எங்கள் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த சின்னத்தில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

11.30 மணிக்கு விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. கட்சித்தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 12.30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மாலையில் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நாளை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கூடி தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி; எந்த கட்சிக்கு என்ன தொகுதி என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)