முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் வெளுத்து வாங்கிய கன மழை-மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த பொதுமக்கள் !!

DSCF3554தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்ய வில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் பொது மக்கள் மழை பெய்யாதா என ஏங்கி கொண்டு இருந்தனர். விவசாயிகளும் மழை பெய்தால் பயிர்கள் புத்துயிர் பெறும் என்று மழையை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை மேகம் கூடி விட்டு மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. ஆனால் இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் சீர்காழி, தென்பாதி, சட்ட நாதபுரம் ஆகிய இடங்களில் காலை 4 மணி முதல் 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு ஆகிய இடங்களில் தூரல் மழை பெய்தது.
திருவாரூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களிலும் இன்று காலை மிதமான மழை பெய்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. காலை வரை மழை நீடித்தது. இதனால் மானவாரி நிலங்களில் சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. வேதாரண்யத்தில் 17.7 மி. மீட்டர் மழையும், தலை ஞாயிறில் 4.6 மி. மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
வேதாரண்யம் கடியபட்டினம் ரோட்டில் உள்ள மின் கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் உள்ள 5 வீடுகளில் மின் சாதன பொருட்கள் கருகி சேதமானது.
தஞ்சையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை லேசான தூறல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை தூறல் மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.DSCF3574
DSCF3560

DSCF3569


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)