முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சென்னையில் ஹெச் .ராஜா கொடும்பாவி கொளுத்திய SDPI -கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் !!

கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினரையும், சமூக தலைவர்களையும் அவதூறாக விமர்சித்து தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று (31-01-2014) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் T.ரத்தினம் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் துவக்க உரையாற்றி தொகுத்து வழங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாஜிம், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், விடுதலை சிறுத்தை கட்சியின் கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் சிபிசந்தர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜுனைது அன்சாரி , திராவிட இயக்கத்தின் வழ. துரை அருண் மற்றும் பி.யு.சி.எல் அமைப்பின் ராகவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா தனது உரையில் கூறும்போது, “தமிழகத்தில் நடந்த பல்வேறு மதக் கலவரங்கள், மோதல்கள் ஆகியவற்றின் பின்ணணியில் பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணியின் மத துவேஷ பேச்சுக்கள் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.



அந்த வகையில் தற்போது வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு வாக்குகளுக்காக சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் தமிழக மக்களிடையே மத துவேஷத்தை தூண்டும் வகையில் பாஜக வின் ராஜா பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களையும், முஸ்லிம்களை பற்றியும் அவர்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் அவர் பேசிய பேச்சுக்கள் மத துவேஷத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் சமூக நீதிக்கு வித்திட்ட தந்தை பெரியார் பற்றியும், அவரை தரக்குறைவாக பேசிய பேச்சுக்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சமூக நல்லிணக்கத்தை, பொது அமைதியை கெடுக்கும் வகையில் பேசியுள்ள பாஜகவின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது கணடிக்கத்தக்கது. ஆகவே காவல்துறை உடனடியாக மத துவேஷத்தை தூண்டிய பாஜகவின் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் முகம்மது ரஷீத்,பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ராயல் கரீம், திருவள்ளூர்மாவட்ட தலைவர் முகம்மது சலீம், செயலாளர் ஷேக் முகம்மது, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்முகம்மது பிலால், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக தென்சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் பல்லாவரம் அன்சாரி நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள்உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பேரூராட்சி வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் -வார்டு புறக்கணிப்பால் விரக்தி !!

தனது வார்டை புறக்கணிப்பதாக கூறி முத்துப்பேட்டை பேரூராட்சி வாசலில் நேற்று அதிமுக கவுன்சிலர் நாசர் பிச்சை எடுத்தார்.  முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் அருணாச்சலம்(அதிமுக) தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி,   துணை தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதும், சுயேட்சை கவுன்சிலர் பாவா பகுருதீன், பல்வேறு பணிகளுக்கு எம்.பி நிதி வந்துள்ளது. அது குறித்த விவரங்கள் ஏடி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதா என்று தலைவரிடம் கேட்டார். அதற்கு தலைவர், அனுப்பிவிட்டதாக கூறினார்.
மீண்டும் பாவா பகுருதீன் சீக்கிரம் அதற்கான வேலைகள் நடைபெறட்டும். அடுத்த முறை யார் எம்.பியாக வருவார்கள் என்று தெரியாது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுன்சிலர் பாவா பகுருதீன் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
13வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாசர், தனது வார்டுக்கு வளர்ச்சி திட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி, கையில் தட்டு மற்றும் வாசகம் அடங்கிய போர்டுடன் வந்திருந்தார். அவர், எனது வார்டை பேரூராட்சி தொடர்ந்து புறக்கணிக்கிறது.
20140131a_01310601101
இதனால் எனது வார்டு மக்கள் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி இல்லாமல் தவிக்கிறார்கள். அதனால் நான் ஏந்தி வந்திருக்கும் இந்த தட்டில் எனது வார்டில் அடிப்படை பணிகளை செய்ய உங்களால் முடிந்த நிதியை தாருங்கள் என்று தலைவரைப் பாரத்து தட்டு ஏந்தி பிச்சை கேட்டார். இதனால் தலைவருக்கும், கவுன்சிலர் நாசருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
பிறகு கவுன்சிலர் நாசர் கூட்டத்தைவிட்டு வெளியேறி, பேரூராட்சி வாசலில் நின்று தட்டு ஏந்தி அனைவரிடமும் பிச்சைக் கேட்டார். பா.ஜ. கவுன்சிலர் மாரிமுத்து, திமுக கவுன்சிலர்கள் ஜெய்புனிஷா, செல்வி தம்புசாமி, முஸ்லீம் லீக் கவுன்சிலர் தம்பி மரைக்காயர், சுயேட்சை கவுன்சிலர் பஜரியா அம்மாள் ஆகியோர் அந்த தட்டில் நிதி அளித்தனர்.
வாசலில் கவுன்சிலர் பிச்சைக் கேட்டு நின்றிருந்ததை அறிந்த திமுக கவுன்சிலர் ஜெகபருல்லா, காங்கிரஸ் கவுன்சிலர் மெட்ரோ மாலிக் ஆகியோர் பேரூராட்சி பின்பக்கம் சுவர் ஏறி குதித்து சென்றனர். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களும் கவுன்சிலர் தட்டில் சில்லரை காசுகளை போட்டனர்.
கடைசியில் ரூ.85 வசூல் செய்யப்பட்டதாக எழுதி, அதை பேரூராட்சி சுவற்றில் ஒட்டி விட்டு கவுன்சிலர் நாசர் சென்றார். இது குறித்து கவுன்சிலர் நாசர் கூறுகையில், எனது வார்டு மக்களுக்கு எந்த பணியையும் செய்து கொடுக்க முடியவில்லை. பலமுறை தலைவரிடம் கேட்டும் பயனில்லை.
இதனால் எனது வார்டு மக்கள், ஜமாத் நிர்வாகிகள் என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். இனிமேலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்தால் வருகிற 15ம் தேதி முதல் தினமும் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் 3 வருடங்களுக்கு தொடரும். அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு எனது வார்டில் வளர்ச்சி பணி செய்வேன் என்றார்.

பாஜக வை எதிர்க்க தயாராகும் சீமான் -40 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாராம் !!

பாஜக-வுக்கு எதிராக தீவிரமாக களம் இறங்க சீமான் முடிவு சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. 


விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களம் காண உள்ளது.


 இந்த கூட்டணியில் ஐக்கியம் ஆவாரா அல்லது தனி அணி காண்பாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு மிகவும் ரகசியமாக உள்ளது. இந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.


 இது குறித்து நாம் தமிழர் கட்சி முன்னணி தலைவர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் இலங்கை ராணுவம் அழிப்புக்கு காங்கிரஸ் கட்சி துணை போனது. அத்துடன் அதை திமுக தாங்கிப் பிடித்து. அதனால் தான் மக்கள், திமுகவையும், காங்கிரஸ் கட்சியையும் புறக்கணித்தனர். 


அதே போலத் தான் பாஜகவும் தமிழ் இன அழிப்பை வேடிக்கை பார்த்தது. மேலும், தேச விடுதலைத்தாக பாடுபடும் விடுதலைப்புலிகள் அமைப்பையும், தமிழ் அமைப்புகளையும் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பியமணியன் சுவாமி கேலி, கிண்டல் செய்கின்றார். மனம் புண்புடும்படி பேசுகின்றார்.

 இதை அகில இந்திய பாஜக தலைமை தட்டிக் கேட்கவே இல்லை. இவை எல்லாவற்றையும் விட, இந்தியாவுக்குள் இலங்கை அதிபர் ராஜபக்ஷே வரவே கூடாது என பலத்த எதிர்ப்பு இருந்த நிலையில், ராஜஸ்தானில் ராஜபக்ஷேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது அம்மாநில பாஜக அரசு தானே.

 அன்று தமிழக பாஜக அதை தட்டிக் கேட்டதா, இல்லையே. காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பெயர்கள் மட்டும் தான் வேறு வேறு. தமிழத்தில் காங்கிரஸ் கட்சி செத்துவிட்டது. அடுத்து தமிழர்களை ஏமாற்ற பாஜக புது புது கோஷங்களுடன் வலம் வருகின்றது.

 தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, தமிழர்களின் உண்மையான நலனில் பாஜகவுக்கு துளியும் அக்கறை இல்லை என்பதை மக்களுக்கு தெரிக்க வேண்டியது நமது கடமை. எனவே வரும் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்கின்றனர் ஆணித்தரமாக

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)