முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..


குவைத், ஜனவரி 29: குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு குவைத் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராதா (வயது 27) என்ற பெண் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் அங்கு வீட்டு வேலை செய்து வந்தார்.
பிரசவத்திற்காக ராதா தனியாக விமானத்தில் பயணம் செய்தார் விமானம் அதிகாலை 3.30 மணியளில் சென்னையை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது ராதாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அவர் வலியால் துடிப்பதை பார்த்து விமானப்பணி பெண்கள் பைலட்டிடம் கூறினர். அவர் உடனே சென்னை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இங்கு மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர்.
இதற்கிடையில் ராதாவிற்கு வலி அதிகமானது. அவரை விமானத்தில் கீழே படுக்க வைத்தனர். பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் உதவி செய்ய அவருக்கு சுகப்பிரசவம் ஆனது அதிகாலை 4.05 மணிக்கு நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, ராதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை கையில் எடுத்து துணியால் துடைத்து சுத்தம் செய்தனர்.
சிறிது நேரத்தில் விமானம் சென்னையில் தரை இறங்கியது. அப்பல்லோ மருத்துவ குழுவினர் தாயையும் சேயையும் பாதுகாப்பாக கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். விமானத்தில் குழந்தை பிறந்தததால் விமானப்பயணிகளிலும், பைலட்களும் பணிப்பெண்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
விமான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ராதா கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும்–குழந்தையும் நலமாய் உள்ளனர். ராதாவிற்கு குழந்தை பிறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌத்து அறிவிப்பு "N செய்து அஹமது"


முத்துப்பேட்டை, ஜனவரி 29: மரைக்காயர் தெரு மர்ஹும். நெய்னா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹசுபுள்ள மக்கீன், அஹமது கபீர் ஆகியோரின் சகோதரரும், சஜாத் அஹமது அவர்களின் தாய் மாமாவும், S. அப்துல் ஜப்பார், S. முஹம்மது இபுறாஹீம், S. முஹம்மது ரில்வான், S. நெய்னா முஹம்மது, S. முஹம்மது மர்சிக்கீன், S. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய  "N செய்து அஹமது" அவர்கள் இன்று இரவு 2:30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் குத்பா பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அறிவிப்பவர்:

ஹச்புல்லாமக்கீன் அஹமது கபீர் சகோதரர்கள்..

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)