முத்துப்பேட்டை, நவம்பர் 29: முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் கிராமத்தில் கடும் மழையால் குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த முத்துப்பேட்டை தமுமுகவினர் நகர தலைவர் அண்ணன் சம்சுதீன் தலைமையில் சென்று நேரில் பார்வையிட்டனர். அதன் பின் முத்துப்பேட்டை திரும்பிய தமுமுகவினர் அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் (ப்ரெட்,பிஸ்கெட்,பால் பவுடர்) மற்றும் பணம் ஆகியவைகளை திரட்டிக்கொண்டு மீண்டும் இரவு நேரம் என்று பாராமல் நகர தலைவர் அண்ணன் M.சம்சுதீன் (முன்னாள் மாவட்ட செயலாளர்) தலைமையில் இடும்பாவனம் சென்ற தமுமுகவினர் அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் சிறய அளவில் பணமும் 50 வீடுகளுக்கு வழங்கினர்.
இதில் நகர செயலாளர் M.M.சீமான், நகர பொருளாளர் A.தாவுதுஷா, மாவட்ட துணை தலைவர் A.அப்துல் அலீம், மா.மாணவரணி செயலாளர் பைசல், மருத்துவ அணி செயாலளர் நபீல் மற்றும் தமுமுக நகர தொண்டரணியினர் உடன் இருந்தனர்.
எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தும் முத்துப்பேட்டையிலிருந்து முஸ்லிம்கள் (தமுமுகவினர்) வந்து உதவுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று அம்மக்கள் கூறியபோது தமுமுகவினர் மக்கள் சேவையின் நலனை உணர்ந்தனர்.
ரிப்போர்ட்டர் இல்யாஸ்
1:23 PM
தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட முஸ்லிம்கள்!!
தீவிரவாத மதமாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாம்!!
இதனால் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்கள் இடைஞ்சல்கள் கணக்கில் அடங்காது!!
பொய்யய்யே திரும்ப திரும்ப சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை பின்பற்றி
முஸ்லிம்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட பொய்கள் ஏராளம்!!
இது அனைத்தயும் உடைத்து எறிந்து பொய்யை அம்பலப்படுத்தி
உண்மையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ட தவ்ஹித்ஜமாத் எடுத்த திட்டம்தான்
""தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்""
இது எதிர்பார்த்தைவிட அதிகமாக பிறமத சகோதரர்களிடம் போய் சேர்ந்து இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
1:25 PM
முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மிக அற்புதமாக நடைபெற்றது .சரியாக மாலை 6:30 மணிக்கு புதுப்பள்ளி இமாமின் கிராஅத் துடன் நிகழ்ச்சி தொடங்கியது .
அதனை தொடர்ந்து பைத்துல் மால் நிர்வாகி சலீம் பைத்துல் மாலின் அவசியம் குறித்து விளக்கி பேசினார் .பின்னர் முத்துப்பேட்டை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாஅத் நிர்வாகிகள் ,மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி பேசினர் .
இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் லியாகத் அலி அவர்கள் முத்துப்பேட்டை பைத்துல்மால் வழங்கிய ஆம்புலன்சை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அர்பணிப்பு செய்தார் .
ஆம்புலன்சின் சாவியை முத்துப்பேட்டை பைத்துல்மாலின் தலைவர் இலுமுல்லா சனுபர் பெற்றுகொண்டார் . முத்துப்பேட்டை பைத்துல்மாலின் பொருளாளர் மீரா உசேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . மாலிக் ரஹ்மான் நன்றியுரையாற்றினார் .
ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சியை காண முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் திரளாக குழுமி இருந்தனர் .இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற கொய்யா மஹால் மக்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் விழாக்கோலம் போல் காட்சியளித்தது .
இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு சாப்பாடு பரிமாறப்பட்டது .
கொய்யா மஹாலின் வெளிப்புறத்தில் முத்துப்பேட்டை பைத்துல்மால் வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுழல் விளக்கு எரியவிடப்பட்ட நிலையில் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன .இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்ததுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டனர் .
முத்துப்பேட்டையில் பைத்துல்மால் விருப்பு வெறுப்பற்ற ஒரு வலுவான மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டுமென்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றது .
தொகுப்பு :ஜே :ஷேக்பரீத்