4:16 PM
முத்துப்பேட்டையில் எதிர்வரும் 31-10-2014 வெள்ளியன்று முத்துப்பேட்டை பைத்துல் மாலின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது
.கொய்யா மஹாலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் அனைத்து முஹல்லாவை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் ,மருத்துவ பெருமக்கள் ,இந்து கிறிஸ்தவ பெரியோர்கள் ,காவல்துறை அதிகாரிகள் ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் .
முத்துப்பேட்டை பைத்துல்மாலின் நிர்வாகிகளான மீரா உசேன் ,இல்முல்லா சனுபர்,சலீம் ,நைனா முஹம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் .
5:53 PM
முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த 19-10-2014 அன்று மாற்று மதத்தவருக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தியது .
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு மாற்று மத சகோதரர்கள் எழுப்பிய இஸ்லாம் சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் .
இதில் ஏராளமான இந்து சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கேள்விகளை முன்வைத்தனர் ,இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நகர நிர்வாகிகள் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
12:40 PM
முத்துப்பேட்டை அருகே துளசியாப்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது அசாலின் .இவரது இளைய மகன் அப்துல் ரவூப் .வயது 12.இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயின்று வருகிறார் .
இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான துளசியாப்பட்டினத்திளிருந்து முத்துப்பேட்டைக்கு வருவதற்காக பேரூந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார் .அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு அந்த வாகனத்தில் இருவரும் வந்துள்ளனர் .
தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று இவர்கள் இருவரையும் வழிமறித்து தங்களது கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாள் ,இரும்பு குழாய் ,கத்தி ,போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு மூர்கத்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
காட்டுமிராண்டிகளின் கொடூர தாக்குதலில் சிறுவன் அப்துல் ரவூபின் மண்டை இரண்டாக பிளந்துள்ளது .மண்டையில் பலத்த காயம் அடைந்த அப்துல் ரவூப் என்கிற சிறுவன் சம்பவ இடத்திலேயே சுய நினைவின்றி மயங்கி விழுந்துள்ளார் .
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளனர் .பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிருக்கு போராடிகொண்டிருந்த சிறுவனை முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் .
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவன் அப்துல் ரவூபை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .அங்கு சிறுவன் அப்துல் ரவூபுக்கு தலை அறுவைசிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர் .
தஞ்சையில் இருக்கும் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் ஆசிரியர் ஜே .ஷேக்பரீத் அவர்கள் இச்சம்பவத்தை அறிந்தவுடன் உடனடியாக சிறுவன் அப்துல் ரவூப் அனுமதிக்கப்பட்டுள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார் .சிறுவனின் நிலை குறித்தும் மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார் .பின்னர் அங்கு இருந்தசிறுவனின் குடும்பத்தாரிடமும் ஆறுதல் கூறினார் .
4:26 PM
இன்று ஹஜ் சங்கமம் நிறைவு !
உலக முழுவதும் ஹஜ் கடமையை நிறைவேற்ற 20 லட்ச இஸ்லாமியர் மக்காவுக்கு வருகை தந்தார்கள் .
இவர்கள் அனைவரும் ஹஜ்கடமையை நிறைவேற்ற மினா அரபா முஸ்தலிபா
போன்ற இடங்களுக்கு ஒட்டுமொத்த ஹாஜிகளும் ஓன்று கூடுவார்கள் .
இந்த இடங்களில் ஹாஜிகளுக்கு வழிதடங்கள் தடுமற்றம் , மற்றும் உடல் நிலை
பாதிக்கப்பட்ட ஹாஜிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்தியா உள்ள இஸ்லாமிய
அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா,முஸ்லிம் லீக் , தமுமுக , கேரளா
சார்ந்த ஏ பி முஸ்லியார் அவர்களின் ஜமாத் ,கேரளா முஜாதீன் ஜமாத் , ஆகியோர்
உறுப்பினர்கள்.
ஐந்து நாட்கள் முழ நேரம் ஒய்வுயில்லாமல் ஹாஜிகளுக்கு உதவி செய்தார்கள் இதை
பார்த்த சவுதி ஹஜ் அமைச்சகம் அந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கு நன்றி தொிவித்து உள்ளனர் .
3:08 PM
நடிகை நயன்தாரா மன அமைதி பெறுவதற்காக தமது ஆசிரமத்துக்கு வருமாறு நித்யானந்தா ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாம்.
ஏற்கனவே நயன்தாரா காதல் விஷயங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவருக்கு முதல் காதல் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது காதலும் கைகூடவில்லை. இதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.
கதாநாயகர்கள் சிலர் இவருடன் நெருக்கமாக நட்பு வைத்துக்கொள்ள நெருங்கியும் அவர் பிடிகொடுக்கவில்லை. முழு கவனமும் சினிமாவிலேயே இருக்கிறது. நிறைய படங்களில் பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் ஏமாற்றங்களால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவுக்கு மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்கு வந்து மன அமைதி பெறுங்கள் என்று அழைத்துள்ளனர்.
நயன்தாரா கிறிஸ்தவராக இருந்தாலும் காதலுக்காக இந்து மதத்துக்கு மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நித்யானந்தா ஆசிரம பக்தர்களின் அழைப்பை நயன்தாரா இதுவரை ஏற்கவில்லையாம்.
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை புதுதெரு ASN திடலில் சரியாக 7.30 மனியளவில் நடைபெற்றது
நபிவழியில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுகவேண்டும் என்பதை அதிகமான மக்கள் விளங்கிவருவதால் மக்கள் கூட்டம் வருடா வருடம் அதிகரித்து வருகிரது
சுன்னத்தான முறையில் வனக்க வழிபாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மிக தெளிவாக புரிந்து கொண்டதால் பக்கத்தில் ஏசி வசதியோடு பள்ளிவாசல்கள் இருந்தும் காலையில் இருந்தே மைக் மூலம் அழைத்தும் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தவ்ஹித்ஜமாத் நடத்தும் திடல் தொழுகைக்கு சாரைசாரையாக வந்து குவிந்தனர்
தாயி ராஜிதீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் தெளிவாகவும் சுருக்கமாகவும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ் அதேபோல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை ரஹ்மத் நகர் நடுமில் திடலில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் திருத்துறைப்பூண்டி மாலிக் அவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை பற்றி எடுத்துரைத்தார். ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர்
அக்டோபர் 06: மர்ஹூம் ஹபீப் முகம்மது அவர்களுடைய மகனும், திருச்சி அப்துல் ரஹீம், அவர்களுடைய சகோதரரும், H.M.R. ஹபீப் முகம்மது, சகோதரர்களுடைய தகப்பனாரும், இதயத்துல்லா, முஸ்தாக், இவர்களுடைய மாமனாரும், வின்னர்ஸ் பள்ளி தாளலரும், HMR. என்கின்ற. “ஹாஜி ரஷிதுகான்” ஆசிரியர் (வின்னர்ஸ் மெட்ரிகுலேசன் ஸ்கூல். ஆலங்காடு. முத்துப்பேட்டை) அவர்கள் காலை 11.30 மணியளவில் கல்கேணித் தெருவில் இருக்கும் அவர்கள் இல்லத்தில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல். KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
துபாய், அக்டோபர் 04: ஈத் பெருநாள் உலகெங்கிலும் நேற்று (04-10-14) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. துபாய், கத்தார், குவைத், சவுதி அரேபியா, போன்ற நாடுகளில் பணிபுரியும் முத்துப்பேட்டை இளைஞர்கள் மிகவும் உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடினர் பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டு அகமகிழ்ந்தனர்.
வாழ்த்துக்களுடன் ...
ஜே : ஷேக் பரீத்
A : முஹம்மது இலியாஸ் MBA ,
(MA .JOURNALISM & MAASS COMMUNICATION)
உங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் தொடர்புக்கு :
0091-7200-11-6852, 00971-55 786 5516