10:20 AM
நம்மை ஆதரிக்கும் பல்வேறு வணிக பெருமக்கள் ,தொழிலதிபர்கள் ,வியாபாரிகள் ஆகியோரின் தொடர் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஏற்று இன்ஷாஅல்லாஹ் விரைவில் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்தில் விளம்பர பகுதியை கொண்டு வர உள்ளோம்.இதில் அனைத்து தொழில் சார்ந்த விளம்பரங்கள் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ,அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் விளம்பரங்கள் ,உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களும் இடம் பெற உள்ளது .விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் .செல் ;7200116852,
email:fareedfareed123@gmail.com
7:38 PM
தஞ்சாவூரில் வாய் பேச முடியாத முஸ்லிம் பெண்ணை நான்கு அயோக்கியர்கள் கற்பழித்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த முழு விவரங்கள் பின் வருமாறு....
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீத், இவருடைய மகள் பானு (32) மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை குடும்பம்)
இவரை நேற்றுமுன்தினம் 4 பேர் கொண்ட காமவெறியர்கள் காரில் கடத்திச் சென்று ஒரத்தநாடு பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பானுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுதிரனாளி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு தஞ்சை கீழவாசல் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களிடம் உறுதி கூறியதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கை விட்டனர்.
மேலும் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் பானுவின் உறவினர்கள் புகார் மனுவும் அளித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
3:51 PM
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா ஆவணப் பட வெளியீடு
நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வடபழனி RKV ஸ்டுடியோ வில் எழுச்சியுடன்
நடைபெற்றது!
ஆறு மணி முதல் மக்கள் வந்து குவியத் தொடங்கி மஹ்ரிபு தொழுகையை கூட்டாக அங்கேயே நிறைவேற்றிய பின்னால் நிகழ்ச்சி துவங்கியது!
அரங்கம் நிரம்பி கூடுதல் இருக்கைகள் போடப்பட்டும் போதாமல் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கொண்டே பார்த்தனர்!
சுமார் ஒரு மணி நேரம் விறுவிறுப்பான காட்சிகளுக்கு பின் தேநீர் இடைவேளை!
படம் ஏற்படுத்திய தாக்கத்தில் இடைவேளை க்கு பின்னும் கூட்டம் குறையவில்லை!
எந்த குத்துப்பாட்டோ சினிமா நட்சத்திரங்களோ இல்லாத ஒரு ஆவணப் படத்துக்கு
இவ்வளவு ஆரவார வரவேற்பா ? என திரையுலகினர் வியந்தனர்!
அல்ஹம்து
லில்லாஹ்!
இயக்குனர்கள் அமீர் ஆர.கே செல்வமணி, ராஜ ராஜன்,
ஜெயமணி, சிபி சந்தர் ஆகியோரது உரைக்கு பின்னால் தமஜக ஷரீப், CMN சலீம்,
தமுமுக அப்துல் சமது ஆகியோர் உரை நிகழ்த்தினர்!
நிகழ்ச்சியின் முடிவில் ஆவணப் படத்தின் குறுந்தகட்டை இயக்குனர் அமீர் வெளியிட திருமா பெற்று கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்!
இந்நிகழ்ச்சியில், திரையுலகினர் பத்திரிகை நண்பர்கள், மற்றும் இஸ்லாமிய
அமைப்புகள் மற்றும் தஃவா குழுக்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்!
நிகழ்ச்சியில் ஏராளமாக
வந்து
இருந்த முஸ்லிம் அல்லாத சொந்தங்களுக்கு தஃவா டெஸ்க் அமைத்து திருக்குர்ஆன்
தமிழாக்கம் , இஸ்லாம் குறித்த நூல்கள் வழஙகப்பட்டது! அல்ஹம்து லில்லாஹ்!
ஆவணப் பட டிவிடி தொடர்புக்கு
இப்ராகிம் காசிம்- 9043940103
டிவிடி மொத்தமாக தேவைப்படும் வெளியூர் அன்பர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் அனுப்பி பெற்று கொள்ளலாம்!
Bank : SBI Bank
A/c No : 33528766040
Branch : Mannady
Name : Ibrahim Kasim
1:31 PM
இன்ஷா அல்லாஹ் முத்துப்பேட்டையில் கொய்யா கார்ஸ் எனப்படும் ஓர் புதிய கார் ஷோரூம் விரைவில் உதயமாக உள்ளது .முத்துப்பேட்டை ஆலங்காடு ECR அருகே திறக்கப்பட உள்ள கொய்யா கார்ஸ் ஷோரூம்,திறப்பு விழாவிற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன .
இது தொடர்பாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்திற்கு பேட்டியளித்த கொய்யா கார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் உரிமையாளர் கண்ணியத்திற்குரிய A .முஹம்மது சாதாத் அவர்கள் ,தங்களிடம் அனைத்து வகையான உயர்ரக கார்களும் கிடைக்கும் என்று கூறினார் .
மேலும் அனைத்து வகையான USED CARS வாங்குவதற்கும் விற்பதற்கும் தங்களை அணுகலாம் என்றும் கொய்யா A .முஹம்மது சாதாத் அவர்கள் கூறினார் .
தொடர்புக்கு :கொய்யா A . முஹம்மது சாதாத் -9659981181
9:18 PM
முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் நடத்திய விநாயகர் ஊர்வலத்தையொட்டி இஸ்லாமியர்கள் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது .பின்னர் முத்துப்பேட்டையில் ராசிக்பரீத் மற்றும் நவாஸ்கான் ஆகியோருக்கு சொந்தமான களஞ்சியம் ரெடிமேட்ஸ் மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி சேதப்படுத்த முயற்சித்தனர் .
இதனை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முத்துப்பேட்டை வர்த்தகர் சங்கத்தினர் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர் .இதனால் முத்துப்பேட்டையில் அனைத்துகடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன .
இதனை கண்ட பொதுமக்கள் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம் ஜி ஆர் .மறைவுக்கு பின் ஒட்டுமொத்தமாக கடைகள் அடைக்கபட்டிருப்பதாக கூறினார் .