முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லிம்கள் தேசிய அரசியலை முன்னெடுக்கவேண்டும்!” – துபையில் நடந்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி விழாவில் வேண்டுகோள்!







துபாய், டிசம்பர் 28: பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி (ICS) துபையில் நேற்று (26.12.2014) நடத்திய மாபெரும் கருத்தரங்கில் அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் வலசை ஃபைஸல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

“தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு வெற்றிடமாகவே உள்ளது. ஹிந்துத்துவாவின் கட்டாய வெறுப்பு மற்றும் திணிப்பு அரசியலை உணர்ந்து உறுதியுடனும், விவேகத்துடனும் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என்று அவர் தனது சிறப்புரையில் கூறினார்.

முன்னதாக துபை மண்டல பொது செயளாலர் பத்ர் ஜமான் வரவேற்புரை நிகழ்த்தினார். அமீரக தமிழ் பிரிவு தலைவர் நிழாம் தலைமையுரை ஆற்றினார். துபை மண்டல தலைவர் சுஹைல் யூசுஃப் முன்னிலை வகித்தார்.

அடுத்து, சிறப்புரையாற்றிய ICS-யின்அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் அவர்கள் தனது சிறப்புரையில் மேலும் கூறியதாவது:
இந்தியாவை ஒருமைப்படுத்தியது முஸ்லிம்கள். இந்தியாவுக்கு முஸ்லிம்கள் செய்த சேவையைச் சொல்வதென்றால் இது ஒன்று போதும். இந்தியா என்னும் நாட்டை உருவாக்கவும், இந்திய விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரும் பாடுபட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆதிக்க சக்திகளுக்கெதிராக விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் முஸ்லிம்கள். அப்படி தியாகம் செய்துள்ள முஸ்லிம்களின் நிலை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மிகுந்த பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த உரிமைகள் கூட இன்று இல்லை. இந்நிலையை மாற்ற முஸ்லிம் சமுதாயம் அரசியல் தளத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்று நாம் போராடுகிறோம், கவலைப்படுகிறோம்.

ஆனால் இந்நிலைக்கு முக்கிய காரணம் அரசியல் தளத்தில் நாம் வலுவாக கால் பதிக்காததே. அரசியலில் வலுவாக காலூன்றிய சமூகங்கள் எல்லா துறைகளிலும் முன்னேறியுள்ளன. அது இல்லாத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ளனர்.

இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகள் என்பது தமிழக அளவிலுள்ள பிரச்னைகள் மட்டும் அல்ல. நாம் அந்தக் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளை நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். வடநாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ளது. அவர்கள் சேரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதில் அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). துவங்கிய குறைந்த காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக SDPI வளர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் நம்பிக்கையாக எஸ்.டி.பி.ஐ திகழ்கின்றது.

பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலை சமூகம் உணர்ந்து வீரியத்துடன் நமது உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொடர்ந்து ஆக்கபூர்வமான, தன்னலமற்ற அரசியல் பணிக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி தனது முழு பங்களிப்பையும் கொடுக்கும்.

இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ICS-ன் உறுப்பினர் சேர்க்கை படிவம் வெளியிடப்பட்டது. அதில் அமீரக தலைவர்கள் முன்னிலையில் திரளாக மக்கள் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியில் இணைந்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ICS-ன் கர்நாடக மாநில பொது செயலாளர் ஸஹீருல் ஹக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக, அமீரக செயலாளர் அபுல் ஹஸன் அவர்கள் நன்றியுரையை நவின்றார். கலந்துகொண்டவர்கள் ICS-ன் நிர்வாகிகளிடம் கைலாகு கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் இல்யாஸ்... 

சிங்கபூர் விமானம் Air Asia இன்று தொடர்பை இழந்து வலி தவறியது. 162 பயணிகள் மாயம்...


 
சிங்கப்பூர், டிசம்பர் 28: இந்தோனோசியாவில் இருந்து இன்று காலை 7 மணிக்கு சிங்கபூருக்கு புறப்பட்ட "Air Asia" விமானம் சரியாக 7.24 லோக்கல் நேரம் Air Asia விமான குழுவினரின் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றால் அதில் பயணித்த பயணிகளின் விபரமும் இன்னும் தெரியவில்லை. மேலும் இது குறித்த செய்தியை Air Asia நிறுவனத்தின் FACE BOOK பகுதியில் எங்களிடம் இருந்து விமானம் கட்டுப்பாட்டு தொடர்புக்கு வெளியில் சென்று விட்டது என்று விமான என்: QZ8501 Airbus A320-200 குறிப்பிட்டுள்ளது. விமானம் காலை சரியாக 8:30 மணிக்கு சிங்கப்பூர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை அந்நாட்டு தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது அதன் விபரம், 157 இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்றும், 3 சவுத் கொரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 1 சிங்கபூர், 1 மலேசியன் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

"AIR ASIA" விமானம் தொடர்பு இழந்தபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வளையத்தில் விமானம் ராடார்படி விமானம் ஜாவா கடலில் 32,000 அடி தூரத்தில் பயணித்துக்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக பயணிகள் மற்றும் எங்கள் குழு உறுபினர்கள் குறித்த எந்த செய்திகளும் எங்களுக்கு ஈனும் கிடைக்க வில்லை என்றும் ஆனால் மிக விரைவில் எங்களுக்கு அனைத்து தகவலும் கிடைத்து விடும் என்றும் எதிபார்க்கிறோம். 

"AIR ASIA" " ஏர்பஸ் A320-200 பதிவு எண் PK- AXC இந்த கட்டத்தில் எங்களுக்கு "AIR ASIA" நிறுவனம் தேடுதல் மற்றும் மீட்ப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் மலேசியா நாட்டின் விமான நிறுவனங்கள் ஒரு கடினமான ஆண்டு இறுதியில் இருந்து வருகிறது என்றும், தேசியக்கொடியை தாங்கி மலேசியா எர்லைன்ஸ் 2 விமானங்களை இந்த ஆண்டு தொலைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் இல்யாஸ். (All Rights Received)

மவுத்து அறிவிப்பு: "மைமூன் சரீபா அம்மாள்"


முத்துப்பேட்டை, டிசம்பர் 26: முத்துப்பேட்டை தென்னை மரைக்கடைத் தெரு மர்ஹூம் பி.மு.முஹம்மது அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், (பைப்படி மரைக்காயர்) என்கின்ற மர்ஹூம் L.M.M. முஹம்மது அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பி.மு. முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரியும்,  L.M.M. முஹம்மது காசிம் மரைக்காயர் அவர்களின் தம்பி மனைவியும், A. முஹம்மது முஹைதீன், அன்வர் அலி, (பாட்சா கட்டி) என்கிற OM. காதர் பாட்சா, P. ஹாஜா முஹைதீன் ஆஹியோரின் மாமியாரும், ராஜீஸ் கான், ஹாஜா மைநூர்தின், J. சேக் பரீத் இவர்களின் தாயாருமாகிய மைமூன் சரீபா அம்மாள் அவர்கள் இரவு 1 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள்.  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா நேற்று (26.12.2014) மாலை 4:30 மணியளவில் நமது குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அறிவிப்பவர்:
ஹாஜி, A. முஹம்மது மைதீன்.

மேலும் தொடர்புக்கு:

J. ஷேக் பரீத் :7200116852
ஹஜா மைநூர்தீன் (துபாய்) : 00971 5539 80 838  

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி துபாயில் நடத்தும் மாபெரும் பொதுக் கூட்டம்...

துபாய், டிசம்பர் 24: இன்றைய அரசியல் நமது பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற 26.12.2014 நாள் வெள்ளிக்கிழமை. இடம் மலபார் ஹோட்டல் தேரா துபாய். தலைமை முஹம்மது நிழாம். அமீராக தலைவர் தமிழ்நாடு, முன்னிலை சுகைல் யூசுப், துபாய் மண்டல தலைவர். சிறப்புரை வலசை ஃபைசல், அமீரக பொதுசெயலாளர் தமிழ் மாநிலம், இதில் இந்திய அரசியலையும் இன்றைய சூழ்நிலைகளையும் அறிந்து முன்னேற்ற பாதையை நோக்கி முன்னேறி  ஒன்றிணைவோம் என்று அனைத்து நண்பர்களையும் அழைக்கிறது இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி. அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
இப்படிக்கு: 
துபாய் மண்டல துணைத் தலைவர் பத்ரு ஜமான் 

இன்றைய நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள்..!!


அதிரை, டிசம்பர் 22: ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது.அதன் பின் ஒன்றுமே இல்லை. அவன் இறந்த பின் மண்ணோடு மன்னாகிறான், என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,பாவம்,புண்ணியம், என்று எதற்கும் பயப்பட தேவை இல்லை. ஆனால் மனிதன் இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.அது முடிவற்றது.வாலிப வயதில் ஒரு மனிதனின் பங்கு,பெரும் சோதனைக்கு உரியது.இந்த வயதில் தான் ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுகிறது. அல்லது மாற்றப்படுகிறது. ஒரு இளைஞன் தன் வாலிப வயதில் எவ்வாறு சகமனிதர்களுடனும், தோழர்களுடனும், பழகுகிறானோ அவ்வாறு தான் அவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடுகிறது. 

ஆடை இல்லா மனிதன் அறை மனிதன் என்பது பழமொழி. நல்ல நண்பர்களை தேடுவதை விட நீ நல்ல நண்பனாய் இரு, கட்டாயம் உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.., என்று ஓர் அறிஞர் சொன்னார். அனால் இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை. இன்றைய இளைஞ்கர்கள் தன் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை கிண்டல் செய்தும், சிகரெட் பிடித்து கொண்டும்,போதை தரும் பாக்குகளை உபயோகித்தும் வருகின்றனர். அதிலும் சில இளைஞர்கள் மட்டுமே தங்களை தவறான வழியில் செல்லாமலும், தவறான நண்பர்களுடன் சேராமலும், அவர்களே அவர்களை, பாதுகாத்து வருகின்றனர். 

இஸ்லாத்தின் நற்குணங்களான பொய், புறம்,நம்பிக்கை மோசடி, பெருமை, தீய எண்ணம், கோபம், மது, சூது, லஞ்சம், திருட்டு, போன்ற இன்னும் பலவற்றினை ஒரு முஸ்லிம் அறவே விட்டொழிக்க வேண்டும். அனால் இன்று எத்தனை பேர், எத்தனை இளைஞர்கள் விட்டொழிக்கிகிறார்கள்.? சற்று நடு நிலையோடு சிந்தித்து பாருங்கள்..! இன்றைய நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் பத்து மாதம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற தாயை அடித்து, துன்புறுத்தியும், பாசமாக வளர்த்த தந்தையை வீட்டை விட்டே விரட்டிக்கொண்டும், தவறான நண்பர்களுடன் சேர்ந்து தெரு ஓரங்களில் சிகரெட், மது, போன்ற தவறான பழக்கங்களிலும் ஈடுபடுகிறார்கள். நமது தோல் வலிமையில் தான் நாம் சம்பாதிக்கின்றோம் என்று எண்ணிவிடக்கூடாது. தோல் மூலம் நாம் ஒன்றும் சாதித்து விட முடியாது. கை, கால்களை இறைவனே கொடுத்தான். 

இதனால் தான் அவனது ஆணைப்படி உழைக்கின்றோம். அனால் இந்த உழைப்பு ஒன்றும் தந்து விட முடியாது. தரக்கூடியவன் அல்லாஹ் தான். எனவே நாம் நன்மையின் வழியையே தேர்ந்தெடுக்க வேண்டும். அனால் இன்றைய நிலையில் எத்தனை பேர் இந்த நம்பிக்கையில் இருக்கின்றோம்?  "முத்துக்கு சொந்தக்காரர்களாய் சஹாபா பெருமக்கள்.! அனால் சிப்பியாய் இருக்கக்கூட தகுதியற்றவர்கள் நாம்.! பூக்கடை மலர்களாய் அவர்கள்.! சாக்கடை புழுக்களாய் நாம்".! ஏனிந்த முரண்பாடுகள்? எப்படி வந்தது.? இதை பற்றி நாம் சிந்தித்தோமா? இதைப்படித்து விட்டு ஒருகட்டூரையை படித்தோம் என்று எண்ணி கொண்டு தூங்கிவிடுவீர்களாயின், நெடுந்தூக்கம் தூங்கிய பின் இறைவன் எழுப்புவானே..! அப்பொழுது விழித்து இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும். 

ஆகவே கேள்வி கணக்கு கேட்கும் நாளை மறுமையில் சுவனம் செல்வதற்கு,நாம் செய்த குற்றங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்.. அன்புள்ள சகோதர, சகோதரிகளே.! நெடுந்தூக்கம் வரும் முன் நாம் அனைவரும் விழித்துக் கொள்வோம்..! இதோ உங்களுக்கு,குறிப்பாக என்னைப் போன்ற வாலிப வயது இளைஞர்களுக்கு 5 கேள்விகள்;- இந்த நிமிடம் உங்கள் மரணம் வந்தால் மறுமையில் உங்கள் நிலை என்ன? நீங்கள் மறுமைக்காக சேர்த்து வைத்தது தான் என்ன? நீங்கள் அடைந்த இந்த இஸ்லாத்தை உங்கள் வாழ்கையில் எத்தனை பேருக்கு எடுத்து சொன்னீர்கள்? உங்கள் வாழ்க்கை நபி (ஸல்) அவர்கள் சொன்னபடி அமைந்துள்ளதா? ஒரு நாளில் எத்தனை முறை மறுமைக்கு அஞ்சுகிறீர்கள்? இந்த 5 கேள்விகளுக்கும் நாம் சரியானவரா என்று சிந்தியுங்கள்..! இளைஞர்களே..! தடுமாறும் இந்த வாலிப வயதில் தடம் மாறாதீர்கள்.! 

நமது இணையதளத்திற்கு எழுதி அனுப்பிய கட்டுரை:

நன்றி: S.அப்துல் வஹாப் BBA., அதிரை.

மவுத்து அறிவிப்பு: KMS.சேக்ஜி என்கிற ஜோதிடர் சேக்தாவூது.


முத்துப்பேட்டை, டிசம்பர் 22: மர்ஹீம் மு.க.காதர்மைதீன் அவர்களுடைய மகனும், KM.ரஹ்மத் அலி, KM.தாஜ்தீன்(TJ), MMA .ஜலால், இவர்களுடைய சகோதரரும், அதிரை சாகுல் ஹமீது அவர்களுடைய மாமனாரும், L.ஜெயிலானிடைய தாய் மாமாவும், S.முகம்மது இதிரீஸ், S.முகம்மது இக்பால், இவர்களுடைய தகப்பனாருமாகிய "KMS.சேக்தாவூது" அவர்கள் காலை 6:30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). 



அன்னாரின் ஜனாஸா நாளை காலை முகைதீன் பள்ளியிவாசால் மையவாடியில் நல்லடக்கம் 
செய்யப்படும் என அறிவிக்கிறார்கள். 

அறிவிப்பவர்: KM. ரஹ்மத் அலி சகோதரர்கள்.


MMA.ஐலால்.
Cell: 97 88 52 60 85 .

முத்துப்பேட்டையில் பராமரிப்பின்றி காணப்படும் பங்களாவாசல் பேரூந்து நிறுத்தம் !!

முத்துப்பேட்டை பஸ் நிறுத்தம் என்றாலே ,அது சட்டென்று நினைவுக்கு வருவது பங்களாவாசல் தான். ஏன் என்று சொன்னால் முத்துப்பேட்டையின் மைய பகுதியில் அமைந்துள்ளது இந்த 
பங்களா வாசல். 

முத்துப்பேட்டையிலிருந்துசெல்லும்பேரூந்துகள்   பட்டுக்கோட்டை ,செல்வதாக இருந்தாலும் சரி,அல்லது அதிராம்பட்டினம் ,மதுக்கூர் செல்வதாக இருந்தாலும் சரி இந்த பங்களா வாசல் பேரூந்து நிறுத்தத்தில் நின்று விட்டுதான் செல்ல வேண்டும் .

அதே போல் பட்டுக்கோட்டை ,அதிராம்பட்டினத்திளிளிருந்து வரும் பேரூந்துகள் நாகப்பட்டினம் செல்ல வேண்டுமானாலும் சரி ,திருத்துறைபூண்டி அல்லது வேதாரண்யம் செல்ல வேண்டுமானாலும் சரி பங்களா வாசல் பேரூந்து நிறுத்தம் வழியாக தான் செல்ல முடியும் . 

இது ஒரு புறம் இருந்தாலும் ,தங்களது வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் குறிப்பாக பெண்கள், இந்த பங்களா வாசல் நிறுத்தத்திலிருந்து புறப்படுவதையே பெரும்பாலும்  விரும்புகின்றனர் .ஏன் என்று சொன்னால் எந்த வித தொந்தரவுகளும் ,கூட்ட நெரிசல்களும் இல்லாமல் அமைதியாக இருப்பதனாலும் ,குறிப்பாக பெண்கள் நின்று செல்வதற்கு பாதுகாப்பாக இருப்பதினாலும் இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர் .

கடந்த திமுக ஆட்சியில் 12 லட்ச மதிப்பீட்டில்பேரூந்து நிறுத்தம்  கட்டப்பட்டு,அதை  பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் .இந்நிலையில் இந்த பேரூந்து நிறுத்தமானது, தகுந்த பராமரிப்பின்றி இருப்பதால் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது .

மேலும் தெருவில் நடமாடும் விலங்குகள் அசுத்தம் செய்வதால் ,மிகவும் அருவருப்பாக சுத்தமின்றி காட்சியளிக்கிறது .இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இந்த இடத்தில் நிற்பதை தவிர்த்து வருகின்றனர் .

இதனால் கொளுத்தும் வெயில் காலங்களிலும்  அல்லது கடும் மழை காலங்களிலும் பேரூந்து நிறுத்தத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .

எனவே தகுந்த பராமரிப்பின்றி சிதிலமடைந்து அசுத்தமாக காட்சியளிக்கும் பங்களா வாசல் பேரூந்து நிறுத்தத்தை உடனடியாக மறு சீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அந்த வார்டு உறுப்பினரும் திமுக பிரதிநிதியுமான ஜனாப் . ஆட்டோ ஜபருல்லாஹ் அவர்களையும் ,பேரூராட்சி தலைவரும் அதிமுக பிரதிநிதியுமான  திரு .கோ .அருணாச்சலம் அவர்களையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் அன்போடு கேட்டு கொள்கிறது .

குறிப்பு :இந்த பிரச்சினையை  தமுமுக ,மமக ,TNTJ ,SDPI ,PFI ,முஸ்லீம் லீக் ,INTJ உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கையில் எடுத்தால் உடனடியாக தீர்வு காணலாம் என்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் கோருகிறது .

ஆட்டோ ஜபருல்லா -9750223019    (வார்டு உறுப்பினர் )
கோ .அருணாச்சலம் -9842160292   (பேரூராட்சி தலைவர் )

தொகுப்பு :ஜே :ஷேக் பரீத் 




முத்துப்பேட்டையில் வெளுத்து வாங்கிய கனமழை -குளிரை ஏற்படுத்தும் குளுகுளு காட்சிகள் !!

முத்துப்பேட்டை டிச-18
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் நேற்று காலை 10-மணிமுதல் இரவு வரை தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்ந்துக்கொண்டே இருந்தது. இதனால் முத்துப்பேட்டையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகஅளவில் காணாமல் வெறிச்சோடி இருந்தது. அதுபோல் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படும் குமரன்பஜார், நியூபஜார், திருத்துறைப்பூண்டி சாலை மற்றும் ஆசாத்நகர் போன்ற பகுதிகள் மக்கள் நடமாற்றம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.


பாகிஸ்தானில் மனிதமிருகங்கள் நடத்திய கோர தாக்குதல் -முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் கடும் கண்டனம் !!

பெஷாவர்,

தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூர மான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தது, உலகையே உலுக்கி உள்ளது.

இதுபற்றிய தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பதாக அமைந்துள்ளன.

தற்கொலைப்படை தீவிரவாதிகள்

பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ஒரு மயானமும் உள்ளது. அந்த மயானத்தின் வழியாக, ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு புகுந்த அவர்கள், மறுநிமிடமே இலக்கின்றி, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள்.

ஒவ்வொரு வகுப்புக்கும் அவர்கள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். தொடர் துப்பாக்கிச்சூடு காரணமாக அந்த பகுதியே அதிர்ந்தது. எங்கும் குண்டு வெடிப்பும், மரண ஓலமும், கூச்சலும் கேட்டது.

தேர்வு எழுதிய மாணவர்கள்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில், பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். பள்ளிக் கூடத்தில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் உஷார் ஆனார்கள். மாணவர்களை, தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டு, வகுப்பறையில் தரையில் படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறினார்கள்.

134 பேர் கொன்று குவிப்பு

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சம்பவ பகுதியை சுற்றி வளைத்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருப்பினும், இந்த கொடூர தாக்குதல்களில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறின. ஆனால் 134 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு வானொலி அறிவித்தது. இவர்களில் 132 பேர் குழந்தைகள், ஒருவர் ஆசிரியை, மற்றொருவர் பள்ளிக்கூட காவலாளி. குழந்தைகளைப் பறிகொடுத்தோரின் கதறல், கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்தது.

பலி உயரும்?

245 பேர் படுகாயம் அடைந்து, மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனாலும், பலரது நிலைமை கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.

6 தீவிரவாதிகளும் பலி

தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார்.

மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை ஆனார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 140 ஆகும்.

ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்

உலக நாடுகளில், சமீப காலத்தில் நடந்த தாக்குதல்களில் அதிபயங்கரமான தாக்குதல் இதுதான் என்றும், குழந்தைகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இதுதான் என்றும் கருதப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் கடும் கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கண்டனம் தெரிவித்ததுடன், நிலைமையை நேரில் ஆராய்வதற்காக பெஷாவர் விரைந்தார். இதே போன்று ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப்பும் அங்கு விரைந்தார். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தலீபான்கள் பொறுப்பேற்பு

இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தலீபான்கள் உடனடியாக பொறுப்பேற்றனர்.

இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தற்கொலைப்படையினர் 6 பேர் இந்த தாக்குதல்களை நடத்தினர். வடக்கு வாஜிரிஸ்தானில் போராளிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கிற நடவடிக்கைக்கு பழிக்கு பழிவாங்கத்தான் (ராணுவ பள்ளிக்கூடத்தை குறி வைத்து) இந்த தாக்குதல்கள். எங்கள் வலியை, வேதனையை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்” என கூறினார்.

நேரில் பார்த்தவர்கள் பேட்டி

பள்ளிக்கூடத்தின் அருகில் வசிக்கும் ஷாகுப்தா என்ற மாணவி, “பள்ளிக்கூடத்தில் 2 குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. முதல் குண்டுவெடிப்பை விட இரண்டாவது குண்டு வெடிப்பு சத்தம் பலமாக இருந்தது” என்று கூறினார். சுஜா என்ற மாணவர், “நாங்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிற சத்தம் கேட்டது. உடனே ஆசிரியர் எங்களை தேர்வு எழுதுவதை விட்டு விட்டு தரையில் படுத்துக்கொள்ளுமாறு கூறினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்படி தரையில் படுத்திருந்தோம். பின்னர் ராணுவ அதிகாரி வந்து கூறிய பின்னர்தான் எழுந்து வெளியேறினோம்” என்றார்.

மற்றொரு மாணவர், தீவிரவாதிகள் அதிநவீன துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதாக கூறினார். இன்னொரு மாணவர், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நீளமான தாடி வைத்திருந்தனர், சல்வார் கமீஸ் அணிந்திருந்தனர் என கூறினார்.

மனித கேடயங்கள்

முதலில், ராணுவத்தின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கத்தில் மாணவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து, மனித கேடயங்களாக பயன்படுத்தினர்.

சம்பவத்தின்போது பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக தப்பிய மாணவர்களில் ஒருவர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, “முதலில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு ராணுவ அதிகாரி எங்களை பின்புற வாயில் வழியாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் வெளியேறி விட்டோம்” என்று கூறினார்.

3 நாள் துக்கம்

தீவிரவாதிகள் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் தேசிய துக்கத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார். பெஷாவரில் நிருபர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரையில், தீவிரவாதத்துக்கு எதி

ரான போர் ஓயாது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என கூறினார்.

இந்த தாக்குதல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் மற்றும் உலகத் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பழிக்கு பழி

பாகிஸ்தானில் பெஷாவரையொட்டியுள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இங்குள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களும், பாகிஸ்தானின் போர் விமானங்களும் கடந்த 6 மாதங்களாக நடத்தி வருகிற வான்தாக்குதல்களில் தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு பழிக்கு பழிவாங்கும் விதத்தில்தான் தலீபான் தீவிரவாதிகள் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதல்களை நடத்தி, உலகையே நடுங்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



பொதக்குடியில் மாநாடாக மாறிய மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம் !!!

திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 14.12.2014 அன்று அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.1000க்கு மேற்பட்டோர் பங்கேற்று இப்பொதுக்கூட்டத்தில் மமக சட்டமன்ற குழு தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA,மமக பொது செயலாலர் தமிமுன் அன்சாரி,மாநில செயற்குழு உறுப்பினர் Dr.சர்வத்கான் உள்ளிட்டோர் உரையாற்றினார்.

இதில் மமக மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,பொதக்குடி தாஜுதீன்,நாச்சிகுளம் தாஜுதீன்,தஞ்சை கலந்தர்,மமக மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான்,மமக மாவட்ட செயலாளர் சீனி.ஜெகபர் சாதிக்,மமக மாநில செயற்குழு உறுப்பினர் குத்துபுதீன்,மமக பொருளாளர் ஹக்,பொதக்குடி கிளை தலைவர் சாகுல் ஹமீது,முன்னால் மாவட்ட தலைவர் பொதக்குடி நூர்தீன்,அத்திகடை யாக்கத் அலி,மன்னை கமால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக அன்று மாலை 5 மணிக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் உடன் மமக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் கூத்தாநல்லூர், அத்திகடை, தண்ணீர்குனம், பூதமங்கலம் ஆகிய ஊர்களில் மமக கொடி ஏற்றும் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது.
அன்று மதியம் மலேசிய மண்டல துணை தலைவர் பொதக்குடி தாஜுதீன் அவர்களின் இல்ல திறப்பு விழாவில் மமக சட்டமன்ற குழு தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA,மமக பொது செயலாலர் தமிமுன் அன்சாரி,மமக மாநில அமைப்பு செயலாளர் மெளலா நாசர்,மமக மாநில அமைப்பு செயலாளர் மதுரை மைதீன் உலவி,தமுமுக மாநில செயலாளர் பேரா.ஹாஜா கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



ஜே :ஷேக் பரீத் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)