சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள சகோதரர் இல்லத்தில் தங்கி இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் சகோ ஜே .ஷேக்பரீத் நேரில் சந்தித்தார் .
பல்வேறு பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுமார் 5 நிமிடங்கள் வரை பொறுமையாக நமது ஆசிரியரிடம் ஜெகன் மோகன் பேசினார். அப்போது பேசிய நமது ஆசிரியர், ஒரிங்கினைந்த ஆந்திராவை கட்டிக்காக்க நினைக்கும் நீங்கள் மதவாத சக்திகளான பாஜக வுடன் கைகோர்க்க கூடாது என்றும், தெலுங்கானா விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கூறினார்.
உங்களை நரேந்திர மோடி சந்தித்ததாக அறிந்தோம் என்றும் மோடி நாட்டின் பயங்கரவாத முகம் என்றும் கூறினார். சிரித்துக்கொண்டே உங்கள் பெயர் என்ன என்று கேட்ட ஜெகன் ஷேக் என்று பதில் கூறியவுடன், தோளில் தட்டிகொடுத்த படி உங்கள் எண்ணம் நிறைவேறும் என்று கூறினார் .
செய்தி :கீழக்கரை :ஹசன்
புதுக்கல்லூரி மாணவர்