சென்னை, அக்டோபர் 21: திரைத்துறையில் "வீரப்பனாக "வீர வசனம் பேசி தனது கம்பீர குரல் மூலம் அத்துனை பேரையும் மிரட்டி போட்டவரும் ,வில்லன்களை எல்லாம் புரட்டி போட்டவரும் ,வில்லன்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தையும்,தனி முத்திரையையும் பதித்தவர் .விமர்சனங்களுக்கு பஞ்சமில்லாதவர் .வில்லத்தனத்தை சினிமாவில் மட்டுமல்ல ,நிஜவாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் .வில்லன் போன்றே நடை உடை பாவனைகள் உடையவர் .முரட்டுத்தனத்தை தனது மூல தனமாய் கொண்டவர் .தனது பஞ்ச் டயலாக் மூலம் வில்லன் கேரக்டருக்கே ஒரு தனி அடையாளத்தை கண்டுபிடித்தவர் .இத்தனைக்கும் சொந்தக்காரர் யார் தெரியுமா ?
அவர்தான் நடிகர் மன்சூர் அலிகான் :
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி எடுப்பதற்காக கடந்த ஒரு மாத காலமாக தொடர் முயற்சிகள் எடுத்தோம். ஒவ்வொரு முறையும் நாம் தொடர்பு கொண்ட போது,வெவ்வேறு ஊர்களில் படுபிஸியாக ஷூட்டிங்கில் இருப்பதாக கூறினார் மன்சூர் அலிகான் .
ஹஜ் பெருநாள் அன்று நமது அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது .அந்த அழைப்பில் "ஈத் முபாரக் பாய் "இன்று மதியம் என் வீட்டில் உங்களுக்கு ஒட்டக பிரியாணி விருந்து வந்துடுங்க என்று கரடு முரடான ஒரு குரல் ஒலித்தது .திடுக்கிட்ட நாம் யாரென்று அறிய முற்பட்டோம் .
பின்னர் நாந்தான் மன்சூரலிகான் பேசுறேன் என்று "கேப்டன் பிரபாகரன் "படத்துல "பச்சபுள்ள நிலாவ புடிக்க ஆச படறமாதிரி நீ என்ன புடிக்க ஆசைபடுற "என்ற வசனத்திற்கு பின் சிரிப்பது போல நம்மிடம் ஐந்து நிமிடத்திற்கு குறையாமல் வில்லத்தன சிரிப்புடன் பேச துவங்கினார் .அன்போடு விருந்தை தவிர்த்த நாம் ,இரவில் வந்து சந்திப்பதாக உரிதியளித்தோம்.அடைமழையையும் பொருட்படுத்தாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது பங்களாவிற்கு நேரில் சென்று சந்தித்தோம் .நம்மை அன்போடு வரவேற்ற மன்சூர் ,தனது பங்களாவின் மேல் தளத்திற்கு அழைத்து சென்று நாம் கேட்ட பல சூடான கேள்விகளுக்கு வில்லத்தனமாக பதிலளித்தார் .
பதில் : என்னோட சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி .
கே : உங்களின் பள்ளி படிப்பு பற்றி ?
பதில் : நான் பள்ளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்புவரை படித்துள்ளேன் .
கே : நீங்கள் சினிமாவிற்கு வர காரணம் யார் ?
பதில் : எனது அண்ணன் முஹம்மது அலிதான் காரணம் .
கே : உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி ?
பதில் : ஒரு நாள் எங்கள் ஊரில் ரவுடிகள் மாமூல் வசூலித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது மாமூல் கொடுக்க மறுத்த ஒரு இஸ்லாமிய பெரியவரின் கழுத்து சட்டையை பிடித்து 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் மிரட்டிகொண்டிருன்தனர். இதனை கண்ட நான் அந்த நான்கு பேரையும் துரத்தி துரத்தி, ஓட ஓட விரட்டியடித்தேன். இந்த சம்பவத்தை நீண்ட நேரம் உற்று கவனித்த ஒரு நபர், என்னை கூப்பிட்டார் ,பின்னர் சென்னையில் இந்த முகவரிக்கு வந்து சந்திக்குமாறு கூறினார் .நான் அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது அவர்தான் ஆ.செ.இப்ராஹிம் ரவுத்தர்னு .நீ சினிமாவில் வில்லனாக நடிப்பாயா எண்டு கேட்டார் .அதற்க்கு தயங்கியபடி நான் எப்படின்னு இழுத்தபடி நின்றேன் . உன் முரட்டுத்தனமும் ,மூர்க்கத்தனமும் வில்லனுக்கு பொருத்தமாக இருக்கும் என்றவர் அடுத்து நான் தயாரிக்கும் படத்தில் நீதான் வில்லன் ,அடுத்த மாதம் ஷூட்டிங் என்று கூறிவிட்டு சென்று விட்டார் .
கே : மன்சூரலிகான் வீரப்பன் ஆனது எப்படி ?
பதில் : புரட்சிகலைஞர் விஜயகாந்தின் 100-ஆவது படமான "கேப்டன் பிரபாகரன் "படத்தில்தான் நான் வீரப்பன் ஆனேன் .நான் நடித்த இந்த வீரப்பன் கேரக்டர் தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது .இந்த படம் பல வெற்றிகளை அள்ளித்தந்தது .ஏன் இன்னும் சொல்ல போனால் விஜயகாந்த்திற்கு "கேப்டன் "என்ற அடைமொழி சொல் வந்ததே கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பின்னர்தான்
கே : முத்துப்பேட்டை தெற்கு தெரு நண்பர்களை பற்றி ?
பதில் : என் சகோதரர்கள். துணிச்சலானவர்கள். வீரமிக்கவர்கள். இறக்க குணமுடையவர்கள். எனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் வைத்து என்னை அழகு பார்த்தவர்கள்.
கே : பாபர் மசூதி இடிப்பு பற்றி ?
பதில் : இது நாட்டில் நடந்த மிகவும் கேவலமான செயல் .மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட சவால் .நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் ,இந்த மா பாதக ,தேசவிரோத ,செயலை செய்ய வந்த அத்துனை பேரையும் சுட்டு தள்ளியிருப்பேன் .சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருப்பேன் .
கே : பாபர் மசூதி இடிப்பை கண்டித்து நீங்கள் நடத்திய போராட்டம் பற்றி ?
பதில் : கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பை கண்டித்து சென்னையில் உள்ள கவர்னர் மாளிகை முன் நான் என் குடும்பத்தாருடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டேன் .
கே :நீங்கள் ஒரு பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக கூறப்படுகிறதே ?
பதில் : இது முழுக்க முழுக்க ஜோடிக்கபட்டவையாகும் .என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும் .
கே : தமுமுக தலைமையகத்திற்கு நீங்கள் நேரில் சென்றது பற்றியும் -அரசியல் ஆர்வம் பற்றியும் ?
பதில் : நான் தமுமுக ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவன் .பழனி பாபா படுகொலைக்கு பின் பாமக விலிருந்து வெளியேறினேன் .பின்னர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனியில் போட்டியிட்டு ஒரு லட்சம் ஓட்டுக்கள் எடுத்தேன் .ஆதிமுக வில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன் .திருமாவளவனிடம் நெருக்கமாக இருந்திருக்கிறேன் .கடந்த பாராளுமன்ற தேர்தலில் டி.ராஜேந்தர் கட்சி சார்பில் திருச்சியில் போட்டியிட்டேன் .இதற்காகத்தான் தமுமுக தலைமையகம் சென்று ஆதரவு கேட்டேன் .ஆனால் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை .
கே : உங்களை SDPI கட்சியினர் அழைத்தால் ?
பதில் : அப்படி அழைத்தால் பாப்போம். ஆனால் அது நடக்காது.
கே : குஜராத் கலவரம் பற்றியும் -பாஜக வின் பிரதமர் வேட்பாளர் மோடி பற்றியும் ?
பதில்; இந்தியாவில் நடந்த மிகவும் கொடூரமான மனித படுகொலை அது நிறைமாத கர்ப்பிணியை சூலாயுதத்தால் குத்து சிசுவை எடுத்து, எரியும் நெருப்பில் வீசினார்கள். இதற்க்கு காரணம் நரேந்திர மோடிதான். நரேந்திர மோடியை தூக்கில் போட வேண்டும்.
கே : நரேந்திர மோடி இஸ்லாமியர்களை நாய் என்ற வர்னிதுள்ளாரே ?
பதில் : ஏங்க திருடன் என்னா செய்வான் .அடுத்தவன பார்த்துதான் திருடேன்பான்.அதே போல் மோடி பிறரை நாய் என்று கூறினால் இவர் யாராக இருக்க முடியும் ? இவ்வாறு பதிலளித்தார் .
சந்திப்பு :ஜே :ஷேக்பரீத்