முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சிறுவனின் கண்ணை குருடாக்கிய சமூகவிரோதிகள்...





சென்னை, புதிய தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள ரிச் தெரு(ரேடியோ மார்க்கெட்)விற்கு பின்புறம் உள்ள ஜாமியா தஜ்வீதுல் குர்ஆன் என்ற பெயரில் மதரசா இயங்கி வருகிறது.அதில் வடநாட்டு சிறுவர்கள் மார்க்க கல்வி பயின்றுவருகின்றனர்.

இன்று(1.10.13)மாலை 4.30 மணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லியை தொடர்பு கொண்ட ரிச் தெருவில் உள்ள வியாபாரி அலி பிகாரை சேர்ந்த மார்க்க கல்வி பயிலும் ஒரு சிறுவனின் கண்ணை நேற்று(30.9.13)சமூக விரோதிகள் கிரிக்கெட் ஸ்டெம்ப் மூலம் குருடாக்கிவிட்டதாகவும்,குற்றவாளிகளை இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நிலைமையை அறிந்து கொள்வதற்காக மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லி தலைமையில் விரைந்தோம்.மதரசா நிர்வாகிகள் மற்றும் பாதிக்கபட்ட மாணவனின் தந்தை ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் நம்மை வருத்தமடைய செய்தது.நேற்று மாலை 4.00 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு சரியாக ஒரு நாள் ஆகியும் இதுவரை எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்பதுதான் அந்த வேதனையான விஷயம்.

தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மாணவனின் தந்தைக்கு தைரியம் கொடுத்து புகார் கொடுக்க சம்மதிக்க வைத்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தமுமுக நிர்வாகிகளுடன் மாணவனின் தந்தையை புகார் கொடுக்க அனுப்பிவிட்டு,மதரசா நிர்வாகிகளுடன் மருத்துவமனை சென்றோம்.

சிகிச்சை பெற்றுவரும் மாணவன் நம்மிடம் கூறியதாவது:"எனது பெயர் முஹம்மது சபீர்(வயது:15)நான் நேற்று வழக்கம் போல் மார்க்க கல்வி படித்து விட்டு மாலையில் மதரசாவிற்கு பின்புறம் உள்ள மே தின பூங்காவில் கிரிக்கெட் விளையாடினோம்.அப்போது பக்கத்து சேரியில் உள்ள சிலர் எங்கள் மீது கிரிக்கெட் ஸ்டெம்ப் மூலம் தாக்கினார்கள்.அதில் ஒருவன் என் கண்ணை குத்தி குருடாக்கிவிட்டான் அவனை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன்" என்றான்.

ஒரு சம்பவம் நடைபெற்ற உடன் புகார் அளிப்பது முதன்மையான கடமை என்று உணர்ந்து கொள்ளவேண்டும். காவல்துறை தரப்பில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)