முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குவைத்தில் உள்ள முக்கிய நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது.


குவைத், ஆகஸ்ட் 14: குவைத்தில் உள்ள TISSUE பாக்ஸ் உற்பத்தி நிறுவனம் குவைத்தில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. 

CLIENT INTERVIEW  END OF AUGUST 2013 AT OFFICE IN MUMBAI: 
Needed Candidates from India only.
Good Salary + Daily OVERTIME + Room. NO FOOD.

(1) Printing Operator:- Printing to print the paper for tissue or any other
HEIDELBERG, ROLAND ULTRA, ROLAND ULTRA (UV), UV New, KOMORI.

(2) C&C Operator:- Cut the printed paper as the tissue size or other size
BOBST, BOBST (Nova Cut 106-E), Foil Stamping and Die Cutting Machine (Manual), ASEA (Manual)

(3) Operator (f&g):- Folding and Gluing. fold the tissue box and glue it
BOBST (DOMINO 100-M), VEGA 550, WP.

(4) Lamination:- SF (NSF – 145H), Knife Rotating Simple Cutting M/C, Type – QZS-145.

(5) Mechanic:- for Forklift & Cars (Priority for Forklift) should handle both task (Best knowledge required)

................................................................................................................................................

HELPERS – 25 நபர் தேவைப்படுகிறது.
Client Interview in Mumbai  - End  of August 2013.

Salary: Basic 70 KD
Today 1 Kd  = 214 Rupees.
Overtime: DAILY.
Room: FREE
Transport: FREE
Food: NOT PROVIDED

Qualification:- 10th Passed.
Passport: ECNR Must.
Qualification certificates & Marksheets required.

 Flight from MUMBAI only.

1.விண்ணப்பிக்கும் நபரின் பெயர், வேலையின் பெயர் மட்டும் subject என்ற இடத்தில் TYPE செய்து அனுப்பவும்.

2. தயவுசெய்து, நாங்கள் கேட்காத வேலைகளுக்கு விண்ணப்பிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

...................................................................................................................................................
Leading Carton Company – Kuwait

Machine Operator :- 5 Nos.

Qualifications :-
Educations :  minimum two year technical college diploma , in the field Mechanical or Electrical .
Language :  English ( writing and reading ) .
Age :  25 – 30
Work experience :  work for minimum 3 years as machine operator in converting cartons factory , knows how to operate all type of converting machines such as :
Rotary Die cut machines .
Flexo folder glue machines, preferably in high graphic printing machine .
Auto stitch and Glue Machine.
Flatten Die cut machine.
Folder gluer machine (crush lock & corner gluer)
Computerized sample making machine .
Knowledge of quality control , motivate labors , communication skills .
Preference to : Computer skill : knowledge to use computer , prefer with Photo shop skills .

PLEASE NOTE:-

1.Resume should be prepared only word format.
2.Dont attachments any certificates . If we required you may send later.
3. Passport size photo must be attached in Cv on the right side corner.
4.Your Name & Post only mention in the subject line.
5.Home address & Mobile number should be mentioned in the CV.
6.Min.3-5 Years exp. Candidates will be called for final interview.

குறிப்பு :- SPONSER இண்டெர்வியூ - க்கு மும்பை வர விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் .எங்கள் அலுவலகம் மும்பையில் மட்டுமே உள்ளது.வேறு கிளைகள் எங்கும் இல்லை.

தங்களுடைய பயோ டேட்டாவை CV யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கவும். தங்களுடைய தகுதியின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.

தொடர்புக்கு:

Interested& Suitable candidates may contact immediately :-
ABDUL SALAM. KUWAIT: 00965 670 96 257
SMS TEXT FROM INDIA: 88 705 44 801 (SMS Only)
EMAIL: asalam_12@yahoo.com
source from: www.muthupettaiexpress.blogspot.com.
நமது நிருபர்:

அப்துல் சலாம் குவைத்.

கலவரத்திற்கு காவல்துறைதான் காரணம்.! முத்துப்பேட்டையில் த.மு.மு.க. தலைவர் பேட்டி...







முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினருக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட மோதலால் பெரும் கலவரம் வெடித்தது. கடைகள் போலிஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தினர் இந்த சம்பம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பானது. இந்த நிலையில் முத்துப்பேட்டை கலவரப்  பகுதியை பார்வையிடவும் மக்களை சந்திக்கவும் வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ரிஃபாயி நிருபர்களிடம் கூறியதாவது. 

முப்பது நாட்கள் நோன்பு இருந்து அமைதியான முறையில் மிக சந்தோசமாக ரம்ஜானை கொண்டாடிக்கொண்டிருந்த வேலையில் முத்துப்பேட்டையில் சில விசமிகள் கலவர செயலை உருவாக்கி பெருநாளை நாசம் படுத்த்திவிட்டனர். அனைத்து தரப்பு மக்களும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் பா.ஜ.க. ரம்ஜானை சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கிவிட்டது. இதற்க்கு காவல்துறை உடந்தையாக செயல் பட்டிருக்கின்றன. அன்று நடந்த பா.ஜ.க. பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி இல்லை என்று காவல் துறை கூறுகிறார்கள். ஆனால் காவல்துறை பாதுகப்போடுதான் சட்டத்தை மீறிய செயல் நடந்துள்ளது. ரம்ஜான் முதல் நாள் மூன்று பேர் ஒரு பைக்கில் சென்ற முஸ்லிம்களை கைது செய்த போலிஸ் மறுநாள் பலபேர் மூன்று நபராக சென்றபோது ஏன் கைது செய்யவில்லை? டி.எஸ்.பி. பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகிய இருவரும் நினைத்து இருந்தால் இந்த கலவரத்தை தடுத்து இருக்கலாம். பிரச்சனைக்கு உரிய பகுதியில் முன்கூட்டியே பாதுகாப்பு போட்டு இருக்கலாம்.

இவர்கள் பா.ஜ.க. வின் முருகானந்தத்திர்க்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். காவலர் இவர்கள் செய்த சதிதான் கலவரத்தில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம் 160 பேர் மீது வழக்கும் பா.ஜ.க வின் 50 பேர் மீது வழக்கு ஒருதலை பட்சமாக காவல்துறை செய்து இருக்கிறது. போட்டி ஊர்வலம் சென்றதை கட்டிக்கிறேன். அந்த அளவுக்கு ஏன்? காவல்துறை இடமளிக்கிறது? ரம்ஜான் தொழுகை புனிதமான ஒன்று அதனை கூட காவல்துறை வீடியோ எடுத்து கலவரத்தை தூண்டுகிறது. 

டி.எஸ்.பி. பாஸ்கரன் தொடர்ந்து முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இவரைப்பற்றி உயர் அதிகாரி கவனத்திற்கு கொண்டு சேர்க்க இருக்கிறோம். என்றும் தனது பேட்டியில் கூறினார். ஒரு பிரச்சனை என்றால் வியாபாரிகள் மத்தியில் மிகப்பெரிய அச்சமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்பொழுது காவல்துறை செயல்பாடுகளை பார்த்தல் அடுத்த மாதம் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் கலவரத்தை ஏற்படுத்தி ஊரில் அமைதியை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி இருப்பது போல்தேருகிறது. இனிவரும் காலங்களில் காவல்துறை ஒருதலைமட்சமாக நடந்து நியாயமான நடவடிக்கைக்கு தவறும் பட்சத்தில் இளைஞர்களே சட்டத்தை கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்  என்றும் மேலும் தமது பேட்டியில் ரிஃபாயி இவ்வாறு தெரிவித்தார். 

நன்றி: MUTHUPETTAI  TMMK 


முத்துப்பேட்டையில் நடந்தது என்ன.? வெளிவராத பரபரப்பு காட்சிகளும் - செய்திகளும்:














முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே நாளில் பா.ஜ.க. கட்சியின் மாநில செயலாளர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகானந்தத்திற்கு பிறந்த நாள் என்றும், இவரது பிறந்த நாள் விழாவை சந்தை அருகே உள்ள SVK அன்பு திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்) இந்த பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. வின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்ததாகவும், மேலும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்டையிலிருந்து குட்டியார் பள்ளி வழியாகவும், தம்பிக்கோட்டையிலிருந்து புதுத்தெரு பள்ளிவாசல் வழியாகவும் பெருநாள் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், மேலும் ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகேயும் பட்டாசுகளை வெடித்து வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், இதை பார்த்த சில இஸ்லாமிய நண்பர்கள் இவற்றை தட்டிக்கேட்ட தாகவும் கூறப்படுகிறது.

மேலும் நேற்று இரவு இஸ்லாமிய நண்பர்கள் 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததற்கு போலிசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் இன்று பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக வருவதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

இதனிடையே பிரச்சனையை கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் 40க்கும்  மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றதாகவும், அப்போது அனைத்து  இளைஞர்கள் மீது போலிசார் லத்தி சார்ஜ் பண்ணியதாகவும், இதனால்  இளைஞர்கள் மீது காலில் பலமாக உள் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் ஆசாத் நகர் நாகூர் கனி என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)மேலும் காயல் பட்டினத்தை சேர்ந்த ஓர் இஸ்லாமியரை முத்துப்பேட்டை சந்தை அருகே வைத்து பா.ஜ.க. வினர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடையாளம் தெரியாத சில பேர் நான்கு கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி வர்த்தகம் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

"இந்நிலையில் அனுமதி இன்றி பேரணியாக வந்ததற்காகவும், வன்முறையை தூண்டும் வகையில் கோசங்களை எழுப்பியதற்காகவும், மக்கள் நடமாடும் பகுதிகளில் பட்டாசு மற்றும் சக்தி வாய்ந்த வெடிகளை வெடித்து பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்திய தற்காகவும், பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி  சரியாக மதியம் 3 மணியளவில் பாப்புலர் பிரண்ட் முத்துப்பேட்டை நகரத் தலைவர் அப்துல் மாலிக், SDPI கட்சியை சார்ந்த சர்தார், மற்றும் சேக் மைதீன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. மேலும் புகார் மனு அளிக்கச்சென்ற மூவரையும் காவல்நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக் தலமையில் பெரியக்கடைத் தெருவில் கூடினர். சிறை வைக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்யக்கோரி சரியாக 4 மணியளவில் SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக் தலமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சரிபா வாய்ஸ் முக்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் செய்த சற்று நேரத்தில் முத்துப்பேட்டையின் DSP தலமையில் காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு SDPI சித்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அரைமணி நேரத்திக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் சித்திக்கின் உத்தரவால் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் பெரிய கடைத்தெருவில் அதிக எண்ணிக்கையில் குழுமி இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக், முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க. வினர் நடந்து கொள்கின்றனர் என்றும், இப்போது நடத்தப்பட்ட இந்த பிறந்த நாள் விழா கொண்டாடும் சாக்கில் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க. வினர் சதி செய்வதாகவும் கூறினார். மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு விளக்கம் கேட்பதற்காகத்தான் காவல் நிலையம் சென்றிருந்ததாகவும் அப்போது அங்கிருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உன்னை போட்டு தள்ளிவிடுவேன் என்று என்னை மிரட்டியதாகவும்   செய்தியாளருக்கு பேட்டியளித்தார் சித்திக்.

பின்னர் சரியாக 6 மணியளவில் 10 பேர் கொண்ட குழு காவல் நிலையம் சென்றது. அப்போது மூவரும் விடுவிக்கப்பட்டு சரியாக 7:30 மணிக்கு பெரிய கடைத்தெருவிற்கு வந்தடைந்தனர். அப்போது அங்கே குழுமி இருந்தவர்கள் நாரே தக்பீர்.! அல்லாஹ் அக்பர்.! என்று கோசங்களை எழுப்பினர்.

பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய சித்திக், இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும், இது போன்று ஒற்றுமையாக செயல்பட்டால் தீய சக்திகளிடமிருந்து முத்துப்பேட்டை மக்களை பாதுகாக்கலாம் என்றும் கூறினார். சரியாக 20 நிமிடங்கள் சிற்றுரை யாற்றினார் சித்திக். பின்னர் அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

இந்நிலையில் அப்துல் மாலிக், சர்தார், சேக் மைதீன் ஆகிய மூவர் மீதும் காவல்துறை வழக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சித்திக் மீது 4 வழக்குகளும், பா.ஜ.க மாநில செயலாளர் முருகானந்தம் மீது 1 வழக்கும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதியின்றி வாகனப்பேரணி நடத்தியதற்காக SDPI கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீதும், பா.ஜ.கவை சேர்ந்த 60-க்கு மேற்பட்டோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தர்ஹா பாக்கர் அலி தலைமையில் மனித உரிமைகள் அமைப்பின் மாநில தலைவர் G .பஷீர் அஹமது ,மமக மாவட்ட செயலாளர் மாலிக் உள்ளிட்டோர் மாவட்ட SP யை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது .

மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே அனைத்து தொலைக்காட்சிகளிலும் முத்துப்பேட்டையில் பதற்றம் என பரபரப்பு செய்தியாய் வெளியிட்டது. தொலைகாட்சி செய்தியின் வாயிலாக சம்பவத்தை கேள்விப்பட்ட சமூக ஆர்வலரும், மனித நேயருமான பேராசிரியர். ஆ. மார்க்ஸ் அவர்கள், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சம்பவங்களை கேட்டறிந்தார். எனவே யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது பாராபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுத்து முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க வேண்டுமென முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில்  கேட்டுக்கொள்கிறது.

களத்தொகுப்பு: ஜே.ஷேக்பரீத்
                                 M.A.journalism & mass communication
                                  Member TamilNadu Press Club
                                   Chennai.



முத்துப்பேட்டையில் ஈகைப் பெருநாள் கொண்டாட்டம்: மகிழ்ச்சி வெள்ளத்தில் இஸ்லாமியர்கள்...










முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாகவும், கோலாகலமாகவும், கொண்டாடப்பட்டது. முத்துப்பேட்டையில் குட்டியார் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், ஆசாத்நகர் பள்ளிவாசல், TNTJ பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சரியாக 8:30 மணியளவில் அனைத்து முஹல்லா வாசிகளும் முஹல்லா  வாரியாக குட்டியார் பள்ளியை சென்றடைந்தனர். சரியாக 9:15 மணிக்கு குட்டியார் பள்ளியில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து முஹல்லாவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். 

தொகுப்பு:

EK. முனவர் அஹ்மத் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)