முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பட்டறை குளம் தூர்வாரும் பணியில் ஊழல்: திட்டத்தை கைவிட MMK, SDPI, VC ஆகிய கட்சிகள் கோரிக்கை.


முத்துப்பேட்டை, ஜூலை 14: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சி பராமரிப்பில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் நீர் ஆதாரமாக இருக்க கூடிய இந்த குளங்களில் வரும் வருமானம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள் கழிவு நீர் சூழ்ந்து குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனை ஆகிய அனைத்து கழிவுகளும் குளங்களில் கொட்டுவதால் அசுத்தமாக காட்சியளிக்கிறது. பல குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பால் குட்டைகளாக மாறி வருகிறது. 

பல குளங்கள் காணாமலும் போய் உள்ளது. இந்த நிலையில் நகரில் முக்கிய வீதியில் இருக்கும் பட்டறை குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் குளம் ஆறு போல் சாக்கடை தொட்டிபோல் மாறி காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இல்லாமலேயே போனது. சென்ற ஆண்டு இந்த குளத்தை தூர்வார 15 இலட்சம் செலவிடப்பட்டது. அதுவும் பொது மக்களுக்கு திருப்தியளிக்க வில்லை. பிறகு 5 இலட்ச ரூபாயில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அதுவும் பாலாகி அந்தரத்தில் தொங்குகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் குளத்தை முழுவதும் தூர்வாறி பயன்பாட்டிற்கு கொண்டு வர ரூபாய் 27 இலட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் மக்களுக்கு பயனில்லாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் பணி தொடராமலே கிடப்பில் கிடந்தது. இந்த நிலையில் அந்த நிதியைக்கொண்டு குளத்தை தூர்வாராமல் குளத்தின் கரை ஓரம் துப்புறவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டி மக்கள் வாக்கிங் செல்ல நடைபாதை டயல்ஸ் ஒட்டப்பட்டு நிறைவேற்ற பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து நேற்று பணியை துவக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் தடுத்தி நிறுத்தினர். 


இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் அவர்கள் கூறுகையில், ஏற்கனவே தூர்வாருகிறோம் என்ற பெயரில் மணலை எடுத்து விற்று கொள்ளை லாபம் அடைந்துவிட்டார்கள். மீண்டும் கொல்லையா? வேண்டவே வேண்டாம் என்றும், இந்த நிதி தற்பொழுது உள்ள குளத்தின் நிலைமையை முறையாக பராமரித்தாலே குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்றார். 


இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள், 27 இலட்ச ரூபாயை சொன்ன வேலைக்கு பயன்படுத்தாமல் பன்றிகள் நிறைந்து மலம் கழிக்கும் கருவைக் காட்டிற்க்குள் பொதுமக்கள் வாக்கிங் செல்ல நடைபாதை அமைக்க பயன்படுத்துவது பெரும் காமடியாக உள்ளது என்றும், காசு பார்க்கவே இந்த பணியை தொடர நினைப்பது கண்டிப்பிற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் குளத்தை முறையாக தூர்வாரி சுத்தம் செய்யாவிட்டால் எங்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார். 



இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் மகாலிங்கம் கூறுகையில், நகருக்கு நீர் ஆதாரம் விளங்கக் கூடிய இந்த குளத்தை இலாபகரமாக பார்க்காமல் மக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கின்ற குளத்தை அளவை வைத்து முறையான பணியை மேற் கொள்ளாவிட்டால் குளத்தின் நடுவே அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். 



தற்பொழுது குளத்தின் அளவு தனியார் ஆக்கிரமிப்பால் சுருங்கி இருந்தாலும் குளம் இயற்க்கை தோற்றத்திலிருந்து மாறவில்லை என்பது உண்மை. இந்த 27 இலட்ச ரூபாய் நிதியைக் கொண்டு குளத்தின் தூரை வாரி அந்த மணலை சுற்றுப்புறம் முழுவதும் அனைத்து கருங்கல் பிளேட் கொண்டு பரப்பி தளம் அமைத்து தடுப்புச்சுவர் கட்டப்பட்டால் கழிவு நீர் வடிவதை முழுவதும் தவர்க்கப்படலாம். அதன் மூலம் குளம் முழுவதும் சுத்தமாகி விடும். அதன் மூலம் குளம் மக்களுக்கு முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம் நகரில் வாழும் மக்களுக்கு நிலத்தடி நீர் சீராக கிடைக்கும் என்றார்கள் சமூக ஆர்வலர்கள். எனவே 27 இலட்சம் நிதியை கொண்டு குளத்தின் பராமரிப்புக்கு மட்டுமே செலவிடப்படுமா? முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம். 
source from: www.muthupettaiexpress.com

முத்துப்பேட்டையில் நாளை மத நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி...


முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை ஜாம்புவோனோடை தர்ஹா கமிட்டி சார்பில் மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, தமிழக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் இரா. காமராஜ் அவர்கள், தமிழக அரசு வக்பு வாரிய தலைவர் அ. தமிழ்மகன் உசேன், திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் கே. உலகநாதன், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். நாள்: 14-07-2013 மாலை 5 மணி, இடம்: முத்துப்பேட்டை ஜாம்புவோனோடை தர்ஹா.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டையில் பரபரப்பு குளம் தூறு வாராமல் வேறு பனி செய்ததை தடுத்து நிறுத்திய SDPI...







முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பேரூராட்சி பராமரிப்பில் குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பால் தூர்ந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில் நகரில் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பட்டறைக்குளம் சாக்கடை கழிவுநீரால் சூழ்ந்து ஆக்கிரமிப்புகள் நிறைந்து சாக்கடை குட்டையாக மாறியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு குளத்தை தூர்வார ஒதுக்கீடு செய்து தூர்வாரியதில் முறைகேடு நடந்ததாக குளம் தூர்வாரும் பனி நிறைவு பெறாமல் முடிந்தது. 

இந்த குளத்தின் தடுப்புச் சுவர் ஐந்து லட்சத்தில் கட்டியதும் தற்பொழுது சாதமாகி உள்ளது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த பட்டறை குளத்தை தூர்வார அரசு 27 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதில் சில குளறுபடி ஏற்பட்டதால் பனி தாமதமானது. இந்த நிலையில் ஒதுக்கப்பட்ட 27 இலட்ச ரூபாயில் தூர்வாரப்பட்டால் குளத்தின் துப்புறவு பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டி நடைபாதை அமைத்து டயல்ஸ் போட முடிவு செய்து பணியை நேற்று துவங்கினார். 

இதனால் பொது மக்கள் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் பனி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முத்துப்பேட்டை சோசியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக், மாவட்ட பொதுச் செயலாளர் நெய்னா முஹம்மது, நகரத் தலைவர் மைதீன், துணைத்தலைவர் நிஷார், செயலாளர் ஷேக் முகைதீன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சியின் பொறுப்பாளர்கள் பணியை தடுத்து ஜெ.சி.பி. இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேல் பேரூராட்சி பொறியாளர் முகம்மது ஆலிது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமூகம் ஏற்படவில்லை. இதனால் பணியை நிறுத்திவிட்டு ஜெ.சி.பி. இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கூறுகையில் இந்த திட்டம் வேண்டாம் என்று அமைப்பினர் கூறியதின் அடிப்படையில் பணியை நிருத்தியுள்ளோம் என்றார்.

மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த SDPI கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள், இந்த பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதனால் மக்கள் பணம் வீணாக சூறையாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு நல்ல முடிவை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு கடிதமும் எழுதி கொடுத்துள்ளோம் என்றும் அந்த கடிதத்தின் பதிலை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

தொகுப்பு:

ரிப்போட்டர் முகைதீன் பிச்சை   

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)