முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

டீ கடை பெஞ்ச் : தமுமுக - ஜெயலலிதா: மோதலின் பின்னணி என்ன?







சென்னை, ஜூலை 11: படித்ததில் பிடித்தும்! தெரியாத தகவலும்? பேரணிக்கு தடை ஏன்? சவுக்கு பார்வையில் ”தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தோட கோரிக்கைப் பேரணியை தடை பண்ணிட்டாங்களே.. ஏன் மச்சான் ? எவ்வளவு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. தப்பு இல்லையா ? ” என்று வருத்தப்பட்டான் அப்துல் காதர்  .

”அதிமுகவோட வாக்குகளையும் வாங்கி 2 எம்.எல்ஏ சீட்டுல ஜெயிச்சு, கனிமொழிக்கு ஆதரவு குடுத்தாங்களே அது தப்பு இல்லையா” என்றான்அப்துல் நாசர்  .


”என்னதான் ஆச்சு… ? ஏன் அனுமதி குடுக்கலை ? ” என்று கேட்டான் ஹபீபுல்லா  .

”அனுமதிக்காக வியாழக்கிழமை காலையிலேர்ந்து தமுமுக நிர்வாகிகள் கமிஷனர் அலுவலகத்துலயே காத்துக் கிடந்தாங்க. எப்படியாவது கமிஷனரை சந்திச்சுடனும்னு முயற்சி பண்ணாங்க. ஆனா, கமிஷனர் இருந்துக்கிட்டே இல்லன்னு சொல்லச் சொல்லிட்டாரு. அரசாங்கத்துலேர்ந்து, பேரணிக்கு அனுமதி குடுக்கக் கூடாதுன்னு உத்தரவு வந்துடுச்சு. ”

”இந்த அளவுக்கு ஏன் ஜெயலலிதா உறுதியான நிலைபாட்டை எடுத்தாங்க.. ? ”

”ஜெயலலிதா தமுமுக, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நினைக்கிறாங்க. பெரும்பான்மை இந்துக்களோட விரோதத்தை சந்திச்சுக்கிட்டு, விஸ்வரூபம் படத்தை இஸ்லாமியர்களுக்காக தடை செஞ்சு கெட்ட பேர் வாங்கிக்கிட்டேன். ஆனா, கனிமொழிக்கு ஆதரவு குடுத்து, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நெனைக்கிறாங்க”

”சரி.. அந்த ரெண்டு ஓட்டு ஜெயலலிதாவுக்கு அவசியம் இல்லையே.. ”

”அவசியம் இல்லதான்.. ஆனா அந்த ரெண்டு ஓட்டு இல்லாம கனிமொழியும் தோத்துருந்தா, ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம் இல்லையா ? நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்… இப்போ எதிர் முகாமுக்கு போறியா… நான் ஏன் உன் பேரணிக்கு அனுமதி குடுக்கணும் அப்படின்னு ஜெயலலிதா நெனைக்கிறாங்க

அரசு விதிச்ச தடையை மீறி, தமுமுக பேரணிக்கு நீதிமன்றத்துலயும் அனுமதி கிடைக்காம போனதுக்கு முக்கிய காரணம், தமுமுக அமெரிக்க தூதரகத்துல நடத்துன தாக்குதல். இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள்தான், பேரணிக்கு அரசு விதிச்ச தடை சரிதான்னு தீர்ப்பளிச்சாங்க”

”சரி தமுமுகவுல என்ன நினைக்கிறாங்க… ? ”

”பேரணிக்கு அனுமதி குடுக்காததுக்கும், தங்களை அலைக்கழிச்சதுக்கும் சேத்து, கமிஷனர் ஜார்ஜ் மேல கடுமையான கோவத்துல இருக்காங்க… ஜார்ஜுக்கு சரியான பாடம் கத்துக்குடுக்கனும்னு நினைக்கிறாங்க..



தொகுப்பு:

ஜே :ஷேக் பரீத் 

முத்துப்பேட்டையில் வி.சி பிரமுகரை வெட்டியவனை உடனே கைதுசெய். கிராம மக்கள் சுடுகாட்டில் போராட்டம்






முத்துப்பேட்டை, ஜூலை 11: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாட்டை சேர்ந்தவர் வெற்றி (32) இவர் திருவாரூர் மாவட்ட விடுதலைகச் சிறுத்தை கட்சியின் துணைச் செயலாளராக உள்ளார். கடந்த 5-ம் தேதி இரவு முத்துப்பேட்டையிலிருந்து வீட்டுக்கு திரும்பும்போது காரில் வந்த 7 பேரைக்கொண்ட மர்ம கும்பல் வெற்றியை சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த வெற்றி தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் எதிரொலியாக அன்றைய தினம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து போலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறையை கண்டித்தும் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கோரியும் கம்மாளதெரு உட்பட 3 கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து,வீரப்பன், முருகானந்தம், சுந்தரி, வசந்தா, சரோஜா, முருகேஷ் உட்பட 30 குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர். 

மேலும் சமையல் செய்தும் சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய் துறையினரும், உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஈடுபட்டவர்களிடம் சுமூகம் ஏற்பட்டதால் போராட்டம் முடிவுற்றது. 


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)