முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம்.அப்துல் ரஹ்மான் MP தேர்வு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்து.



சென்னை,ஜூலை 02:  தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு  அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்து. தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்தற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி,பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வோடு இரண்டற கலந்திருக்கும் மஸ்ஜித்,மஹல்லா ஜமாஅத் இவைகளின் கண்ணியத்தை ஒற்றுமையோடு நிலை நிறுத்த அயராது பாடுபட்டு வரக்கூடிய பேரியக்கமான தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதி வக்ப் நிர்வாகத்திற்கு தேர்வாகி இருப்பது ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹல்லா ஜமாத்துக்களில் ஏற்படும் பிரச்சினைகள்,நிர்வாகத் தேர்தல்களில் குளறுபடிகள், அதிகாரங்களை பயன்படுத்தி வக்ப் சொத்துக்களை தாரை வார்ப்பது போன்ற  நிலைகள் இனி நிகழாது என்கிற நம்பிக்கை சமுதாய மக்களுக்கு மிளிர்ந்திருப்பதை வரக்கூடிய தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

புதிதாக வக்ப் வரிய நிர்வாகத்தில் அடியெடுத்து வைத்துள்ள  நமது சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள்  சமுதாயம் எதிர்பார்க்கும் பங்களிப்பை சிறப்பாக வழங்க நெஞ்சார வாழ்த்துகிறோம்.



முத்துப்பேட்டையில் 04.07.13 ஆம் தேதி அன்று SDPI சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.





முத்துப்பேட்டை, ஜூலை 02: முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் வருகிற 04.07.13 அன்று நான்கு  அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி S நிஷார் தலைமையில் நடைபெற உள்ளது, இதற்க்கு கண்டன உரை நிகழ்த்த இக்கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அதில் முத்துப்பேட்டையில் நிலவும் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தியும், முத்துப்பேட்டை பேரூராட்சி நிரந்தர செயல் அலுவலரை (E.O) பணியமர்த்த கோரியும், முத்துப்பேட்டை பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல் தொடரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், முத்துப்பேட்டை பகுதிகளில் சாக்கடை பகுதிகளை சுத்தம் செய்யாததை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலருக்கும், திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் அலுவலருக்கும் கடிதங்களும் அனுப்பாட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

நமது நிருபர்
i
ஷேக், கபீர்  

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)