முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நடந்த கொடூர விபத்து மனிதநேயப்பணியில் த மு மு க



முத்துப்பேட்டை, மே 29: முத்துப்பேட்டையில் 27.5.13 காலை 8 மணியளவில் சுந்தரம் புறவழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இந்த சாலை விபத்தினை கேள்விப்பட்ட உடன் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் உதவி செய்யும் தமுமுக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது. அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் இறந்தவரின் உடலினை பொது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக, அவசர அவசரமாக முகத்தினை மூடி விட்டார்கள். ஏனெனில் இறந்தவரின் தலை பகுதியானது பலத்த அடிப்பட்டதால் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தது.

கோட்டைப்பட்டினம் – கோட்டை ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 35) த.பெயர். பெரியசாமி, அதே ஊரை சார்ந்த மூர்த்தி (வயது 40) தந்தை பெயர். பிச்சை. கோபால் மற்றும் மூர்த்தி இருவரும் ஆடு விற்கும் தொழில் செய்பவர்கள்.

இருவரும் ஆடு விற்கும் தொழில் சம்மந்தமாக திருத்துறைப்பூண்டி சென்று விட்டு தம்பிக்கோட்டையில் உள்ள ஒரு வியாபாரியை சந்திப்பதற்காக ஆலங்காடு புறவழிச்சாலை வழியாக பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது சுந்தரம் பகுதியில்; எதிரே வந்த கிரேன் மீது பைக் மோதி சம்பவ இடத்தில் கோபால் இறந்து விட்டார். காயமடைந்த மூர்த்தியை முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு விட்டு, அவரேயும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

காலை 8 மணிக்கு நடந்த சம்பவமாக இருந்தாலும் அதிகளவில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இருப்பினும், பொது மக்கள் மத்தியில் பீதியையும், கவலையையும், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)