சென்னை, பிப்ரவரி 14: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரான சகோதரர் ஜே.ஷேக்பரீத் அவர்கள் கடந்த வாரம் சென்னையில் , நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினரான கவிஞர் கனிமொழியை சந்தித்தார் .சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற் இந்த சந்திப்பில் முத்துப்பேட்டை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் , வருடாவருடம் இந்து முன்னணியினரால் நடத்தப்படும் விநாயகர் ஊர்வலத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது .
நமது நிருபர்:
நதீம்கான் BBA
முத்துப்பேட்டை,பிப்ரவரி 12: நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத் தள மானது கடந்த ஒரு வருடத்தை தாண்டி இரண்டாம் ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கும் நிலையில் இந்த இணையத்தளம் ஊர் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று மிக சிறப்பாக இயங்கி வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இந்த இணையத்தளத்தை விரிவுப் படுத்தவும் உடனுக்குடன் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆஹவே இந்த இணையத்தளத்தில் பணி புரிய கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
1) நிருபர் (Reporter)
2) DTP ஆபரேட்டர் (டங்க்லிஸ் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்)
3) சேல்ஸ் மேன் (விளம்பரம் சேகரிக்க)
4) IT பெர்சன் (இணையத்தளத்தில் ஏற்படும் கோளாரை சரி செய்ய)
5) செய்தி வாசிப்பவரி (News Reader)
ஆகிய பணிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் எங்களுக்கு கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். public.mttexpress@gmail.com மேலும் தொடர்புக்கு: 72 00 11 68 52.
குறிப்பு:
1) இதில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகைபட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2) கல்வியின் தகுதி சுமார் 12 முதல் பட்டப்படிப்பு வரை படித்திருக்க வேண்டும்.
3) இந்த துறையில் அனுபவம் உள்ளவர் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் சேர்க்கப்படுவார்கள்.
4) தங்களின் தகுதியின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படும்.
5) இதற்கான நேர்முகத் தேர்வு முத்துப்பேட்டையில் மட்டும் நடைபெறும்.
6) முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர் ஆகிய அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தொகுப்பு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.
முத்துப்பேட்டை,பிப்ரவரி 13: முத்துப்பேட்டை செம்படவன்காடு பைபாஸ்சாலை அருகே நேற்று மாலை பட்டுக்கோட்டையை அடுத்த காசியங்காடு பகுதியிலிருந்து கீற்று ஏற்றி கொண்டு ஒரு மினி முத்துப்பேட்டை நோக்கி வந்தது. லாரியை விஜயகுமார் (32) ஒட்டி வந்தார். அப்போது, தம்பிக்கோட்டை கீழ்காட்டை சார்ந்த ராஜேந்திரன் முத்துப்பேட்டை யிலிருந்து பைக்கில் வந்து கொண்டு இருந்தார். சம்பவ இடத்தில், மினி லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. பின்னர், லாரி தலைகுப்புற கவிழந்தது, இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து, முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தொகுப்பு:
ரிப்போர்ட்டர் முகைதீன் பிச்சை