முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மெளவத் அறிவிப்பு: "S. கமால் முஹம்மது"


முத்துப்பேட்டை,  அக்டோபர் 30: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ஒரத்தநாடு S. அப்துல் கரீம், PSM அஹமது இபுராஹிம், ஆகியோரின் மாமனாரும், அப்துல் நவாஸ், சுல்தான் அப்துல் காதர், முஹம்மது முஹைதீன், ஆகியோரின் தகப்பனாருமாகிய "S. கமால் முஹம்மது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6.30 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள். 
source from: muthupettaiexpress.com, 
அறிவிப்பவர்: 

PSM முஹம்மது முஹைதீன்.

மேலும் தொடர்புக்கு:

சுல்தான் அப்துல் காதர்: 0091 9500 67 80 17

முஹம்மது முஹைதீன்: 00966 5965 44152 

நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை அருகே கடத்தபப்ட்ட 7.6 கிலோ தங்கம் பறிமுதல். 3 பேர் கைது.







முத்துப்பேட்டை, அக்டோபர் 30 : முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் ஆசாத் நகர் பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்தில் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை மல்லிப்பட்டிணம் திருத்துறைப்பூண்டி பகுதி அலுவலகமும் இயங்கி வருகிறது. சமீபத்தில் வேதாரண்யம் பகுதியில் 2 மர்ம படகும் கடலூர் பகுதியில் 1 படகும் முத்துப்பேட்டை பகுதியில் 1 படகும் ஒதுங்கியது. அதனால் சுங்க இலகா அதிகாரிகளுடன் மத்திய கடத்தல் பரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் ஏற்கனவே 55 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தல் காரரிடமிருந்து பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதனால் கோவையில் இயங்கும் மத்திய வருவாய் புலணாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தவகல்; கிடைத்து அதிகரிகள் முத்துப்பேட்டை அதிராம்பட்டிணம் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் பகுதியில் சுங்க இலகா அதிகாரகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு துறை அதிகாரிகள் ஒரு டீம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சென்ற 2 டூவீலர்களை மடக்கி பிடித்தனர். அதில் 3 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து 7.6 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கபட்பது. அதன் மதிப்பு 2.34 கோடியாகும். மேலும் பிடிபட்டவர்கள் 1.தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன(23) 2. புதுக்கோட்டை மாவட்டம், மும்பாளைபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த காதர் முகைதீன்(55) 3.அதே ஊரைச் சேர்ந்த இப்ராகிம்(50) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்து முத்துப்பேட்டை சுங்க இலகா அலுவலம் கொண்டு வந்தனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

 பின்னர் மேலும் விசாரணைக்காக முத்துப்பேட்டை சுங்க அலுவலகத்தில் 3 பேரையும் வைக்கப்பட்டனர். கடத்தப்பட்ட தங்கம் எங்கிருந்து வந்தது? இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதா மேலும் கடலோர மாவட்டத்தில் சமீபத்தில் 5 படகுகள் கரை ஒதுங்கிய நிலையில் அந்த நாட்களில் அடுத்தடுத்து தங்கம் கடத்தப்படுவது பறிமுதல் செய்யப்படுவதால் இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நேற்று இரவு 3 பேரிடமும் முழு விசாரணை முடித்துதிருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

நமது நிருபர்: முஹைதீன் பிச்சை 

பாட்னா’ குண்டும் & அரசியல் ஆதாயங்களும்- MMK கட்சி பொதுச்செயலாளர் கருத்து :

சென்னை,அக்டோபர் 29: பீஹார் தலைநகர் பாட்னாவில் நேற்யை தினம் நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டு, எண்ணற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது கோழைத்தனமான செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதிப்புமிக்க உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வழங்கியதோடு, இதுகுறித்த முழு விசாரணையை தேசியப் புலனாய்வுக் குழுவிடம் (NIA) ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


இக்குண்டுவெடிப்பின் பின்னணி நடுநிலையோடும், மிகுந்த நுட்பத்தோடும் ஆராயப்பட வேண்டும்.

விசாரணைக்கு முன்பே ‘வழக்கம் போல’ பழி சிறுபான்மை சமூகத்தின் மீது போடப்பட்டு, மோடிக்கு அனுதாப அலையை உருவாக்கும் ‘திருப்பணிகள்’ நடக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வன்முறை சக்திகளிடமிருந்து மக்கள் கவனமாக தள்ளி நிற்க வேண்டும்.

இதில் ‘அபினவ் பாரத்’ போன்ற அமைப்புகளின் பங்கு என்ன என்ற கோணத்தில் யாருமே சிந்திப்பதில்லை.

மோடிக்கும் & நிதிஷ்குமாருக்கும் கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதல் நடப்பது அனைவருக்கும் தெரியும். இருவருமே வளர்ச்சியை முன்னிறுத்தி தங்களை பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் போக்கு கொண்டவர்கள்.

பாஜகவுக்கும், நிதிஷ்குமாருக்கும் கூட்டணி முறிவு பற்றி ஏற்பட்ட பிறகுதான் பீஹாரின் புத்தகயாவில் குண்டுவெடித்தது. இக்குண்டு ‘Made in Gujarat’ என ஐக்கிய ஜனதாதளம் கூறிய கருத்து பாஜகவை கோபப்படுத்தியது.

இப்போது ‘சக்தி குறைந்த’ குண்டு வெடித்ததாக வெளியிடப்படும் செய்திகள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

‘நான் கொல்லப்படலாம்’ என்று ராகுல் காந்தி கூறிய கருத்து தேசமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மோடியின் விளம்பர யுக்திகளை தவிடுபொடியாக்கிய தருணத்தில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதை கவனிக்க வேண்டும்.

‘2014 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி...’ காவி பயங்கரவாதிகளால் திட்டமிடப்படும் பல்வேறு சதிகளில் இதுவும் ஒன்றா? என்ற கேள்வியைப் புறக்கணித்துவிட முடியாது.

எது எப்படியாயினும் அப்பாவி மக்களை பயங்கரவாதத்தின் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக கொல்வதை, அச்சுறுத்துவதை ஜனநாயக சக்திகள் திரண்டு எழுந்து தடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு சாதி, மதம், மொழி, இனம் இல்லை. ஆனால் இப்போது ‘அரசியல் & அதிகாரம்’ என்ற ஆசை வந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து நடந்த சமாதான பேச்சு வார்த்தையில் தகராறு,





முத்துப்பேட்டை, அக்டோபர் 29: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களை பெரும்பாலான தனியார்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை நெய்யக்காரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவர் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் அயூப்கான். இவர் அதிமுக வார்டு நிர்வாகியாக உள்ளார். அயூப்கான் பேரூராட்சி அலுவலகத்தில் சென்ற வாரம் அதே பகுதியைச் சேர்ந்த சேக்கமரைக்காயர் மகன் சாகிப் மரைக்காயர் பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பேரூராட்சி செயல் அலவலார் சித்தி விநாயகமூர்த்தியிடம் புகார் கொடுத்திருந்தார்.

 உடன் செயல் அலுவலர் சம்மந்தப்பட்ட சாகிப் மரைக்காயருக்கு விளக்கம் கேட்டு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டன. இந்த நிலையில் விடுப்பில் சென்றிருந்த செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி நேற்று அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம் அளிப்பதற்காக சாகிப் மரைக்காயரும் அவரது நண்பர் நவாஸ்கானும் சென்று செயல் அலுவலரிடம் விபரங்களை கூறினர். அதில் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த செயல் அலவலர் புகார் கொடுத்த அயூப்கானுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சாகிப் மரைக்காயருக்கும் அதிமுக நிர்வாகி அயூப்கானுக்கும் தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். 

பின்னர் அலுவலம் வாசலில் நின்று சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி வளாகம் பெரும் பரபரப்பானது. தீபாவளி நேரம் என்பதால் மக்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகம் எதிரே நின்று வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலிசார் பேரூராட்சி அலுவலம் வந்து தகராறில் ஈடுபட்டவர்களை கலைத்துவிட்டார். இந்த நிலையில் சாகிப் மரைக்காயர் அதிமுக நிர்வாகி அயூப்கான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து சமாதான பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டதால் அலுவலகம் வாசலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட காட்சி.

நமது நிருபர்: மு.முகைதீன் பிச்சை

சென்னை மண்ணடியில் கலவரத்தை உண்டாக்க காவி கூட்டம் திட்டம் INTJ சகோதர்கள் காயம்.



சென்னை, அக்டோபர் 28: சென்னை பாரிமுனையில் பெரிய களவரமே நடந்து விட்டது. பீகாரில் குண்டு வெடித்த உடன் பாரிமுனையில் இருக்கும் ரேவ் (சேரி) காரங்க இந்துத்துவாவாதிங்க கூட சேர்ந்துக்கிட்டு பாரிமுனை பகுதியில் போவோர் வருவோரிடம் ‘பாரத் மாதாகி ஜே’ன்னு சொல்லு இல்ல அடிப்பேன்னு அனைவரையும் வற்புறுத்தியிருக்காங்க. ஐஎன்டிஜே வட சென்னை கிளை சகோதரர்கள் அந்தப் பகுதியில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் வந்த இந்துத்துவாவாதிகள் நீங்களும் பாரத் மாதாகி ஜேன்னு சொல்லுங்கன்னு வற்புறுத்திஉள்ளார்கள் இந்திய தவ்ஹித் ஜமாத்சகோதரர்கள் நாங்க சொல்ல மாட்டோம்னு சொன்னதும் அவர்களைப் போட்டு அடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பிரச்சினை வெடித்துள்ளது. 

இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் அந்தப் பகுதி காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அடித்தவர்களை நாங்கள் நாளை காலை 11 மணிக்குள் பிடித்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்குள் இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதும் எஸ்.டி.பி.ஐ., தமுமுக, இந்திய தவ்ஹித் ஜமாத் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஸ்பாட்டிற்கு வந்து காவல்துறையினரிடம் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியிருக்காங்க. இரவு 11 மணிவரை பாரிமுனை பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்து விட்டனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்தி. சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முஸ்லிம் சகோதரர்கள் கலைந்து சென்றுள்ளனர். இன்று அவர்களை கைது செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்க பட்டுள்ளது

கருணாநிதி பற்றி அவதூறு கார்டூன்: முத்துப்பேட்டையில் தி.மு.க. வினர் தினமலர் எரிப்பு!

முத்துப்பேட்டை, அக்டோபர் 28: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் நேற்று தினமலர் நாலாம் பக்கத்தில் கருணாநிதியின் தவரான கார்டுன் வெளியிட்டதை கண்டித்து தி.மு.க.வினர் நூறு பேர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் தலைமையில் தினமலர் நாளிதழை தீயிட்டு கொழுத்தினார்கள்.









மேலும் தின மலரை கண்டித்தும் சம்மந்தபட்டவர்களை கைது செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் அவ்வழியாக சென்ற பேருந்துகளை மறைத்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் நகர அவைத்தலைவர் ராமஜெயம், நகர துணைச் செயலாளர் நவாஸ்கான், பொருளாளர் பாலு, மாவட்ட பிரதிநிதிகள் தமீம், இபுராஹீம் மாவட்;ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய இளைஞர் அணி ஜாம்பை கல்யாணம், பேருராட்சி சவுன்சிலர்கள் ஐய்யப்பன், கிருஷ்ணன், ஜெகபருல்லா, ரெத்தினகுமார், நகர நிர்வாகிகள் செல்வம் அமனுல்லா, பியூட்டி நவாஸ், ஆறுமுகம், ரபிஅகம்மது, சிவ சுப்பிரமணியன், அன்பன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதனால் அரை மணிநேரம் போக்கு வரத்து தடைப்பட்டது இந்த நிலையில் சுமார் 2 மணி நேரம் கழித்து எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீஸார் கடைத் தெருவில் ஒரு கடையில் அமர்ந்து இருந்த மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக்கை சுற்றி வழைத்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினார். 


அவருடன் நகர நிர்வாகி செல்வமும் கைது செய்யப்பட்டனர். இச்செய்தியை கேள்விப்பட்ட தி.மு.க.வினர் பலரும் முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எடையூரில் 20 தி.மு.க.வினர் கைது.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயலாளர் ந.உ.சிவசாமி தலைமையில் தினமலர் நாழிதழ் தீயிட்டு எரிக்கபட்டன. ந.உ.சிவசாமி உட்பட 20 தி.மு.க.வினரை எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கைது செய்தார்.

Source from: www.muthupettaiexpress.com

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்!! ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்...


சென்னை, அக்டோபர் 27: நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,
~~~PASSPORT
~~~DRIVING LICENCE, 
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.
உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் நான் ( Mohideen Abdul Salam) கேட்டுக்கொள்கிறேன்.
இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்.
அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது நிருபர் 

AKLT. அப்துல் ரஹ்மான் 

காவல்துறை குழப்பத்தை தீர்க்க வேண்டும்!

  • சென்னை, அக்டோபர் 27: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிடும் அறிக்கை:
  • தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருத்தீன், பண்ணா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை தனிப்படை போலீசார் ஒருவழியாக ஆந்திர மாநிலம் புத்தூரில் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைகள் காவல்துறைக்கு பெருமையைத் தேடிந்தந்த போதிலும், கைதுக்குப் பின்னரான காவல்துறையின் நடவடிக்கைகள் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளன.
    இந்த குழப்பத்திற்கு காரணம் போலீஸார் சொன்னதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்திகள்தான்.
    வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸ் பக்ருத்தீனை ஆஜர்படுத்திய போலீசார் இந்துத்துவா அமைப்புகளின் பிரமுகர்களான பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, மதுரை சுரேஷ், சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரை போலீஸ் பக்ருத்தீன் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என தெரிவித்திருந்தனர். இதை மீடியாக்களுக்கு காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
    இந்நிலையில், முன்னதாக கடந்த ஜூலை 26ம் தேதி அறிக்கை வெளியிட்ட காவல்துறை தலைவர் ராமானுஜம், பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகள் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்ப தாகவும், இந்த இருவரின் கொலைகளுக்கான பின்னணி காரணங்கள் நிலத் தகராறு, கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைதான் என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபட கூறியிருந்தார். இந்த குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் காவல்துறைதலைவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
    இச்சூழலில், மேற்கண்ட இருவரது கொலைகளையும் போலீஸ் பக்ருத்தீன்தான் செய்தார் என இப்போது போலீசார் சொல்வது காவல்துறை தலைவரின் அறிக்கைக்கு முரணாகவும், மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    இதையொட்டி, திமுக தலைவர் கருணாநிதியும், காவல்துறையின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாகவும், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரை கொலை செய்த உண்மையான குற்றவாளிகள் யார்? போலீஸ் பக்ருத்தீன் குழுவினரா? அல்லது ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களா?
    இதில் ஒரு தரப்புதான் குற்றவாளிகள் என்றால் இன்னொரு தரப்பினர் மீது போலீஸ் ஊரை ஏமாற்ற பொய் வழக்கு போட்டுள்ளதா என்றெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
    கருணாநிதியின் கேள்வி நியாயமான ஒன்றுதான். இதே கோணத்தில்தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் துவக்கம் முதலே இந்த கேள்விகளை எழுப்பி வருகிறது.
    எனவே, இந்த வழக்கில் யார் உண்மையான குற்றவாளிகள் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருப்பதால், உண்மையான குற்றவாளியை விரைவில் அடையாளம் காட்டி இந்த குழப்பத்திற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
    இவ்வாறு மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    இப்படிக்கு
     
    அபு ஃபைசல்
     
    மாநிலச் செயலாளர் & செய்தி தொடர்பாள

மதுரையில் நடு ரோட்டில் அடிபட்டு கிடந்தவரை காப்பாற்றிய ஹன்சிகா !

நடிகை ஹன்ஸிகா,நேற்று இரவு இவர் மும்பையில்இருந்து விமானம் மூலம்படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந்தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார்.
மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்
இறங்கியபோது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல்லை.ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவும்,
அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார்த்த ஹன்சிகா மோத்வானி,
காரை நிறுத்தும்படி கூறினார்.
ஆனால் எதற்கு வம்பு?
என்று காரை நிறுத்தாமல்
சென்றார் தயாரிப்பு நிர்வாகி.
ஆனால் ஹன்சிகா உரத்த குரலில்
சத்தம்
போட்டு காரை நிறுத்தும்படி கூறினார்.
பின்னர் காரை நிறுத்தியதும்
ஹன்சிகாவும், அவருடைய தாயாரும்
ரோட்டை கடந்து எதிர்புறம்
சென்றார்கள். ரத்த வெள்ளத்தில்
உயிருக்கு போராடிக்
கொண்டிருந்தவரை ஹன்சிகாவின்
தாயார் பரிசோதித்தார்.
அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததால்,
உடனடியாக 108
ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.
அதற்குள் அங்கே கூட்டம்
கூடியது. ஹன்சிகாவை அடையாளம்
கண்டு கொண்டார்கள். ஆம்புலன்ஸ்
வந்ததும்,
அடிபட்டு கிடந்தவரை தூக்கி ஆம்புலன்சுக்குள்
கிடத்தினார்கள். ஹன்சிகாவின்
தாயார் ஆம்புலன்சில்
ஏறிக்கொண்டார். அந்த
ஆம்புலன்சை, ஹன்சிகா காரில்
பின் தொடர்ந்தார். அருகில் உள்ள
ஒரு மருத்துவமனையின் அவசர
சிகிச்சை பிரிவில், அந்த
முதியவரை அனுமதித்தார்கள்.
அவருடைய சட்டைப்பையில் இருந்த
செல்போன் மூலம்
உறவினர்களுக்கு தகவல்
தெரிவித்தார்கள்.
அடிபட்டு கிடந்தவரின்
மனைவி அலறியடித்துக்
கொண்டு வந்தார்.
ஹன்சிகாவுக்கும், அவருடைய
தாயாருக்கும்
நன்றி தெரிவித்தார்.
அவருக்கு ஆறுதல் கூறிய
ஹன்சிகா கணிசமான பண உதவியும்
செய்துவிட்டு,
அங்கிருந்து புறப்பட்டார். நல்ல மனம் வாழ்க ......!
நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பாராட்டுவோம் ...........!

நடிகை ஹன்ஸிகா,நேற்று இரவு இவர் மும்பையில்இருந்து விமானம் மூலம்படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந்தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார்.
மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்
இறங்கியபோது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல்லை.ஓட்டலில் போய் ஓய்வு  எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவும்,
அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார்த்த ஹன்சிகா மோத்வானி,
காரை நிறுத்தும்படி கூறினார்.
ஆனால் எதற்கு வம்பு?
என்று காரை நிறுத்தாமல்
சென்றார் தயாரிப்பு நிர்வாகி.
ஆனால் ஹன்சிகா உரத்த குரலில்
சத்தம்
போட்டு காரை நிறுத்தும்படி கூறினார்.
பின்னர் காரை நிறுத்தியதும்
ஹன்சிகாவும், அவருடைய தாயாரும்
ரோட்டை கடந்து எதிர்புறம்
சென்றார்கள். ரத்த வெள்ளத்தில்
உயிருக்கு போராடிக்
கொண்டிருந்தவரை ஹன்சிகாவின்
தாயார் பரிசோதித்தார்.
அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததால்,
உடனடியாக 108
ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.
அதற்குள் அங்கே கூட்டம்
கூடியது. ஹன்சிகாவை அடையாளம்
கண்டு கொண்டார்கள். ஆம்புலன்ஸ்
வந்ததும்,
அடிபட்டு கிடந்தவரை தூக்கி ஆம்புலன்சுக்குள்
கிடத்தினார்கள். ஹன்சிகாவின்
தாயார் ஆம்புலன்சில்
ஏறிக்கொண்டார். அந்த
ஆம்புலன்சை, ஹன்சிகா காரில்
பின் தொடர்ந்தார். அருகில் உள்ள
ஒரு மருத்துவமனையின் அவசர
சிகிச்சை பிரிவில், அந்த
முதியவரை அனுமதித்தார்கள்.
அவருடைய சட்டைப்பையில் இருந்த
செல்போன் மூலம்
உறவினர்களுக்கு தகவல்
தெரிவித்தார்கள்.
அடிபட்டு கிடந்தவரின்
மனைவி அலறியடித்துக்
கொண்டு வந்தார்.
ஹன்சிகாவுக்கும், அவருடைய
தாயாருக்கும்
நன்றி தெரிவித்தார்.
அவருக்கு ஆறுதல் கூறிய
ஹன்சிகா கணிசமான பண உதவியும்
செய்துவிட்டு,
அங்கிருந்து புறப்பட்டார். நல்ல மனம் வாழ்க ......!

முத்துப்பேட்டையில் ஒன்றிணைந்த அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டம் ! !



முத்துப்பேட்டை, அக்டோபர் 26: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹா அருகில் உள்ள ஜீவானந்தம் என்பவரின் அனுபவத்தில் உள்ள இடத்தில் பூமிக்கடியிலிருந்து சூலாயுதம் வந்ததாக பரபரப்பானது.


யாரோ விஷமிகள் தூண்டுதலின் பேரில் அந்த இளைஞர் வேண்டுமென்றே அந்த இடத்தில் சூலாயுதத்தை வைத்துவிட்டு தானாக வந்ததாக நாடகமாடி பிரச்சனையை தூண்டி வருகிறார்.

இதனால் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு முத்துப்பேட்டை அரபு சாஹீப் பள்ளிவாசல் மதராஸவில் இன்று முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் ஒருகினைப்பாளார் S.S.பாக்கர் அலி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இதில் முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், தமுமுக , SDPI , TNTJ ,முஸ்லிம் லீக் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

தீர்மானங்கள்:

வருகின்ற 28.10.2013 மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து சூலாயுதம் வந்ததாக கூறியவர் பாண்டியன் கைது செய்து அவர்களை விசாரனை செய்ய வேண்டும்.

பாண்டியனை கைது செய்யவில்லை என்றால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.

இனி வரும் காலங்களில் ஊரில் எந்த பிரச்சனையாக இருந்தால் இதை போல ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

முத்துப்பேட்டை தர்ஹா அருகே ஓம் காளி-ஜெய் காளி :காளித்தனம் செய்த மூன்று பேர் கைது !!!

அக்டோபர் 24: முத்துப்பேட்டையில் இருந்து தில்லைவிளாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பள்ளியமேட்டை சேர்ந்த ராஜீவ் (வயது22) என்பவரும், தில்லைவிளாகத்தை சேர்ந்த கணபதி (வயது26) என்பவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியில் ஊர், பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த ஒரு வாலிபர் தில்லைவிளாகம் வரை அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார். இவர்களும் ஏற்றி கொண்டு போனார்கள். போகும் வழியில் உள்ள ஜாம்புவானோடை தர்ஹா உள்ளது. அங்கு சென்றவுடன் பெயர் தெரியாத வாலிபர் ஜெய்காளி, ஓம்காளி என்று சத்தம் போட்டாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தர்ஹாவை சேர்ந்த சேக்தாவூது(32) என்பவர் ஏன் இங்கு வந்து சத்தம் போடுகிறார் என்று கேட்டு கையால் அடித்தாராம். அந்த வாலிபர் ஒடிவிட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து சேக்தாவூது, ராஜீவ், கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து, திருத்துறைப்பூண்டி  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். தப்பியோடிய வாலிபரை தேடிவருகின்றனர்.

வீதியில் இறங்கி துப்புரவு பனி செய்யும் 6-வது வார்டு கவுன்சிலர்

இயற்கை வளமும் 
ஆறுகள்;; கடல்கள்..!! சூழ்ந்த நிலமும் 
தனதாக்கி கொண்ட பகுதிதான் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை..... 

அவ் பேரூராச்சிக்கு 6 வது வார்டின் கவ்ன்சிலராக இருப்பவர்தான் ஜகபருநிஷா பஹுருதீன்.....
இவரின் கணவர் அதிகாலை எழுந்து தனது
மனைவின் வார்டுக்குள் புகுந்து..!!!!!
இவரே துப்பரவு செய்வது..!!!!!
கழிவு நீர் குழாய்கள் சுத்தம் பண்ண
ஆட்களோடு நின்று கொண்டு பணி செய்வது
போன்ற பணிகளை செய்து வருகிறார் 

அவர் கூறும் போது நாம் மற்றவர்க்கும் பிறந்த இந்த பூமிக்கும் உதவி செய்திடவும் பிறந்தவர் என்பதை நினைவில் கொன்டாலே மண்ணுக்கும்.. மனிதனுக்கும்... உதவிட முடியும் அதனால் தான் 
எங்கள் பகுதில் சந்துகளில் உள்ள மண் சாலைகளை அதிகாலையிலே எழுந்து துப்புரவு செய்து விடுவது..!!!!!!
சிலர் என்னிடமே குப்பை பைகளை தருவார்கள் நானே அதனை சேமித்து பிறகு மாற்று இடத்திற்கு அனுப்பி வைப்பது எனது அன்றாட பணிகளில் ஒன்றாகும் ......
பந்தா பண்ணுவது அல்ல கவன்சிலர் 
வேலை செய்பதுதான் கவன்சிலர் 
என்று சொன்னதுடன் எதிரே வந்த 
ஒரு அம்மாவிடம் அவரை பற்றி கேட்க்கவும் 
சொன்னார்.. அந்த அம்மாவோ ..!!!!!

பகுருதீனா விறகு கூட வாங்கி தருவானே ..!!!!
சிலிண்டர் இல்லாட்டி கூட்ட வாங்கிதர்வானே..!!!
இப்படி தருவானே..!!! தருவானே..!!!! என்று அடுக்கி கொண்டே போனது .


அவர் சொன்னது போலவே அவர் நிற்கும் சாலை யின் பகுதி 
6 வார்ட் மிக தூய்மையாக இருக்கிறது அவருக்கு எதிரே உள்ள பகுதி 
கழிவுநீர் தொட்டி கூட மூட படாமலும் சாலைகள் சுத்தம் செய்ய படாமல் இருப்பதையும் ..!!!இருப்பதையும் ..!!! அவரே சுத்தம்..!!! செய்வதையும் நீங்களே இந்த புகை படத்தில் பார்க்கலாம் 

ஒன்றுக்கு பலமுறை தன்னை வந்து சந்தித்தால் தான் 
எதையும் செய்வேன் என்று சொல்லும் 
சாதாரண வட்டத்திற்கு மத்தியில் ....

சர்வ சாதரணமாய் மக்களை சந்திப்பது மட்டும் அல்ல துப்புரவு 
பணி யிலும் ஈடுபடும் இவர் அல்ல பஹுரூதீன்

இவர்தான் அரசியல் வாதிக்கும் கவ்ன்சிலர்களுக்கும் முன் உதாரணமான ஜீன் 

பஷீர்

முத்துப்பேட்டை தர்ஹா குளத்தில் சூலாயுதம்? -கலவரத்தை ஏற்ப்படுத்த பாஜக வினர் சதியா ?

முத்துப்பேட்டை, அக்டோபர் 22: முத்துப்பேட்டை தர்காவுக்கு எதிர்புறம் இருக்கும் பள்ளிவாசலுக்கு  பின்புறம் உள்ள குளத்தின் மேல் கரையில் பட்டாமணியார் ஜீவானந்தத்திற்கு சொந்தமான இடத்தில் நேற்று  (20.10.13) பகல் 3 மணியளவில் பூமி அதிர்ந்து சூலம் வெளிப்பட்டதாக பாண்டியன் என்கிற சேகர் (மனநலம் பாதிக்கப்பட்டவர்) பரபரப்பை ஏற்படுத்தினார். 



இந்த சம்பவத்தை அறிந்த பாரதிய ஜனதாவினர் அந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி சிலைகள் இருந்தால் அந்த இடத்தில் நாங்கள் கோவில் கட்டுவோம் என்ற கலவரத்திற்கான விதையை விதைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இருதரப்பும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையும், வருவாய்துறையும், இரண்டு நாள் கழித்து தோண்டலாம் என்று அறிவுத்தியதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சூலத்தை வருவாய்துறையினர் வசம் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தர்கா பகுதி முஸ்லிம்கள் கூறுகையில்: இது ப.ஜா.க.வினரின் திட்டமிட்ட சதியே தவிர வேறொன்றும் இல்லை, அவர்கள் முன்பே திட்டமிட்டு பூமிக்குள் சிலையை புதைத்துவிட்டு தற்பொழுது பிரச்சனையை கிளப்புகிறார்கள். மேலும் பாண்டியன் என்கிற சேகர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகையால் உடனே தமிழக அரசு தலையிட்டு ஆரம்பத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

அமைதியா இருந்த ஊரில் முதன் முதலில் விநாயக ஊர்வலம் என்ற பெயரில் முத்துப்பேட்டையை கலவர பூமியாக மாற்றிய சங்பரிவார சக்திகள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெரியதாக கலவரம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் ஆகையால் தற்பொழுது அமைதியை சீர்குலைக்க புதியதாக ஒரு வழியை தேடுகின்றனர் அதனுடைய வெளிப்பாடே இந்த சூலாயுத நாடகம்.

நரேந்திர மோடியை தூக்கில் போடவேண்டும் -நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி !!!





சென்னை, அக்டோபர் 21: திரைத்துறையில் "வீரப்பனாக "வீர வசனம் பேசி தனது கம்பீர குரல் மூலம் அத்துனை பேரையும் மிரட்டி போட்டவரும் ,வில்லன்களை எல்லாம் புரட்டி போட்டவரும் ,வில்லன்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தையும்,தனி முத்திரையையும் பதித்தவர் .விமர்சனங்களுக்கு பஞ்சமில்லாதவர் .வில்லத்தனத்தை சினிமாவில் மட்டுமல்ல ,நிஜவாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் .வில்லன் போன்றே நடை உடை பாவனைகள் உடையவர் .முரட்டுத்தனத்தை தனது மூல தனமாய் கொண்டவர் .தனது பஞ்ச் டயலாக் மூலம் வில்லன் கேரக்டருக்கே ஒரு தனி அடையாளத்தை கண்டுபிடித்தவர் .இத்தனைக்கும் சொந்தக்காரர் யார் தெரியுமா ?

அவர்தான் நடிகர் மன்சூர் அலிகான் :

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி எடுப்பதற்காக கடந்த ஒரு மாத காலமாக தொடர் முயற்சிகள்  எடுத்தோம். ஒவ்வொரு முறையும் நாம் தொடர்பு கொண்ட போது,வெவ்வேறு ஊர்களில் படுபிஸியாக ஷூட்டிங்கில் இருப்பதாக கூறினார்  மன்சூர் அலிகான் .

ஹஜ் பெருநாள் அன்று நமது அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது .அந்த அழைப்பில் "ஈத் முபாரக் பாய் "இன்று மதியம் என் வீட்டில் உங்களுக்கு ஒட்டக பிரியாணி விருந்து வந்துடுங்க என்று கரடு முரடான ஒரு குரல் ஒலித்தது .திடுக்கிட்ட நாம் யாரென்று அறிய முற்பட்டோம் .

பின்னர் நாந்தான் மன்சூரலிகான் பேசுறேன் என்று  "கேப்டன் பிரபாகரன் "படத்துல "பச்சபுள்ள நிலாவ புடிக்க ஆச படறமாதிரி நீ என்ன புடிக்க ஆசைபடுற "என்ற வசனத்திற்கு பின் சிரிப்பது போல நம்மிடம் ஐந்து நிமிடத்திற்கு குறையாமல் வில்லத்தன சிரிப்புடன் பேச துவங்கினார் .அன்போடு விருந்தை தவிர்த்த நாம் ,இரவில் வந்து சந்திப்பதாக உரிதியளித்தோம்.அடைமழையையும் பொருட்படுத்தாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது பங்களாவிற்கு நேரில் சென்று சந்தித்தோம் .நம்மை அன்போடு வரவேற்ற மன்சூர் ,தனது பங்களாவின் மேல் தளத்திற்கு அழைத்து சென்று நாம் கேட்ட பல சூடான  கேள்விகளுக்கு வில்லத்தனமாக பதிலளித்தார் .

கே :  உங்களுடைய  சொந்த ஊர் எது ?

பதில் :  என்னோட சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி .

கே :   உங்களின் பள்ளி படிப்பு பற்றி ?

பதில் :   நான் பள்ளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்புவரை படித்துள்ளேன் .

கே :   நீங்கள் சினிமாவிற்கு வர காரணம் யார் ?

பதில் :  எனது அண்ணன் முஹம்மது அலிதான் காரணம் .

கே :   உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி ?

பதில் :   ஒரு நாள் எங்கள் ஊரில் ரவுடிகள் மாமூல் வசூலித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது மாமூல் கொடுக்க மறுத்த ஒரு இஸ்லாமிய பெரியவரின் கழுத்து சட்டையை  பிடித்து 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் மிரட்டிகொண்டிருன்தனர். இதனை கண்ட நான் அந்த நான்கு பேரையும் துரத்தி துரத்தி, ஓட ஓட விரட்டியடித்தேன். இந்த சம்பவத்தை நீண்ட நேரம் உற்று கவனித்த ஒரு நபர், என்னை கூப்பிட்டார் ,பின்னர்  சென்னையில் இந்த முகவரிக்கு வந்து சந்திக்குமாறு கூறினார் .நான் அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது அவர்தான் ஆ.செ.இப்ராஹிம் ரவுத்தர்னு .நீ சினிமாவில் வில்லனாக நடிப்பாயா எண்டு கேட்டார் .அதற்க்கு தயங்கியபடி நான் எப்படின்னு இழுத்தபடி  நின்றேன் . உன் முரட்டுத்தனமும் ,மூர்க்கத்தனமும் வில்லனுக்கு பொருத்தமாக இருக்கும் என்றவர் அடுத்து நான் தயாரிக்கும் படத்தில் நீதான் வில்லன் ,அடுத்த மாதம் ஷூட்டிங் என்று கூறிவிட்டு சென்று விட்டார் .

கே :  மன்சூரலிகான் வீரப்பன் ஆனது எப்படி ?

பதில் :   புரட்சிகலைஞர் விஜயகாந்தின் 100-ஆவது படமான "கேப்டன் பிரபாகரன் "படத்தில்தான் நான் வீரப்பன் ஆனேன் .நான் நடித்த இந்த வீரப்பன் கேரக்டர் தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது .இந்த படம் பல வெற்றிகளை அள்ளித்தந்தது .ஏன் இன்னும் சொல்ல போனால் விஜயகாந்த்திற்கு "கேப்டன் "என்ற அடைமொழி சொல் வந்ததே கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பின்னர்தான் 

கே :  முத்துப்பேட்டை தெற்கு தெரு நண்பர்களை பற்றி ?

பதில் : என் சகோதரர்கள். துணிச்சலானவர்கள். வீரமிக்கவர்கள். இறக்க குணமுடையவர்கள். எனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் வைத்து என்னை அழகு பார்த்தவர்கள்.

கே :   பாபர் மசூதி இடிப்பு பற்றி ?

பதில் :  இது நாட்டில் நடந்த மிகவும் கேவலமான செயல் .மதச்சார்பின்மைக்கு  விடப்பட்ட சவால் .நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் ,இந்த மா பாதக ,தேசவிரோத ,செயலை செய்ய வந்த அத்துனை பேரையும் சுட்டு தள்ளியிருப்பேன் .சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருப்பேன் .

கே :   பாபர் மசூதி இடிப்பை கண்டித்து நீங்கள் நடத்திய போராட்டம் பற்றி ?

பதில் :   கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பை கண்டித்து சென்னையில் உள்ள கவர்னர் மாளிகை முன் நான் என் குடும்பத்தாருடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டேன் .

கே :நீங்கள் ஒரு பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக கூறப்படுகிறதே ?

பதில் :   இது முழுக்க முழுக்க ஜோடிக்கபட்டவையாகும் .என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும் .

கே :   தமுமுக தலைமையகத்திற்கு நீங்கள் நேரில் சென்றது பற்றியும் -அரசியல் ஆர்வம் பற்றியும் ?

பதில் :   நான் தமுமுக ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவன் .பழனி பாபா படுகொலைக்கு பின் பாமக விலிருந்து வெளியேறினேன் .பின்னர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனியில் போட்டியிட்டு  ஒரு லட்சம் ஓட்டுக்கள் எடுத்தேன் .ஆதிமுக வில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன் .திருமாவளவனிடம் நெருக்கமாக இருந்திருக்கிறேன் .கடந்த பாராளுமன்ற தேர்தலில் டி.ராஜேந்தர் கட்சி சார்பில் திருச்சியில் போட்டியிட்டேன் .இதற்காகத்தான் தமுமுக தலைமையகம் சென்று ஆதரவு கேட்டேன் .ஆனால் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை .

கே : உங்களை SDPI  கட்சியினர் அழைத்தால் ?

பதில் :   அப்படி அழைத்தால் பாப்போம். ஆனால் அது நடக்காது.

கே :  குஜராத் கலவரம் பற்றியும் -பாஜக வின் பிரதமர் வேட்பாளர் மோடி பற்றியும் ?

பதில்;  இந்தியாவில் நடந்த மிகவும் கொடூரமான மனித படுகொலை அது நிறைமாத கர்ப்பிணியை சூலாயுதத்தால் குத்து சிசுவை எடுத்து, எரியும் நெருப்பில் வீசினார்கள். இதற்க்கு காரணம் நரேந்திர மோடிதான். நரேந்திர மோடியை தூக்கில் போட வேண்டும்.

கே :  நரேந்திர மோடி இஸ்லாமியர்களை நாய் என்ற வர்னிதுள்ளாரே ?

பதில் :   ஏங்க திருடன் என்னா செய்வான் .அடுத்தவன பார்த்துதான் திருடேன்பான்.அதே போல் மோடி பிறரை நாய் என்று கூறினால் இவர் யாராக இருக்க முடியும் ? இவ்வாறு பதிலளித்தார் .



சந்திப்பு :ஜே :ஷேக்பரீத்

               

ஆதார் அட்டையும் பின் விளைவுகளும்..!


அக்டோபர் 21: விவரங்கள் வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013 15:25


நண்பர் ஒருவர் ஆதார் அட்டை ஜோக் என்று ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதன் தமிழ் வடிவம் இதோ..

2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

ஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்..

கஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

கஸ்டமர் : வாட்..? எதுக்குங்க..?

ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

கஸ்டமர் : வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..

ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்..

கஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

கஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

கஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

கஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..?

ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

கஸ்டமர் : வாட்..?

ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்படிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்)

நமது நிருபர்:

அலி அஹமது (லண்டன்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)