முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஆர்எஸ் எஸ் -பாஜக வை வீழ்த்த இனி கடுமையாக உழைப்பேன் -மனுஷ்யபுத்திரன் ஆவேசம்

சங் பரிவாரின் கடை நிலை ஊழியர்கள் நேற்று புதிய தலைமுறையில் நேர்பட பேசு நிகழ்ச்சியிலும் என்மீதான தனிப்பட்ட வன்முறை தாக்குதலை தொடர்ந்தார்கள். விவாதம் சமூக வலை தளங்கள் வகுப்பு வாத சக்திகளால் பயன்படுத்தப்படுவது பற்றி. நவீன டிஜிட்டல் யுகத்தில் எவ்வாறு கருத்து சுதந்திரத்திற்கான இந்த ஊடகம் பெருமளவுக்கு அதிகார வர்க்கத்தாலும் சமூக விரோத இயக்கங்களாலும் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தேன். வகுபுக் கலவர்ங்கள் வெறுமனே சமூக வலைத்தளங்களால் தூண்டப்படுவது அல்ல என்பதையும் முன் வைத்தேன். 

ஆனால் நம்பி நாராயணன் என்ற நபர் ஆரம்பித்தைலிருந்தே இதை பா.ஜ.க சம்பந்தமான விவாதமாக மாற்ற முயறசித்தார். இது வழக்கமான ஒரு தந்திரம். எதைப் பற்றி பேசினாலும் மோடியைப் பற்றிய பேச்சாக அதை மாற்ற வேண்டும் என திட்டமிட்டு செய்யப்படும் தந்திரம். இந்த பிரச்சார உத்திக்கு ஊடககங்கள் தெரிந்தோ தெரியாமலோ பலியாகிவருகின்றன. இதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நானும் ஏ.எஸ்.பன்னீர் செல்வமும் ஜோதிமணியும் இந்தப் பிரச்சினையின் சிக்கல்களை பொதுத் தளத்தில் பேச மிகவும் முயற்சித்தோம். தங்களது வழக்கான பாச்சா பலிக்காததால் நம்பி நாரயணன் என்னை சம்பந்தமில்லாமல் தாக்க ஆரம்பித்தார். 

ராமரையும் ராவணணையும் சீதையும் பற்றி நான் கற்பனைகூட செய்யாத ஒரு விஷயத்தை நான் எழுதியதாக அருவருப்பான முறையில் ஒரு பொய்யை சொன்னார். நிரூபிக்கும்படி சவால் வைத்தேன். நிரூப்பிப்பதல்ல அவர் நோக்கம். நான் இந்து மத எதிர்ப்பாளன் என்று ஒரு பிம்பத்தை உருவக்குவதுதான் அவரது நோக்கம். அதற்காக எந்த அளவுக்கும் இறங்க அவர்கள் தயாராகி விட்டார்கள் என்பது தெரிந்தது.

வானதி ஸ்ரீனிவாசன், நம்பி நாராயணன் என்று வரிசையாக என்மீது வரிசையாக இந்த தனிபர் தாக்குதலில் இறங்குவதன் நோக்கம் வெளிப்படையானது. பா.ஜ.கவின் அரசியலை ஊடகங்களில் விடாப்பிடியாக கடுமையாக அம்பலப்படுத்துகிறேன் என்பதுதான். ஒரு காங்கிரஸ்காரர் அல்லது கம்யூஸ்னிடுகள் பா.ஜ.கவை எதிர்த்தால் பதிலுக்கு இரண்டு குற்றச் சாட்டுகளை கூறி சமாளித்துவிடலாம். 


ஆனால் பொது சமூகத்தின் பிரதிநிதியாக வந்து நிற்பவனை என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே என் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தி தப்பிவிடலாம் என்று படாத பாடுபடுகிறார்கள். இவனை அழைக்காதீர்கள் என்று தொலைக் காட்சிகளை மிரட்டுகிறார்கள். நான் யார் என்பதற்கும் எனது அரசியல் சமூக நம்பிக்கைகள் என்ன என்பதற்கும் எனது முப்பதாண்டு எழுத்துக்களில் ஆயிரக் கணக்கான பக்கங்களில் பதிவுகள் இருக்கின்றன. எதையுமே படித்தறியாத மூடர்களின் அவதூறுப் பிரச்சாரங்களால் அவளவு சுலபமாக அழிக்க முடியாத ஆவணங்கள் அவை.

ஒரு ஊடகத்தில் நெஞ்சறிய பொய் சொல்லும் நம்பி நாராயணன் போன்ற கிரினினல்களோடு ஒரு எழுத்தாளன் வாதிட வேண்டும் என்பது ஒரு சாபக்கேடு. கொஞ்ச நாள் அமைதியாக இருக்கும்படி சொன்ன எனது டாக்டரின் அறிவுரையை கேட்கமுடியாததற்கு வருந்துகிறேன். இந்த கிரினினல்களுக்கு எதிராக முன்னைவிட கடுமையாக தொடர்ந்து போராட எனது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தப் போகிறேன். இவ்வளவு ஆபாசமான ஒரு சூழலில் போராடும் ஒருவன் எப்படி உணர்ச்சிவசப்படாமல் இருப்பது? சொல்லுங்கள் நண்பர்களே...

3 comments:

  1. ஆர்.எஸ்.எஸ்.யின் பாசிஸ கேடி பிள்ளை பி.ஜே.பி.யின் பேச்சுக்கள் எல்லாம் உண்மையை பொய் என்பார்கள் பொய்யை உண்மை எனபார்கள் இந்த ஈனப்பிறவிகளுக்கு உங்களைப்போன்றவர்கள்தான் சரியான பதில் தரக்கூடியவர்கள்.

    ReplyDelete
  2. Do best against them, we will be with you.

    By
    Anvar

    ReplyDelete
  3. பாருய்யா இந்த மனுஷ்ய புத்திரணுக்கு இப்பதாண் ஞாணம் பிறந்திருக்கு. அதையாச்சும் உருப்படியா செய்வீர்களா அய்யா மானுட புத்திரண்.

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)