முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் தீ விபத்து.






முத்துப்பேட்டை, செப்டம்பர் 30: முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் தீ விபத்து. மலர் என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி 2 வீடுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது. தீ ஏற்பட்டவுடன் தீயனைப்பு வாகனங்கள் வரமுடியாத அளவிற்க்கு குருகிய சந்துகளாக உள்ளதால் மிகவும் சிக்கலாகிவிட்டது. மாடியில் உள்ள கொட்டகை 2 ம் சேதமாகி உள்ளது.
இருந்தாலும் நம் இளைஞர்கள் துருதிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நம் இளைஞர்கள் கலத்தில் இரங்கி வேலை செய்யாவிட்டால் தீயினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் அதிகமாகி இருக்கும்.
படத்தில் உள்ள வீடு மர்ஹூம் .நூர்முஹமது அவர்கள் வீடு. மலர் வீடும், பாடகர் தம்பி வீடும் முற்றிலும் சேதம். இவர்கள் குடி இருந்தது வாடகை வீடாகும். மலரும், பாடகர் தம்பியும் நெருப்பு எரியும் போது ஊரில் இல்லை
Thanks to Jahabar Sathik.

முத்துப்பேட்டை அருகே திருமண ஆசைக்காட்டி பிளஸ்–2 மாணவி கற்பழிப்பு: வாலிபர் மீது போலீசில் புகார்

முத்துப்பேட்டை, செப். 28–
முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை அங்காளம்மள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் ரம்யா (வயது 19). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் சுகுமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் சுகுமார் ரம்யாவை திருமணம் செய்வதாக ஆசை காட்டி அவரை கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சுகுமார் ரம்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இனியும் தாமதித்தால் அவமானப்பட நேரிடும் என்பதை அறிந்த ரம்யா தன்னை சுகுமார் ஏமாற்றி கற்பழித்து விட்டது பற்றி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுகுமாரை தேடிவருகின்றனர்.

திருச்சியில் பாஜக வினரே பேனரை கிழிக்கின்றனர் -மகஇக சந்தேகம்

நேற்று மாலை நரேந்திர மோடியின் வரவைக் கண்டித்து எமது அமைப்புகளின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், குறிப்பாக முசுலீம்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இக்கூட்டத்திற்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். மோடி வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற சூழலில் மோடிக்கு எதிராக பல்லாயிரம் பேர் திரண்ட இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று பொதுக்கூட்டம் நடக்கும் போதே ஆத்திரமூட்டி மோதலைத் தூண்டும் வகையில் வேனில் குறுக்கும் நெடுக்குமாக கோஷமிட்டபடி சென்றனர். ஆங்காங்கே நின்று மோதலை உருவாக்க முயன்றனர். இவற்றை எல்லாம் முறியடித்து அமைதியான முறையில் நேற்றைய கூட்டத்தை நடத்தி முடித்தோம்.

இதனை சகிக்க முடியாமல், தமது வளமையான பொய்ப் பிரச்சாரத்தையும் கலவரத்தைத் தூண்டும் முயற்சியையும், இன்று காலை பாஜகவினர் தொடங்கி விட்டனர். இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான

தாக்குதலை நடத்துவதன் மூலம், அமைதியான சூழல் நிலவும் திருச்சியில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முயற்சிக்கின்றனர்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மிகவும் சாதாரணமான ஒரு ஜனநாயக உரிமை. ஆனால், தங்களை எதிர்த்து யாருமே பேசக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இது எமது அமைப்புத் தோழர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதல் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. அமைதியான தமிழகத்தை குஜராத்தைப் போன்ற ஒரு கலவர பூமியாக மாற்றும் முயற்சி இது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மத சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

மதக்கலவரத்தை தூண்டும் குற்றத்துக்காக பாஜக தலைமையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.

மருதையன்,
மாநில பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

ஆர்எஸ் எஸ் -பாஜக வை வீழ்த்த இனி கடுமையாக உழைப்பேன் -மனுஷ்யபுத்திரன் ஆவேசம்

சங் பரிவாரின் கடை நிலை ஊழியர்கள் நேற்று புதிய தலைமுறையில் நேர்பட பேசு நிகழ்ச்சியிலும் என்மீதான தனிப்பட்ட வன்முறை தாக்குதலை தொடர்ந்தார்கள். விவாதம் சமூக வலை தளங்கள் வகுப்பு வாத சக்திகளால் பயன்படுத்தப்படுவது பற்றி. நவீன டிஜிட்டல் யுகத்தில் எவ்வாறு கருத்து சுதந்திரத்திற்கான இந்த ஊடகம் பெருமளவுக்கு அதிகார வர்க்கத்தாலும் சமூக விரோத இயக்கங்களாலும் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தேன். வகுபுக் கலவர்ங்கள் வெறுமனே சமூக வலைத்தளங்களால் தூண்டப்படுவது அல்ல என்பதையும் முன் வைத்தேன். 

ஆனால் நம்பி நாராயணன் என்ற நபர் ஆரம்பித்தைலிருந்தே இதை பா.ஜ.க சம்பந்தமான விவாதமாக மாற்ற முயறசித்தார். இது வழக்கமான ஒரு தந்திரம். எதைப் பற்றி பேசினாலும் மோடியைப் பற்றிய பேச்சாக அதை மாற்ற வேண்டும் என திட்டமிட்டு செய்யப்படும் தந்திரம். இந்த பிரச்சார உத்திக்கு ஊடககங்கள் தெரிந்தோ தெரியாமலோ பலியாகிவருகின்றன. இதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நானும் ஏ.எஸ்.பன்னீர் செல்வமும் ஜோதிமணியும் இந்தப் பிரச்சினையின் சிக்கல்களை பொதுத் தளத்தில் பேச மிகவும் முயற்சித்தோம். தங்களது வழக்கான பாச்சா பலிக்காததால் நம்பி நாரயணன் என்னை சம்பந்தமில்லாமல் தாக்க ஆரம்பித்தார். 

ராமரையும் ராவணணையும் சீதையும் பற்றி நான் கற்பனைகூட செய்யாத ஒரு விஷயத்தை நான் எழுதியதாக அருவருப்பான முறையில் ஒரு பொய்யை சொன்னார். நிரூபிக்கும்படி சவால் வைத்தேன். நிரூப்பிப்பதல்ல அவர் நோக்கம். நான் இந்து மத எதிர்ப்பாளன் என்று ஒரு பிம்பத்தை உருவக்குவதுதான் அவரது நோக்கம். அதற்காக எந்த அளவுக்கும் இறங்க அவர்கள் தயாராகி விட்டார்கள் என்பது தெரிந்தது.

வானதி ஸ்ரீனிவாசன், நம்பி நாராயணன் என்று வரிசையாக என்மீது வரிசையாக இந்த தனிபர் தாக்குதலில் இறங்குவதன் நோக்கம் வெளிப்படையானது. பா.ஜ.கவின் அரசியலை ஊடகங்களில் விடாப்பிடியாக கடுமையாக அம்பலப்படுத்துகிறேன் என்பதுதான். ஒரு காங்கிரஸ்காரர் அல்லது கம்யூஸ்னிடுகள் பா.ஜ.கவை எதிர்த்தால் பதிலுக்கு இரண்டு குற்றச் சாட்டுகளை கூறி சமாளித்துவிடலாம். 


ஆனால் பொது சமூகத்தின் பிரதிநிதியாக வந்து நிற்பவனை என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே என் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தி தப்பிவிடலாம் என்று படாத பாடுபடுகிறார்கள். இவனை அழைக்காதீர்கள் என்று தொலைக் காட்சிகளை மிரட்டுகிறார்கள். நான் யார் என்பதற்கும் எனது அரசியல் சமூக நம்பிக்கைகள் என்ன என்பதற்கும் எனது முப்பதாண்டு எழுத்துக்களில் ஆயிரக் கணக்கான பக்கங்களில் பதிவுகள் இருக்கின்றன. எதையுமே படித்தறியாத மூடர்களின் அவதூறுப் பிரச்சாரங்களால் அவளவு சுலபமாக அழிக்க முடியாத ஆவணங்கள் அவை.

ஒரு ஊடகத்தில் நெஞ்சறிய பொய் சொல்லும் நம்பி நாராயணன் போன்ற கிரினினல்களோடு ஒரு எழுத்தாளன் வாதிட வேண்டும் என்பது ஒரு சாபக்கேடு. கொஞ்ச நாள் அமைதியாக இருக்கும்படி சொன்ன எனது டாக்டரின் அறிவுரையை கேட்கமுடியாததற்கு வருந்துகிறேன். இந்த கிரினினல்களுக்கு எதிராக முன்னைவிட கடுமையாக தொடர்ந்து போராட எனது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தப் போகிறேன். இவ்வளவு ஆபாசமான ஒரு சூழலில் போராடும் ஒருவன் எப்படி உணர்ச்சிவசப்படாமல் இருப்பது? சொல்லுங்கள் நண்பர்களே...

மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் காவல்துறை PFI கண்டனம்..


திருச்சி, செப்டம்பர்24: மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் காவல்துறை – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த கூட்டத்திற்கு தலைமையேற்று ஆட்சி நடத்தி, வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் விவசாய நிலங்களையெல்லாம் கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

தற்போது பா ஜ க வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக வருகின்ற செப்டம்பர் 26 அன்று தமிழகத்தின் திருச்சி மாநகருக்கு வருகை தர இருகின்றார்.


மோடியின் வருகைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக காவல் துறையின் நடவடிக்கைகள் திருச்சி மக்களுக்கு பீதியை கிளப்புவதாக அமைந்துள்ளது. 
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை அதற்கு மாற்றமாக பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் சோதனை நடத்துவதும், மாநாடு நடக்கக்கூடிய தினத்தில் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று மிரட்டுவதும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க சொல்வதும் சட்டத்திற்கு புறம்பான செயல்களாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை காவல்துறை உடனே நிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

மேலும் குஜராத்தில் முஸ்லிம்களின் மீது பொய் வழக்குகளை போடுவது, அப்பாவி மக்களை போலி மோதல்களில் சுட்டுகொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவரும் குஜராத் காவல்துறை மோடியின் பாதுகாப்பிற்காக திருச்சியில் முகாமிட்டிருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் மேல் மக்களுக்கு சந்தேகங்களை எழுப்புகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு
ஜெ. முகம்மது ரசின்
மாநில செயலாளர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

17 மாதங்களாக ரூமில் அடைத்துவைத்து முஸ்லிம் மாணவி கற்பழிப்பு :ஹைதராபாத்தில் பயங்கரம்


ஹைதராபாத், செப்டம்பர் 22: ஹைதராபாத் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி ஒருவரை (பெயர் வெளியிடப்படவில்லை) அந்த கல்லூரியில் கேன்டீன் நடத்தி வரும் முதலாளி கடத்தி சுமார் 17 மாதங்கள் பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.அம்மாணவி அவனிடமிருந்து தப்பித்து வந்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
அது குறித்த போலிசில் அம்மாணவி அளித்துள்ள புகார் பற்றிய விபரம் வருமாறு…


ஹைதராபாத் நகரின் டி.ஆர்.ஆர் என்ற பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று கொண்டிருந்த இந்த முஸ்லிம் மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் நாள் அந்த கல்லூரியின் கேண்டீனில் உணவருந்த சென்ற வேளையில்,அந்த கேன்டீன் முதலாளி சத்யபிரகாஷ் சிங் என்பவன் அவர் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்தை கலந்து மயக்கமுறச் செய்து அம்மாணவியை கடத்தி சென்றுள்ளான்.ரகசிய இடங்களில் மறைத்து வைத்து இவரை சுமார் 17 மாதங்களாக சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியும் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.


தாம் சீரழிக்கப்படுவதை கண்டு அழுது புலம்பிய இம்மாணவிக்கு உதவி செய்வார் யாருமில்லாத நிலையில் தொடர்ந்து அந்த மாணவியை கொடுமைப்படுத்துவதிலும் பாலியல் ரீதியாக சீரழிப்பதிலும் தான் அவன் குறியாக இருந்துள்ளான். சில மாதங்கள் கழித்து இம்மாணவி அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டு முதலாளியின் நெருக்கடியை தொடர்ந்து இந்த மாணவியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கிறான்.
முஸ்லிம் என்பதால் தான் உன்னை சீரழிக்கிறேன்..

தொடர்ந்து பாலியல் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்த அவன் எல்லா முஸ்லிம் பெண்களையும் இது போலவே நான் சீரழிப்பேன்.நான் சீரழிக்கும் ஐந்தாவது முஸ்லிம் பெண் தான் நீ என்றும்,மற்ற பெண்களையும் உன்னைப் போலவே சீரழித்து கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டேன் என்றும் அடிக்கடி கூறியிருக்கிறான். தமது தந்தை பாதுகாப்புத் துறையில் வேலை பார்ப்பதாகவும் தமது சகோதரன் ஒரு கிரிமினல் வழக்கறிஞர் என்பதாலும் இத்தகைய குற்றச் செயல்களுக்காக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தப்பி வருவதாக சொல்லியிருக்கிறான்.

பல்வேறு நெருக்கடிகளை,தாண்டி கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் மே 2012ல் தனது அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் கடத்தப்பட்டு சீரழிக்கப்படுவதை பற்றி கூறியிருக்கிறார்.இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இது பற்றி காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.ஆயினும் இந்த புகார் குறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இம்மாணவி அவனது செல்போன் மூலமாக தனது அம்மாவை தொடர்பு கொள்ள முயன்ற போது நீ என்ன தான் முயன்றாலும் காவல் துறை என்னை அழைத்து செல்லும்.ஆனால் என்னை உடனடியாக வெளியே அனுப்பி விடுவார்கள்.தெலுங்கு தேச கட்சியின் பிரமுகரும் ஹைதராபாத் நகர முன்னாள் மேயருமான தீகலா கிருஷ்னா ரெட்டி தம்மை காப்பாற்றி விடுவார் என்று சொல்லியிருக்கிறான்.இந்த ரெட்டி தான் அந்த கல்லூரியின் உரிமையாளரும் கூட.

காவல் துறையினரும் கூட….
ஒரு முறை இந்த மாணவி தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை பற்றி அக்கம் பக்கத்தில் இருப்போர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரை விசாரிப்பதற்காக அந்த வீட்டிற்கு வந்த போலிசார் மூன்று பேரும் இம்மாணவியை சீரழித்த கொடுமையும் நடந்திருக்கிறது.அந்த போலிசாரும் அவனுக்கு வேண்டப் பட்டவர்கள் என்கிறார் அந்த மாணவி.


பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல்துறையிடம் நேரில் புகார் அளித்த போது…

இதனையைடுத்து அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.உடனே ஒரு மருத்துவமணைக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்திருக்கிறான்.அந்த மருத்துவமணை டாக்டர்களிடமும் ஊழியர்களிடமும் தனது நிலையை விளக்கியுள்ளார்; அந்த மாணவி.அவர்கள் கூட இந்த அபலை மாணவிக்கு உதவத் தயாராக இல்லை.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ம் தேதி குடித்து விட்டு வீட்டைப் பூட்டாமல் அப்படியே மயங்கி இருக்கிறான்.இதனை பயன்படுத்திக் கொண்டு அம்மாணவி அவன் பிடியிலிருந்து தப்பி வந்து தற்போது போலிசில் புகார் அளித்துள்ளார்.


இப்புகாரையடுத்து அந்த மிருகத்தை காவல்துறை கைது செய்து பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.(கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.இந் சட்டத்தின் படி அந்த டெல்லி மானவியை சீரழித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது)


இது குறித்து ஆந்திர மாநில மனிதஉரிமை ஆணையம் காவல்துறைத் தலைவர் மற்றும் வருவாய்துறைக்கும் உரிய நடவடிக்கை எடுத்து விசாரனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு பொருளாதார உதவி செய்யுமாறு ஹைதராபாத் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணைய தலைவர் அம்ஜதுல்லா கான் உத்தரவிட்டுள்ளார்.


டெல்லியிலும்,மும்பையிலும் பெண்கள் சீரழிக்கப்பட்டால் அது குறித்து முழு தகவல்களையும் அவ்வப்போது பதிவு செய்து வரும் ஊடகங்கள் சுமார் 17 மாத காலங்கள் முஸ்லிம் என்பதால் கடத்தி பாலியல் சீரழிவுக்கு உட்படுத்தப் பட்ட விவகாரத்தை நமது இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.இந்த விரிவான தகவல் கூட துபையிலிருந்து வெளிவரும் கல்ஃப் நியூஸ் ஆங்கில ஏட்டின் இணைய தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.
முஸ்லிம்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் அனுகும் இந்த விபச்சார ஊடகங்கள் தமது செயலை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும்.

   தொகுப்பு    :ஜே .ஷேக்பரீத்

மோடியை இந்துக்கள் ஆதரிக்கவில்லை :மனிதநேய மக்கள் கட்சி கருத்து !!

மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு நாடெங்கிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது!

பலர் மகிழ்ச்சியடைகிறார்கள்! பலர் கவலைப்படுகிறார்கள்! பலர் பதறுகிறார்கள்! நாடெங்கிலும் வெவ்வேறு விதமான உணர்வுகள் பிரதிபலிக்கிறது என்பது உண்மை!

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு! வெறித்தனம் கொண்டவர்களை இந்தியர்கள் அங்கீகரிப்பதில்லை!

அரசியல் தெளிவுள்ளவர்கள் நிதானமாகவே இருக்கிறார்கள். காரணம் பாஜக நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதில்லை! 200 இடங்களை நெருங்குவதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்!

அந்த 200 இடங்களை ஒருவேளை நெருங்கினாலும், அத்வானி ஆதரவு எம்.பி.க்கள் கலகம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. ம.பி.யின் பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான், அத்வானியின் ஆதரவாளர். அவர்தான் அதிகமாக எம்.பி.க்களை பாஜகவுக்கு வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது பிராந்தியக் கட்சிகளில் மராட்டியத்தில் சிவசேனாவை மட்டுமே பாஜக நம்பியுள்ளது.

மோடி பிரதமர் வேட்பாளர் என்றதும் ஜெயலலிதாவே சற்று அச்சத்தில்தான் இருக்கிறார். அதனால்தான் ‘சோ’ அவரை அவசரமாக சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

‘மோடி‘க்கு ஆதரவாக சில ஊடகங்கள்தான் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. ‘நன்றி’ விசுவாசம் அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது போல? (பணம் பத்தும் செய்யும்).

ஒரு விளக்கு அணைவதற்கு முன்பு வேகமாக எரியும்! அதன் ஒளி வடிவம் ஆகும்! பிறகு அணைந்து விடும்! மோ(ச)டி வித்தைகளின் இறுதி நிலை அப்படித்தான் ஆகும் என்பதை விரைவில் நடக்கவிருக்கும் 5 வடமாநில தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!

அதே நேரம் காங்கிரஸ் கட்சி தனது தூக்கத்தைக் கலைத்து வெளிவர வேண்டும்! 81 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது, நாட்டின் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களுக்கு 5 மடங்கு நட்டஈடு வழங்குவது, சாலையோர வியாபாரிகளின் வாழ்வுரிமையைக் காத்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வழங்கியது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தது போன்ற நல்ல சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல பிரச்சாரக் குழுக்களை அமைத்து செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது!

குறிப்பாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவும், பிரியங்கா காந்தியை பிரச்சாரக்குழு தலைவராகவும் முன்னிறுத்தினால் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புற மக்களும் காங்கிரஸை நோக்கி திரள்வார்கள்!

மோடிக்கு நகர்ப்புற மக்களுக்கு மத்தியில்தான் பரபரப்பு இருக்கிறது. ஆனால் நேரு குடும்பத்திற்குத்தான் கிராமப்புறங்களிலும் செல்வாக்கு இருக்கிறது.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்திலும், ஈழத்தமிழர்களுக்கான துரோகம் விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதன் வெற்றி பிரகாசமாகும்!

இன்னும் காலமிருக்கிறது! மோ(ச)டியை முனை மழுங்கச் செய்யும் மாநில கட்சிகளுடனான உறவை அக்கட்சி வலுப்படுத்திக் கொள்வதும் நலம் பயக்கும்!
அதேசமயம், சிறுபான்மையினரும், நலிந்த பிரிவு மக்களும் மோ(ச)டியைக் கண்டு பதறத் தேவையில்லை.

இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் உணர்வோடும், சகோதரத்துவத்தோடும் நம்மோடுதான் உள்ளார்கள்!

மோ(ச)டி அலை வீசவில்லை! வீசுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது!


ராஜபக்ஷே சந்திக்கும் அதே நெருக்கடிகளை மோ(ச)டியும் சந்திக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

அவரை முன்னிறுத்துவது அரசியல் பேரழிவு என அத்வானியே கூறியுள்ளார்! அது யாருடைய அரசியல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

எனவே சமூக ஊடகங்களில் பணியாற்றும் மத நல்லிணக்க மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் குஜராத்தின் கிராமப்புற நிலை குறித்தும், அங்கு மோடியின் தவறான நிர்வாகக் குறைகள் குறித்து புள்ளி விபரங்களைக் கணக்கெடுத்து, ஒப்பீட்டளவில் மோடி, பீஹாரின் நிதிஷ்குமாரின் சாதனைகளை விட பின்தங்கியுள்ள உண்மைகளை அம்பலப்படுத்திட வேண்டும்!

மாறாக, தனிநபர் விமர்சனம் மூலம் மோடிக்கு அனுதாபத்தையோ, விளம்பரத்தையோ ஏற்படுத்திக் கொடுத்திடக் கூடாது!

காரணம் மோடி அதைத்தான் விரும்புகிறார்.



M.தமிமுன் அன்சாரி ,
 மாநில பொது செயலாளர்
 மனிதநேய மக்கள் கட்சி ! !

3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை..


பஹ்ரைன், செப்டம்பர் 19: 3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை

தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட். இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார்.


பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருக்கு கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை வாங்கி தரும் தரகராக சிக்கந்தர் சாம்ராட்டும் பஹ்ரைனில் தங்கி தொழில் செய்து வந்தார்.

இவரது தொழில் கூட்டாளி சுமார் 65 ஆயிரம் பஹ்ரைன் தினார்களை மோசடி செய்துவிட்டார். அதனால், 2010ம் ஆண்டு பிறந்த மகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் வாங்க முடியாமல் போனது.

இதற்கிடையில், மனைவியின் நர்ஸ் வேலைக்கான ஒப்பந்தமும் காலாவதியாகி விட்டது. குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத சாம்ராட், மனைவி, பிள்ளைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட முடிவு செய்தார்.

கடைசி மகளுக்கு பாஸ்போர்ட் எடுக்காததால் அவளை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மோசடி செய்த பஹ்ரைன் ஆசாமி மீது கோர்ட்டில் வழக்கு போட்டு விட்டு நீதி தேவனின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாததால் பல வக்கீல்கள் இவரது வழக்கில் ஆஜராகாமல் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றனர்.

குடித்தனம் இருக்கும் வீட்டின் வாடகை பாக்கி ஆயிரம் தினாருக்கு மேல் ஏறிவிட்ட நிலையில் 3 வயது மகளை பார்த்துகொள்ள யாரும் இல்லாததால் வேலைக்கு கூட செல்லாமல் பூங்கா, மசூதி, கார் நிறுத்துமிடம் என கடந்த 6 மாத காலமாக சரியான உணவு இல்லாமல் சிக்கந்தர் வெட்டவெளியில் மகளுடன் காலம் கடத்தி வருகிறார்.

இந்திய தூதரகம் அங்கு என்ன தூங்கிகொண்டா இருக்கு? இவருக்கு உதவ முன் வரவேண்டும்.



முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்: பாதையை முற்றிலும் மாற்றுவதே நிறந்தர தீர்வு! TNTJ கூட்டத்தில் முடிவு.



முத்துப்பேட்டை, செப்டம்பர் 19: முத்துப்பேட்டையில் நடைபெற்ற  வினாயகர் ஊர்வலத்தின் போது விஷமிகள் ஒரு வீட்டின்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது சம்மந்தமாகவும் ஊர்வலத்திற்க்கு அனுமதி கொடுத்த நேரத்தில் வராமல் வேண்டுமென்றே இரவு வேளையில் ஊர்வலம் வந்தது சம்மந்தமாகவும் இதே நிலை வருங்காலங்களில் தொடராமல் இருக்க என்ன செய்யலாம் என முடிவு எடுக்க முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் கிளைகளின் ஒருங்கினைந்த கூட்டம் ரஹ்மத் பள்ளிவாசலில் நடந்தது.

பல வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்துவர காரனம் இந்துக்கள் அதிகமக வாழும் பகுதிக்குள் ஊர்வல பாதையை அமைத்து கொள்ளாமல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிக்குள் பிரச்சனை செய்ய என்றே ஊர்வலம் வருவதுதான் காரனம் என்பது தெளிவாக தெறிகிரது.

நாளைக்கு முஸ்லிம்கள் எதாவது ஒரு ஊர்வலம் எனும் பேரில் இந்து பகுதிக்குள்தான் போவோம் என சொன்னால் எப்படி சட்டம் ஒழுங்கை காரனம் காட்டி அனுமதி கொடுக்க மாட்டார்களோ அதே போல இவர்கள் வினாயகரை தூக்கிகொண்டு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் வர அனுமதிக்ககூடாது.

எத்தனையோ தடவை எத்தனையோ வாக்குறுதிகள் அவர்களிடம் பெற்றுகொண்டு அனுமதி கொடுத்தும் அதை அவர்கள் கொஞ்சம்கூட மதிக்காமல் மீறியே வருகிறார்கள்.

காவல்துறையும் இதற்க்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இனி அடுத்தவருடம் நடக்காது என நம்மை சமாதனபடுத்துவதுதான் வாடிக்கையாகி விட்டது.

இதனால் இனிவரும் காலங்களில் மக்கள் அமைதியாக வாழ  ஊர்வல பாதையை மாற்றி அமைப்பதுதான் ஒரே வழி என கருதுகிறோம்.

ஊர்வல நேரத்தை காலை 10 மனிமுதல் பகல் 2 மனிக்குள்ளாகவும்  மன்னார்குடி ரோடு வழியாக ECR ரோட்டில் போக பாதையை மாற்றி அனுமதி கொடுக்கும்படியும்,நேற்று தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் மனு கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் நகல்  டிஎஸ்பி,  எஸ்பி,  டிஐஜி, ஐஜி,  இன்னும் முதலமைச்சரின் தனிபிறிவு அதிகாரி ஆகியோருக்கும் தவ்ஹித்ஜமாத்  மாவட்ட,  மாநில தலமைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 31-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம்.


துபாய், செப்டம்பர் 18: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG NO:32/2009). 31 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகிற 20-09-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக 7 மணியளவில்  (HOR AL ANZ) தலால் சூப்பர் மார்கெட் பில்டிங் T.E.S. யூசுப் சுஹைல் & நண்பர்கள் ரூமீல் நடைபெற உள்ளது. எனவே நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாக குழுவை தேர்ந்தேடுத்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.   

மேலும் தொடர்புக்கு:

M .ஷாகுல் ஹமீது              N.ஷேக் தாவூது              A.ஹாஜா நஜிபுதீன்       
   (052 – 7140077)                        (055 – 1878908)              (055 – 7122698)

 T.E.S.யூசூப் சுஹைல்               H. தாவூது கான்          N. நாசர்                                      


  (050 – 9806207)                      (055 -  4725223)        (050  - 6406390)      


தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ், ASNS. அப்துல் பாரி.

தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம்.

தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம்.

சென்னை, செப்டம்பர் 18: கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

சோ அவர்கள் பிஜேபியிடன் ஒரு மெகா திட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுத்த யோசனை கூறியுள்ளார். அதுதான் மும்மூர்த்திகள் திட்டம். ஜெயலலிதா, ரஜினி, மோடி ஆகிய மூவரும் ஒன்று சேர்வதுதான் இந்த மெகா திட்டம். தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரஜினியை தலைவராக்கி, முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கெளரவமான எண்ணிக்கையுடைய சீட்டுகளை பெற்று, மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதுதான் சோவின் மெகா திட்டம்.

 இந்த திட்டத்திற்கு முதலில் ரஜினி தயங்கினாலும் பின்னர் ஒப்புக்கொண்டுவிட்டுவிட்டார் என்றுதான் தெரிகிறது. ரஜினிக்கு மோடி நெருங்கிய நண்பர் என்பதால் அவர் உடனடியாக இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவேதான் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் சோ.

ஆனால் ஜெயலலிதா உடனடியாக பதில் கூறவில்லையாம். ஆலோசித்து பதில் சொல்வதாக கூறியுள்ளார். பிரதமர் கனவில் இருக்கும் ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொள்வாரா என தெரியவில்லை. ஆனால் மோடி கட்டாயப்படுத்தினால் ஜெயலலிதா மறுக்க மாட்டார் என்றே சோ நம்பிக்கையுடன் உள்ளாராம்.

இந்த திட்டத்தின்படி வரும் லோக்சபா தேர்தலில் ரஜினியை ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கவைத்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு முக்கிய பதவியும் கொடுக்க மோடி உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.


முத்துப்பேட்டைவிநாயகர் ஊர்வலம் -உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய இந்து முன்னணி கலவர கும்பல் :







முத்துப்பேட்டை, செப்டபர் 18: முத்துப்பேட்டையில் பா.ஜ.க. இந்து முன்னணி சார்பில் 21 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. 

ஊர்வலத்தில் தில்லைவிளாகம், வடக்காடு, கல்லடிக்கொல்லை, செங்கங்காடு, உப்பூர், மங்களூர், கீலனமங்குரிச்சி, மருதங்கவெளி உட்பட இடங்களிலிருந்து சிலைகள் எடுத்துவரப்பட்டன. இந்த ஊர்வலம் ஜாம்புவோனோடை வடகாட்டிளிருந்து புறப்பட்டு தர்கா மேலக்காடு கோரையாறு பாலம் வழியாக ஆசாத் நகர் திருத்துறைப்பூண்டி ரோடு, பழைய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை ரோடு பங்கலாவாசல், செம்படவங்காடு, வழியாக பாமினி ஆறு சென்று கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் 12 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

திருச்சி ஐ.ஜி. ராமசுப்ரமணியம் தலைமையில் தஞ்சை டி.ஐ.ஜி.அமல் ராஜ் மேற்பார்வையில் திருவாரூர் எஸ்.பி. காளிராஜ் மகேஷ் குமார், தஞ்சை எஸ்.பி. தர்மராஜன், நாகை எஸ்.பி. சி.பி. சக்ரவர்த்தி, அரியலூர் எஸ்.பி. ஜாவுல் ஹக், தலைமையில் 50 டி.எஸ்.பி. 100 இன்ஸ்பெக்டர், 200 சப் இன்ஸ்பெக்டர் உட்பட சுமார் 3000 த்திற்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலவரத்தை தடுப்பதற்கு ஏராளமான வஜிரா வாகனம், கண்ணீர் புகை வாகனம், தீ அணைப்பு வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. 

முத்துப்பேட்டையில் இந்துக்களும் ,முஸ்லீம்களும் பழங்காலந் தொட்டே அண்ணன் தம்பிகளாகவும் ,மாமன் மச்சான் களாகவும் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வருகின்றனர் .இதனை பொறுக்க முடியாத இந்துமுன்னணி ,ஆர் எஸ் எஸ் போன்ற மதவாத தேசவிரோத ,கும்பல்கள் வருடாவருடம் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒரு வன்முறை ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர் .


இவர்கள் நடத்தும் இந்த வன்முறை ஊர்வலத்திற்கு முத்துப்பேட்டையில் உள்ள பெரும்பான்மையான  இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்ற காரணத்தினால் வெளியூர்களிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர் 



.இந்த ஊர்வலத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு தாராளமாக சாராய சப்ளை செய்யப்பட்டு ,இஸ்லாமியர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடப்படுகிறார்கள் .இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் உதவியால்  சர்ச்சை குள்ளான பகுதியான பங்களா வாசல் வழியாக பேட்டைவரை  நடந்துகொண்டிருந்த வழித்தடத்தை மாற்றியமைக்க உத்தரவிட்டது  உயர்நீதி மன்றம் .


உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் -ஊர்வலம் சரியாக 4.30 மணிக்கெல்லாம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளை கடந்துவிட வேண்டும் என்றும் ,வணக்கஸ்தலங்கள் அருகில் ஊர்வலம் செல்லும் போது  வெடி வெடிப்பதோ ,மேல தாளங்கள் முழங்குவதோ ,கூடாது என்றும் -பிற மதத்தவரை புண்படுத்தும் கோஷங்கள்  போடுவதோ கூடாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது .


ஆனால் இந்த உத்தரவுகளை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் "இந்தியா இந்து நாடு" பத்து காசு முறுக்கு -பள்ளிவாசலை நொறுக்கு என்றும் சட்ட விரோதமான கோஷங்களை எழுப்பி சென்றனர் .இதுமட்டுமில்லாமல் வழக்கத்திற்கு மாறாக சரியாக நான்கரை ,ஐந்து மணிக்குள்ளாக பழைய பேருந்து நிலையம் ,பங்களா வாசல் பகுதிகளை கடக்காமல் ,சரியாக 8 மணிக்குத்தான் பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர் .


இது உயர்நீதி மன்ற உத்தரவிற்கு எதிரானதாகும் .வருடாவருடம் இவர்கள் நடத்தும் இந்த அராஜகத்தை முத்துப்பேட்டையில் வாழும் முஸ்லீம்கள் மட்டுமல்ல ,மனிதநேயத்தை ,மதநல்லிணக்கத்தை விரும்பக்கூடிய இந்துக்களும் வன்மையாக கண்டிக்கிறார்கள் . முத்துப்பேட்டையில் மட்டுமல்ல இந்த நாடு முழுவதுமே அமைதியும் ,மதநல்லிணக்கமும் நிலவ வேண்டுமானால்  ஆர் எஸ் எஸ் ,இந்து முன்னணி ,பாஜக போன்ற மதவாத ,தேசவிரோத ,பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்படவேண்டும் .



தொகுப்பு :ஜே.ஷேக்பரீத் 



முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம் வீடு மீது தாக்குதல்.! PFI கடும் கண்டனம்.




முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் சரியாக 8 மணிக்கு மேலே தான் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வந்தது. அப்போது கடுமையான மழையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் இருந்தது. அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஊர்வலத்தில் வந்த ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்கள் பங்களா வாசல் அருகில் உள்ள வீட்டிற்குள்  கற்களை எறிந்துள்ளனர், இதனால் அந்த வீட்டில் உள்ள முன்வாசால் கேட்டு பெரிய சப்தத்துடன் உடைந்து காணப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A. அபூபக்கர் சித்திக் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். 

இதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தியா முழுவதிலும் இஸ்லாமியர்களிடம் கலவரத்தை தூண்டி வன்முறையை அதிகப்படுத்த வேண்டும் என்ற பெயரில் வருடா வருடம் இந்த விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம் என்றும், ஆனால் முத்துப்பேட்டையை பொருத்தவரையில் காவிக்கும்பல் கலவரத்தை தூண்டி வன்முறையை வளர்த்து சொத்துக்களை சூறையாட நினைக்கிறார்கள் என்றும், இன்று நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் முஸ்லிம் வீட்டை கல்லெறிந்து தாக்கிய ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

தகவல்:  ஜே: ஷேக் பரீத் 







முத்துப்பேட்டையில் கனமழை. மழையில் நுழைந்த பிள்ளையார், தாமதாமான ஊர்வலம்.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் மாலை 7 மணி முதல் தொடர்ந்து 20 நிமிடம் கனமழை பெய்து வருகிறது, இதனால் ஊரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் இருட்டில் மூழ்கி உள்ளது. இதானால் கலவர பிள்ளையார் மலையில் பாதிலேயே நுழைந்தும் கரைந்தும் நடு ரோட்டிலேயே கரைந்தும் செல்கிறார்.


முத்துப்பேட்டையில் இன்று தேசவிரோதிகளின் ஊர்வலம்!





முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்ளும் காரணம் காவிகளின் கலவர திட்டங்களும், காவல்துறையின் நெருக்கடிகளும்தான். ஆம் தமிழகம் முழுவதும் இந்த ஊர்வலம் நடந்துவிட்டாலும் கடைசியாகத்தான் முத்துப்பேட்டையில் நடத்த தேதி குறிப்பார்கள் காவிகளின் இராமகோபலன்,சிபிஆர்,ஹெச் ராஜா போன்ற வெறியர்கள் தலைமையில் காவிகள் குடிகாரர்களாக மாறி காவிதுணிகளை தலையில் கட்டிக்கொண்டு முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் ஊர்வலமகா வருவார்கள். அப்படி வருபவர்கள் அமைதியாகவோ அல்லது சாமிகளில் கோஷங்களையோ போட்டுச்சென்றால் அதனால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை ஆனால் இவர்கள் போடும் கோஷமா மததுவேசத்தை வெளிப்படுத்தி கலவரத்தை தூண்டுவதாக அமையும் பத்துகாசு முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு, இந்தியா இந்து நாடு ஓடு ஓடு பாகிஸ்தானுக்கு ஓடு, இந்த படை போதுமா இன்னம் கொஞ்சம் வேனுமா போன்ற கோஷங்களையும் அறுவருக்கத்தக்க செயல்களையும் செய்துகொண்டே செல்வார்கள். இடையில் சில இடங்களில் கற்களை கொண்டு முஸ்லிம் சொத்துக்கள் தாக்கப்படும். 



ஊர்வலத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே 3000 த்துக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு இறக்கப்படுவார்கள், ஐ.ஜி தலைமையில் பல மாவட்ட எஸ்.பிக்களின் கண்காணிப்பில் பல்வேறு டிஸ்பிக்களின் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்படுவார்கள். மெயின் ரோட்டிற்கு வரும் அனுத்து சாலைகளும், வழிகளும் தட்டிகளை கொண்டும், கம்புகளை கொண்டும் அடைக்கப்படும். பல்வேற்று கண்காணிப்பு கேமராக்கள் சுழன்று கொண்டே இருக்கும், வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் என தயார் நிலையில் நிறுத்தப்படும். ஊர்வலத்தன்றோ அல்லது அதற்கு முன்பு நாள் மாலையோ காவல்துறையின் பிரமாண்ட ஊர்வலம் வலம் வரும். ஊர்வலத்தின் இரு பக்கமும் காவல்துறை அணிவகுத்து செல்வார்கள். இருந்தாலும் கலவரக்காரர்களை கட்டுபடுத்த முடியாது அந்தளவிற்கு அவர்களின் கூச்சலும் செயல்களும் அமைந்திருக்கும். 



இதோ அன்றைய வந்துவிட்டது இன்றுதான் 17-09-2013 மாலை 3.00 மணிக்கு ஜாம்புவனோடையிலிருந்து புறப்படும் காவிகளின் ஊர்வலம் ஜாம்புவனோடை தர்ஹா வழியாக கோரையாற்று பாலத்தை கடந்து ஆசாத்நகர் பள்ளிவாசல்,கடைத்தெருக்களை அடையும் பின்னர் அங்கிருந்து மீராஉசேன் மருத்துவமனைக்கு செல்லும் அப்போது அங்கே கோவிலூர், மருந்தங்காவெளி, காளியம்மன் கோவில் தெரு போன்ற பல பகுதிகளில் இருந்து வருகை தந்து தயாற் நிலையில் நின்றுகொண்டிருக்கும் பிள்ளையார்களின் காவிக்கூட்டம் இந்த ஊர்வலத்தோடு இணைந்துகொள்ளும் அதோடு பழைய பேரூந்து நிலையத்தை அடைந்து நியூ பஜார் வழியாக புதுப்பள்ளிவாசல், பங்களாவாசல், ஓடக்கரை, அரக்காசு அம்மா தர்ஹா, ரஹ்மத் ஸ்கூல், ரஹ்மத் பெண்கள் பள்ளிவாசல், ரஹ்மத் பள்ளிவாசல், யாகூப்சாரின் பிரிலியன்ட் ஸ்கூல் வழியாக முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் சென்று செம்படவான் காடு வழியாக சென்று அங்கிருந்து பாமினியாற்றில் கரைக்கப்படும். ((இதற்கு முன்பு பங்களாவாசலில் இருந்து முஸ்லிம்களின் முக்கிய பகுதிகளான பெரியக்கடைத்தெரு வழியாக முகைதீன் பள்ளிவாசல், குட்டியார் ஜூம்ஆ பள்ளிவாசல், அரபு சாகிபு பள்ளிவாசல் வழியாக சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தினர் கடுமையாக பிரச்சணைகளை உருவாக்கியதால் நீதிமன்றத்தில் உத்தரவுப்படி மேலே கூறிய வழிகளை மாற்றிவிட்டனர்))



நேற்றய முன்தினம் முதல் முத்துப்பேட்டையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காவலர்களின் கடுமையான கட்டுபாடுகள் முஸ்லிம்களை மன உலைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. பெரியக்கடைத்தெரு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம்கடைகளை மட்டும் குறிவைத்து உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகளின் முகவரிகள்,தொலைபேசி நம்பர்கள் விசாரிக்கப்பட்டு காவல்துறையால் வாங்கப்பட்டுள்ளன. ஏவனோ ஊர்வலம் நடத்துவதற்கு முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் என்று தற்போது புதிதாக கண்கானிப்பு கூண்டுகள் அமைக்கபட்டும் கண்கானிக்கபடுகின்றன. இரண்டுநாட்களாக அறிவிக்கப்படாத காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கள் முத்துப்பேட்டை கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 



காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிலவற்றை பாராட்டலாம் ஆனாலும் பாதுகாப்பு என்ற பெயரில் சில அத்து மீறல்களையும் நாம் கண்டிக்கிறோம். இத்தனை ரணகளங்களையும் தாண்டி, அரசுக்கு பல்லாயிரம் கணக்கில் செலவுகள் வைக்கப்பட்டும், பொதுமக்களின் அன்றாட வாழ்கைக்கு சவால் விடபட்டும், சில அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டும், பொதுமக்களின் கலவர பயத்திற்கு நடுவிலும் நடைபெறும் இந்த காவிகளின் ஊர்வலம் தேவைதானா... அரசோ அல்லது கவால்துறையோ இதனை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தாமல் ஏன் இவ்வளவு சிறமங்கள் எடுக்க வேண்டும். 



இன்று 17-09-2013 இன்னும் சற்று நேரத்தில் துவங்கி வர இருக்கும் காவிகளின் ஊர்வலம் மூலம் எந்த பதற்ற சூழ்நிலைகளும் உருவாகிவிடாமல் இருக்க அனைத்து தரப்பும் அமைதிகாக்க வேண்டும் எனவும் அன்பு வேண்டுகோள் வைக்கிறோம். நாய்கள் ரோட்டில் கற்றிக்கொண்டு சென்றாலும் அதனை காவல்துறை பார்த்துக்கொள்ளும் என்று முஸ்லிம்களும் மவுனம் காப்பதே சாலச்சிறந்தது. அதனையும் மீறி காவிகள் கலவரங்களை தூண்டினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாரான நிலையிலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். 



இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற கலவர ஊர்வலங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே முத்துப்பேட்டை அல்ல தமிழக அனத்தை தரப்பு மக்களின் வேண்டுகோள்.....



நமது நிருபர்:

முத்துப்பேட்டை முகைதீன்

மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பி - ஸ்கார்ப் - புர்கா ஆர்டர்! பாஜக வின் நாடகம் அம்பலம் !!



State BJP president G Kishan Reddy presenting the entre pass to muslim women after inaugurating the Narendra Modi Nava Bharat Yuva Bheri off line registration at state office. |A Suresh Kumar

ராஜஸ்தான் மாநிலம் 'ஜெயய்ப்பூரில்'  நடக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்காக, 

முஸ்லிம்கள் அணியும் தொப்பி, பெண்கள் அணியும் ஸ்கார்ப் - புர்கா போன்ற ஆடைகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, ராஜஸ்தான் பாஜக தலைவரான 'வசுந்தரா ராஜே'விடம் கேட்கப்பட்டபோது, இதை ஒப்புக் கொண்ட வசுந்தரா,

ஆம்,

மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அதிகளவில் அழைக்கப்பட்டுள்ளனர்.

பேரணியில் கலந்துக் கொள்ளும் முஸ்லிம் ஆண்கள், தொப்பி அணிந்தும், பெண்கள், பர்தா அணிந்தும் வரவேண்டும் என பாஜக மேலிட ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கான "டிரஸ் கோட்" முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

'அஜ்மீர் தர்கா' ஊழியர்கள், அங்கு வரும் யாத்ரீகர்கள் என பெருமளவில் முஸ்லிம் தலைகளை பேரணியில் கலந்துக் கொள்ள செய்ய திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.

இப்படி, பெயர் தாங்கி முஸ்லிம்கள் சிலரையும்,

வேறு சிலரை, முஸ்லிம்கள் அணியும் தொப்பி, புர்கா அணிவிக்கப்பட்டு 'ஆள்மாறாட்டம்' செய்தும், கூட்டத்தை காண்பிக்கும் முயற்சியில் ராஜஸ்தான் பாஜக ஈடுபட்டுள்ளது.

இதற்காக, 8,000 தொப்பி, 12,000 புர்கா, சில ஆயிரம் ஸ்கார்ப் களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம்

'மோடியின் கூட்டத்தில் அலை மோதிய முஸ்லிம்களின் கூட்டம்'

என்ற தலைப்பில் மீடியாக்களின் விளம்பரம் பெற்று, முஸ்லிம்களும் பாஜக பக்கம் வரத்துவங்கி விட்டது போன்ற ஒரு மாயை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளனர்.

குறிப்பு :

மோடியின் 'ஹைதராபாத்' கூட்டத்துக்காக முதலில் பதிவு செய்ததே ஒரு முஸ்லிம் பெண் தான், என ஏற்கனவே இவர்கள் செய்த பித்தலாட்டவெட்ட வெளுச்ச்சமாகி உள்ளது.

தொகுப்பு :ஜே .ஷேக்பரீத்  .



தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)