முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை SPKM தெருவில் தீப்பிடித்து எறிந்த வாகனங்கள் :போலீசார் விசாரணை










முத்துப்பேட்டை, மே 31: முத்துப்பேட்டையில் உள்ள SPKM தெருவில் அதிகாலையில் 2 மணியளவில்  வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது .இந்த விபத்தில் ஒரு போலேரோ, ஒரு பைக், ஒரு புல்லெட், ஒரு சைக்கிள் ஆகிய வாகங்கள் தீயில் கருகின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தீப்பற்றி எறிந்த போலேரோ GT  கோல்டன் ஜஹபர் அலிக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.

தகவல்: M.M. பைசல் BBA 

முத்துப்பேட்டையில் நடந்த கொடூர விபத்து மனிதநேயப்பணியில் த மு மு க



முத்துப்பேட்டை, மே 29: முத்துப்பேட்டையில் 27.5.13 காலை 8 மணியளவில் சுந்தரம் புறவழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இந்த சாலை விபத்தினை கேள்விப்பட்ட உடன் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் உதவி செய்யும் தமுமுக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது. அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் இறந்தவரின் உடலினை பொது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக, அவசர அவசரமாக முகத்தினை மூடி விட்டார்கள். ஏனெனில் இறந்தவரின் தலை பகுதியானது பலத்த அடிப்பட்டதால் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தது.

கோட்டைப்பட்டினம் – கோட்டை ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 35) த.பெயர். பெரியசாமி, அதே ஊரை சார்ந்த மூர்த்தி (வயது 40) தந்தை பெயர். பிச்சை. கோபால் மற்றும் மூர்த்தி இருவரும் ஆடு விற்கும் தொழில் செய்பவர்கள்.

இருவரும் ஆடு விற்கும் தொழில் சம்மந்தமாக திருத்துறைப்பூண்டி சென்று விட்டு தம்பிக்கோட்டையில் உள்ள ஒரு வியாபாரியை சந்திப்பதற்காக ஆலங்காடு புறவழிச்சாலை வழியாக பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது சுந்தரம் பகுதியில்; எதிரே வந்த கிரேன் மீது பைக் மோதி சம்பவ இடத்தில் கோபால் இறந்து விட்டார். காயமடைந்த மூர்த்தியை முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு விட்டு, அவரேயும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

காலை 8 மணிக்கு நடந்த சம்பவமாக இருந்தாலும் அதிகளவில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இருப்பினும், பொது மக்கள் மத்தியில் பீதியையும், கவலையையும், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் அப்துல்ரஹ்மான் M.P கோரிக்கை:

Photo: ஊட்டி செல்ல வேலூரில் இருந்து வந்து இருந்த முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நீலகிரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மேட்டுபாளையம் வந்தார் அவரை நகர நிர்வாகிகள் வரவேற்றனர், பின்னர் மலை ரயிலில் அவருக்கென இடம் ஒதுக்கபட்டுஇருந்தது .

நீலகிரி எக்ஸ்ப்ரஸில் வந்தபயணிகளில் 2,3 நபர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைத்தது மற்றவர்களுக்கு இடம் இல்லை நீலகிரி எக்ஸ்பிரஸ் வருவதற்கு முன்பாகவே இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது, இதனால் வைடிங் லிஸ்டில்  உள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர், இதனை சரியாக வரைமுறை படுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டரிடம் அப்துல் ரஹ்மான் M P அவர்கள் கோரிக்கை விடுத்தார்,

மணிச்சுடர் நிருபர் A.அப்துல் ரசாக் ..



உதயமார்த்தாண்டபுரம், மே 25: ஊட்டி செல்ல வேலூரில் இருந்து வந்து இருந்த முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நீலகிரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மேட்டுபாளையம் வந்தார் அவரை நகர நிர்வாகிகள் வரவேற்றனர், பின்னர் மலை ரயிலில் அவருக்கென இடம் ஒதுக்கபட்டுஇருந்தது .

நீலகிரி எக்ஸ்ப்ரஸில் வந்தபயணிகளில் 2,3 நபர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைத்தது மற்றவர்களுக்கு இடம் இல்லை நீலகிரி எக்ஸ்பிரஸ் வருவதற்கு முன்பாகவே இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது, இதனால் வைடிங் லிஸ்டில் உள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர், இதனை சரியாக வரைமுறை படுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டரிடம் அப்துல் ரஹ்மான் M P அவர்கள் கோரிக்கை விடுத்தார்,

மன்னார்குடியில் தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: விவசாயி அடித்துக்கொலை

மன்னார்குடியில் தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: விவசாயி அடித்துக்கொலை

மன்னார்குடி, மே 25: எடை மேலையூர் அருகே உள்ள வடக்கு கண்டியன்தெரு காலனியை சேர்ந்தவர் சேவையன் (60), விவசாயி. இவரது தம்பி அழகிரி (48). சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவமணி (40). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

விவசாயி சேவையனின் முதல் மனைவி கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடி விட்டார். இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் 2-வது மனைவியும் நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து விடவே சேவையன் மனவிரக்தியில் காணப்பட்டார். இதனால் பக்கத்து வீட்டில் வசித்துவந்த தம்பியின் மனைவி தவமணி அவருக்கு ஆறுதல் கூறி வந்தார். இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.

மேலும் அழகிரி சென்னைக்கு அடிக்கடி சென்று விடுவதால் தவமணிக்கும் சேவையனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அழகிரிக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் இருந்து திடீரென ஊருக்கு திரும்பி வந்த அழகிரி சேவையனுடன் தகராறில் ஈடுபட்டார். இதேபோல் நேற்று நள்ளிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த அழகிரி எனது மனைவியுடன் நீ தனிமையில் உல்லாசமாக இருக்கீறாயா? என்று கூறி வீட்டின் அருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சேவையனின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்து விட்டதை அறிந்த அழகிரி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

தகவல் அறிந்த வடுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அழகிரியை தேடிவருகிறார்கள். கள்ளத்தொடர்பு காரணமாக தம்பி அண்ணணை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி, பாக்கர் ஆகியோரை சேர்க்க சதி.! காஞ்சி ஜைனுல் ஆபிதீன் பேட்டி.




பெங்களூர், மே 24:  மத்திய சிறையில் கிச்சான் புகாரி உள்ளிட்ட நான்கு சகோதரர்களையும் சந்தித்தோம் 30 நாட்கள் காவல்துறை விசாரணையில் இருந்த புகாரி, பஷீர் ஆகியோரை முதல் 15 நாட்கள் கடுமையாக சித்தரவதை செய்துள்ளனர் கர்நாடக காவல்துறையினர்.



மதானி சொல்லித்தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியாக ஒப்புகொள்ள வேண்டும் எனவும்,INTJ தலைவர் பாக்கர் செய்யும் உதவிகள் என்ன என்றெல்லாம் கேட்டு மிகவும் கடுமையான முறையில் அடித்துள்ளனர்.



நன்கு உடல்வாகு கொண்ட முரட்டு காவல்துறை நபர்கள் நன்றாக மதுவருந்தி விட்டு கீழ்க்கண்டவாறு சித்திரவதைகளை செய்வார்களாம்.




1.பஞ்சாப் கட் - கால்தொடைகள் மீது காவலர்கள் ஏறிக்கொள்ள சிலர் முதுகை சுவற்றின் மீது சாய்த்தவாறு வைத்து விட்டு கால்களை சுவற்றின் பக்கம் வளைப்பார்கள். 



2.எரோப்லன் மெதட் - கை கால்களை கட்டி மாட்டுக்கு லாடம் கட்டுவது போல் அந்தரத்தில் தொங்கவிட்டு அடிப்பது.

இப்படி அடித்தபோது சில நேரங்களில் அவருக்கு சிறுநீர்,விந்து வெளி வந்து விட்டதாம்.


3.நிர்வானபடுத்தி விட்டு பிறப்புறுப்பில் தொடைகளில் பெற்றோலை ஊற்றி விட்டு மிளகாய் பொடி தூவியுள்ளனர்.அந்த வேதனையை பார்த்து ரசித்து சிரித்துள்ளனர்.




4.குடிகார காவலர்கள் அடிக்கும்போது வழியில் எவ்வளவு கத்தினாலும் விட மாட்டார்கள்.

மயக்கமடைந்தாள் பல்ஸ் பார்த்து சுடு நீர் ஊற்றி ஒத்தடம் கொடுத்து விட்டு pain killer spray அடித்து விட்டு மீண்டும் அடிப்பார்கள்.



5.அடிக்கும் போது வலி தாங்காமல் அல்லாஹ் என்று கத்தினால் கூபுட்றா உன் அல்லாஹ்வை வரானா பாப்போம் என்று கிண்டல் செய்வது. 




இவ்வளவு கொடுமைகளையும் சந்தித்து பொறுமையோடு துஆ செய்யுங்கள் என்று கூறிய சகோதரர் களுக்காக துஆ செய்வோம்.சட்ட ரீதி யாக ஒற்றுமையாக பாசிச காவல் துறையை எதிர் கொள்வோம்.வாய்பிருந்தால் பெங்களூர் சிறை சென்று சகோதரர்களை சந்தியுங்க

இவ்வாறு ஜைனுல்ஆபிதீன் கூறினார்.

முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஹாஜி. C.M .இப்ராஹீம் மரணம்


                                                                                

அதிராம்பட்டினம், மே 23: கடற்கரைத்தெருவைச்  சேர்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின்  மகனும், மர்ஹூம் M. நவாஸ்கான், மற்றும் M. ரெஜிஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், H. தீன் முஹம்மது, M. அயூப்கான், Y. அன்சாரி முஹம்மது ஆகியோரின் மாமனாரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் - தமிழக வேளாண் விற்பனைத்துறை  ஆய்வாளர் - அதிரை பைத்துல்மால் இணைச்செயலாளருமாகிய ஹாஜி. C.M. முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று ( 23-05-2013 ) அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின்   நல்லடக்கம் இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஹாஜி C.M. முஹம்மது இப்ராஹீம் - நினைவலைகள்!


அதிராம்பட்டினம், மே 23: அதிரையர்களால் அன்போடு "சாச்சா" என்று அழைக்கப்படுபவர்களில் மர்ஹூம்.M.M.S.அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார் மற்றொருவர் இன்று வஃபாதான மர்ஹூம் ஹாஜி C.M. முஹம்மது இப்ராஹிம் காக்கா. முன்னாள் கால்பந்து வீரரான இவர் A.M.S. அகமதுதம்பி நினைவு கால்பந்து போட்டிகளிலும் ஏனைய ஊரளவிலான போட்டிகளிலும் நடுவராகச் செயல்பட்டதோடு அதிரை பைத்துல்மால் நிறுவன நிர்வாகிகளுள் ஒருவராகவும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள்.

அதிரை பைத்துல்மாலுக்குச் சொந்தமான பல்லாவரம் கட்டிடம் குறுகிய காலத்துக்குள் கிரயம் செலுத்தப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுந்தபோது,வெளிநாடுகளிலுள்ள அதிரையர்களிடமிருந்து நிதிதிர
ட்டுவதற்காகச் சென்ற குழுவில் மர்ஹூம் C.முஹம்மது இப்ராஹிம் சாச்சா அவர்களும் இடம்பெற்றார்கள்.

பைத்துல்மால் நடத்திய குர்ஆன் மாநாடாகட்டும்,கூட்டுகுர்பானி திட்டமாகட்டும், இன்னும் பிற சேவைகளில், இவர் தன்னார்வலராக இணைந்து இவர்கள் செய்த களப்பணிகள் தற்கால இளைஞர்களே வெட்கப்படுமளவுக்கு பம்பரமாகச் சுழன்று சிறப்பாகச் செயல் பட்டதை அறிந்துள்ளேன்.

பைத்துல்மாலின் மாதாந்திர அமர்வுகளில் தவறாது கலந்துகொண்டு தகுந்த ஆலோசனை வழங்கவும் தவறியதில்லை. பைத்துல்மால் சார்பில் நடக்கும் இலவச திருமணங்களிலும் மணமக்களின் ஹக்கில் தன்பங்கு உதவிகளையும் வழங்கி பலரது துஆவிற்கு அருகதையாகியுள்ளார்கள்.

இவருடன் பழகியதில் இவரின் எளிமையையும்.. அமைதியையும் கண்டு வியந்துள்ளேன். ஹாஜி C.M.முஹம்மது இப்ராஹிம் சாச்சாவின் மவுத்து அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி பைத்துல்மாலுக்கும் நிச்சயம் பெரும் இழப்பு என்றால் மிகையில்லை. எனினும், நிச்சயிக்கப்பட்ட மரணத்திலிருந்து விதிவிலக்கு யாருமில்லை என்ற இறைநியதியை ஏற்று அன்னாருக்காக துஆ செய்வோமாக.அல்லாஹ் அவர்களது நல்லறங்களைப் பொருந்திக்கொண்டு நற்கூலியை வழங்குவானாக. ஆமின்.

முத்துப்பேட்டையில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்த C .M .இப்ராஹீம் :




அதிராம்பட்டினம், மே 23: முத்துப்பேட்டை சூப்பர் கிங்ஸ்கைப்பந்து கழகம் சார்பாக   இளைஞர்களால் வருடாவருடம்முத்துப்பேட்டை  கொத்பா பள்ளி திடலில்  மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒன்று .பொதுவாகவே விளையாட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென்றால் பரிசுகள் கொடுப்பவர்களை (SPONSORSHIP )தேடி பிடிப்பது என்பது இயலாத ,மிகவும்  கடினமான காரியமாகும் .
கடந்த நான்கு ஆண்டிற்கு முன் 10 பேர் கொண்ட அணியின் நிர்வாகிகள் பரிசை பெறுவதற்காக ((SPONSORSHIP ) அதிரைக்கு சென்றிருந்தோம் .முதலில் அதிரையில் உள்ள முக்கியஸ்தர்கள் ,செல்வந்தர்கள் ,மற்றும் அரசியல் பிரபலங்களை சந்திப்பது என்று முடிவெடுத்தோம் .பின்னர் ஒருசில பிரபலங்களை சந்தித்தோம் .பலன் ஒன்றும் இல்லை .


பரிசு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அனைவரும் கடற்கரை தெருவில் உள்ள ஒரு ஆள மரத்தடியில்  அமர்ந்தோம் .அப்போது அங்கே அதிரை சார்ந்த மாநில அளவிலான விளையாட்டு வீரர் சாகுல் வந்தார் ,பின்னர் இங்கே ஒரு ஆள் இருக்கிறார் வாருங்கள் போய் சந்திப்போம் என்று கூறி எங்களை கடற்கரை தெருவிற்கு உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார் .


அந்த வீட்டிற்கு சென்ற மறுகணமே ஒரு வயதான தோற்றத்தில் ,இளைஞர் போன்ற சுருசுருபோடு நம்மை ஒருவர் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார் .அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுத்து கவனித்த அவர் உங்களுக்கு என்ன உதவி  வேண்டும் என்று பணிவாக கேட்டார் .அப்போது நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் விளையாட்டு போட்டி நடத்துவதற்கு  பரிசு உதவி செய்ய வேண்டும் கடைசி பரிசான நான்காவது பரிசு வழங்கினால் போதும் என்று கூறினோம் .உடனே அந்த வயதானவர் குறிக்கிட்டு நான் நான்காவது பரிசெல்லாம் தரமுடியாது ...முதல் பரிசுதான் கொடுப்பேன் என்று தமாசாக பேசி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் .பின்னர்தான் அந்த நபர் மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய C .M .இப்ராஹீம் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம் .


முத்துபேட்டை சூப்பர் கிங்ஸ்வருடாவருடம்  நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு  முதல் பரிசை கொடுப்பது மட்டுமில்லாமல் ,போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வந்து வாழ்த்துரையும் வழங்கிவிட்டு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது .


மாறாத நினைவுகளுடன் :  ஜே. ஷேக் பரீத் 
                                                    


ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!

Everyone is a kind of anxiety, sadness, anger is bound to.

 உலகம், மே 23: ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.


அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.

உங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.

கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்…

இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.

உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

கவனத்தைத் திருப்புங்கள்

சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.

மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்

சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.

எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…!

மலட்டுத் தன்மையை குணமாக்க, ஆண்மையை அதிகரிக்க, மருத்துவர்கள் கூறும் தகவல்கள் :

And do not worry about anything at a young age not to have children after marriage will go round
 உலகம்,
மே 23:  
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.


ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
* காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

* பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

* சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும்.

48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் தரும் தகவல்கள்..




உலகம், மே 17: முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.



கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.



கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.



இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.



கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.



கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.



அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கீழே ஆண், மேலே பெண் முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.



கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.



அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.



கர்ப்ப காலத்தின்போது வாய் வழி உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல


ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.


தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.



பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.

எனக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள், பீ.ஜே .வின் உருக்கமான கடிதம்.

சென்னை மே 15:  அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள். 
என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள். அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர். ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள்.
என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர். அவர்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது என்றாலும் அந்த உதவிகளை நான் கன்னியமான முறையில் மறுத்து விட்டேன். எனது மருத்துவ வகைக்காக பணமாகவோ பொருளாகவோ எந்த உதவியும் யாரிடமும் நான் பெறவில்லை. அதை நான் விரும்பவில்லை. அறுவை சிகிச்சை செய்வதற்கு நான் உடன்படாததற்கு இரணடு காரணங்கள் இருந்தன. எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக் கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம். அறுவை சிகிச்சை என்றால் அதைப் பலரும் அறியும் நிலை ஏற்பட்டு எனக்கு உதவ முன்வருவார்கள்., என்னைக் கேட்காமலே எனக்கு உதவுவார்கள்.
 அடிக்கடி நோய் விசாரிப்பார்கள். மருத்துவமனையில் அத்கிமானோர் குழுமி நோயையும் ஒரு பந்தாவாகக் காட்டும் நிலை ஏற்படும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம். எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போம் என்று மாற்று மருத்துவ முறைகளைப் பல மாதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதுடன் கேன்சர்கட்டியின் அளவு தாறுமாறாக அதிகரித்தும் வந்தது. விசாரிப்பவர்களிடம் நன்றாக உள்ளது என்று சொல்லி அவர்கள் எனக்காக கவலைப்படுவதைத் தவிர்த்து வ்ந்தேன். ஆனால் அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உண்ர்ந்த போது எனக்கு ஏற்பட்டுள்ள வகை கேன்சருக்கு மாற்று மருத்துவம் இல்லை என்று எனக்கு தாமதமாகத் தோன்றியது. 
 எனவே அறுவை சிகிச்சை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் இதை ஒருவருக்கும் சொல்லாமல் செய்தால் தான் மேலே சொன்ன விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று கருதி என் மனைவி என் கடைசி மைத்துனன் தவிர யாருக்கும் சொல்லாமல் பிரபலமில்லாத ஒரு மருத்துவமனையில பிரபலமான டாக்டர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்காக அட்மிட் ஆனேன். ராஜபாளயம் நிகழ்ச்சியை நேற்று முடித்து விட்டு புறப்பட்டு இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்டேன். காலை 11.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை நான்கு மணி நேரம் ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. அல்ஹ்மது லில்லாஹ். மாநில நிர்வாகிகளுக்கோ, உறவினர்களுக்கோ, வேறு நண்பர்களுக்கோ இதை நான் தெரிவிக்கவில்லை.
என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் செலவு செய்து வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நான் அறிவேன் மேலும் மருத்துவ மனையில் கூட்டமாக குழுமி அது ஒரு செய்தியாகவும் பரபரப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதாலும். ஒருவருக்கும் சொல்லவில்லை ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் மாநில நிர்வாகிகளுக்கும் உறவினர்களுக்கும் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததைத் தெரிவித்தேன். துன்பம் நேரும் போது மற்றவர்களின் ஆறுதலை அனைவரும் விரும்புவார்கள்.
ஆனால் இயல்பாகவே எனக்கு துன்பங்கள் நேரும் போது யாரும் அனுதாபம் காட்டினால் அது குறித்து அக்கறை காட்டினால் அது எனக்கு ஆறுதலைத் தருவதற்கு பதிலாக சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நான் இது போன்ற விசாரணைகளை விரும்புவதில்லை. எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. எனவே தான் நான் ஒருவருக்கும் சொல்லாமல் என் சொந்தச் செலவில் யாருடைய உதவியையும் தயவையும் நாடாமல் நானே அல்லாஹ்வின் அருளால் என் பிரச்சனைக்கு என்னால் இயன்ற தீர்வைக் கண்டுள்ளேன். ஆப்ரேஷன் முடிந்து நான் மனஉறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். 
இதனால் தான் நானே உட்கார்ந்து இதை கம்போஸ் செய்து நானே இணைய தளத்தில் ஏற்ற முடிந்தது. இதை நான் அனைவருக்கும் தெரிவிக்கக் காரணம் மாநில நிர்வாகிகளிடமும் என் குடும்பத்தாரிடமும் ஏன் ஒருவருக்கும் சொல்லவில்லை என்று யாரும் கேட்டு அவர்களைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பது தான். அவர்களுக்கே நான் சொல்லாத போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆங்கில மருத்துவர்கள் இதன் மூலம் பூரண குணமடைய 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனிதர்கள் தான். அவர்கள் கூறுவது போல் குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான் .
அன்புடன்
 பீ.ஜைனுல் ஆபிதீன்

காரைக்காலில் கணவருடன் படுத்திருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் கைது:



காரைக்கால், மே 13: காரைக்கால் திருநள்ளாறு அருகே உள்ள அகலங்கண்ணு கிராமம், கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 30). இரவு கணவன், மனைவி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.45 மணியளவில் வீட்டின் உள்ளே யாரோ குதித்தது போன்று சப்தம் கேட்டு ஜோதி திடுக்கிட்டு எழுந்தார். 

வீட்டுக்கூரையின் ஒருபகுதியை யாரோ பிய்த்து அதன் வழியாக வீட்டினுள் குதித்துள்ளது தெரிய வந்தது. எனவே அவர் விளக்கை போட்டு பார்த்தபோது, மேலத்தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் அவரது வீட்டினுள் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஜோதியை பார்த்து, வா உல்லாசமாக இருக்கலாம் என்று சங்கர் அழைத்ததாக கூறப்படுகிறது. 

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி, என் கணவரை எழுப்பி விடுவேன், மரியாதையாக இங்கிருந்து போய்விடு என்று எச்சரித்தார். ஆனால், நீ உன் கணவரை எழுப்பினால் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என்று சங்கர் மிரட்டினார். 

சப்தம் கேட்டு ஜோதியின் கணவர் முருகானந்தம் எழுந்ததும் சங்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சம்பவம் குறித்து ஜோதி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)



பெருமாள், ஏட்டு பன்னீர்செல்வம் ஆகியோர் சங்கர் மீது கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தர விட்டார். 

அதனையடுத்து போலீசார் சங்கரை காரைக்கால் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் சங்கருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான். அவரது மனைவி சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

"திரண்டது சமுதாயம்!... மிரண்டது அரசாங்கம்!!

Photo: "திரண்டது சமுதாயம்!... மிரண்டது அரசாங்கம்!!

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு "கிச்சான் புகாரி" உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும்.

பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.

இதற்கு முன், நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது செய்யப்பட்டுளனர்.

பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.

அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்ற நிலை தமிழகத்திலும் உருவாக்குவது வேதனைக்குரியது.

வகுப்புவாத உணர்வின்றி செயல்பட வேண்டிய உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருகின்றனர்.


சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து "அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில்" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

- maruppu

Photo: அனைத்து இஸ்லாமிய இயக்கம் சார்பாக சென்னை சேப்பாப்பாக்கம் அருகே போராட்டம் நடந்தது.....!!  பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்து அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...  அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர்... பின்பு போராட்டம் முடிவில் அனைவரயும் கைது செய்தனர் போலிசார்... ஒரு மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர்...  அல்ஹம்துலில்லாஹ்!  இந்தியாவில் எங்கேயாவது ஒரு மூலையில் குண்டுவெடிப்பு நடந்தாலும் உளவுத்துறையும் ஊடகத்துறையும் முஸ்லிம்கள மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது.இதனை காரணம்காட்டி காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கடுமையான சித்தரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறது. பிறகு முறையாக நடைபெறும் வழக்குகளின் அடிப்படையில் நிரபராதி எனவும் விடுதலை செய்யப்படுவதும்அன்றாடக் காட்சிகளாக மாறிவிட்டன.  ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் உள்ளது. நம் சமுதாய இளைஞர்களோ பொய்வழக்குகளால்பின்னப்பட்டு பாதிக்கும் மேற்பட்டோர் சிறைவாசிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்!  சமுதாயத்தின் இந்த அவலம் மாற மிகப் பெரிய அளவில் அனைத்து முஸ்லிம்களும் ஒரே அணியில் இருந்து போராட்டம் நடத்துவது சமுதாயத்தின் கட்டாய தேவையாக இருக்கிறது.,!!  சமுதாயத்தின் அனைத்து தலைவர்களின் கண்டன உரைகள் அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என நோக்கத்தோடு நடத்தப்பட்டது...

Photo: எம்புள்ள ஜெயில்ல உள்ளவங்களுக்கு உதவுனது ஒரு தப்பா?
அதுக்காக அவனுக்கு  கரண்டு ஷாக் வச்சு சித்ரவதையா?
 
எந்த மேடையும் ஏறி பேசியிராத எளிய தமிழில் பேசிய 
பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களின் கண்ணீர்
கல்லையும் கரைப்பதாக இருந்தது! 
கல் மனம் படைத்த காவல் துறையே!
அவர்களை ஏவி விட்ட ஆட்சியாளர்களே!
இவர்களின் பிரார்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!
அது ஆட்சி அதிகாரங்களை புரட்டிபோடும்!

Photo: சென்னையில் கூடு....!!

சென்னையே மிறலட்டும்..
காவல்துறையே தினறட்டும்..
ஒற்றுமை சமூதாயமே..
சிறைவாசிகளை மீட்கட்டும்..
400 ஆண்டுகள் வாழ்ந்த சமூகமே..
சிறையில் மடியுதடா...மரணபிடியில் சாவுதடா..?
மனித நேயமிருந்தால்..உன் உரிமைக்காக குரல் கொடு..!!
வா.,, வா.,, சிறைச்சகோதரனை மீட்க வா,, 

என் பார்வையில் ,,,
Photo: அனைத்து இஸ்லாமிய இயக்கம் சார்பாக சென்னை சேப்பாப்பாக்கம் அருகே போராட்டம் நடந்தது.....!!  பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்து அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...  அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர்... பின்பு போராட்டம் முடிவில் அனைவரயும் கைது செய்தனர் போலிசார்... ஒரு மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர்...  அல்ஹம்துலில்லாஹ்!  இந்தியாவில் எங்கேயாவது ஒரு மூலையில் குண்டுவெடிப்பு நடந்தாலும் உளவுத்துறையும் ஊடகத்துறையும் முஸ்லிம்கள மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது.இதனை காரணம்காட்டி காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கடுமையான சித்தரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறது. பிறகு முறையாக நடைபெறும் வழக்குகளின் அடிப்படையில் நிரபராதி எனவும் விடுதலை செய்யப்படுவதும்அன்றாடக் காட்சிகளாக மாறிவிட்டன.  ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் உள்ளது. நம் சமுதாய இளைஞர்களோ பொய்வழக்குகளால்பின்னப்பட்டு பாதிக்கும் மேற்பட்டோர் சிறைவாசிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்!  சமுதாயத்தின் இந்த அவலம் மாற மிகப் பெரிய அளவில் அனைத்து முஸ்லிம்களும் ஒரே அணியில் இருந்து போராட்டம் நடத்துவது சமுதாயத்தின் கட்டாய தேவையாக இருக்கிறது.,!!  சமுதாயத்தின் அனைத்து தலைவர்களின் கண்டன உரைகள் அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என நோக்கத்தோடு நடத்தப்பட்டது...

Photo

சென்னை, மே 13: பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு "கிச்சான் புகாரி" உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும்.

பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.

இதற்கு முன், நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது செய்யப்பட்டுளனர்.

பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.

அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்ற நிலை தமிழகத்திலும் உருவாக்குவது வேதனைக்குரியது.

வகுப்புவாத உணர்வின்றி செயல்பட வேண்டிய உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருகின்றனர்.


சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து "அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில்" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)