சென்னை, ஏப்ரல் 25: சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது முத்துப்பேட்டையை சேர்ந்த வாலிபர் முஹம்மது ரியாஸ் என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த விபத்து நேர்ந்த போது இவரின் முயற்ச்சியை கொண்டு காயமடைந்த 25 பேர்களையும் காப்பாற்றியது பெருமைக்குரியது. இவரின் மிகப்பெரிய உதவியால் பல மக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டது.
அப்போது அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல் துறையினர், பொது மக்கள், மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினார்கள்.
இந்த மனிதாபிமானத்தோடு செயல்பட்ட இந்த வாலிபரை கெளரவ விக்கும் விதமாக சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழாவும் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முஹம்மது ரியாஸ் அவர்கள், எனது ஊர் முத்துப்பேட்டை ஆகும், அங்குள்ள அனைத்து மக்களுமே மனிதநேயம் மிக்கவர்கள் என்றும், இந்த ஊரில் வாழ்ந்ததினால் எனக்கும் மனிதநேயம் தொற்றிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment