முத்துபேட்டை, நவம்பர் 28 : முத்துப்பேட்டை தெற்குக் காடு கொய்யா தோப்பு மங்களூர் இணைப்பு புதிய சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பனியும் துவங்கி செயல்பட்டு வந்தது. இதில் ஆக்கிரபிப்பு செய்த ஒரு சிலர் இந்த பணியை தடை செய்ய முயற்சித்து வருவதால் அப்பகுதியில் பெரும் பிரச்சனையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் கோர்ட்டு வரை சென்ற இந்த பிரச்சனையை அரசு பல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அந்த பணியை உடனே துவங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்களும் SDPI கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்க்கு நகர தலைவர் முஹைதீன் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் சேக் முஹைதீன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, SDPI நகர செயலாளர் காளிமுத்து, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜபருல்லா, தம்பு சாமி உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பேசினார்கள். பேரூராட்சி முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை