முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் 200 ஆண்டாக உள்ள புளிய மரத்தில் பயங்கர தீ.












முத்துப்பேட்டை, செப்டம்பர் 24 : முத்துப்பேட்டை ரயில்வேக்கு சொந்தமான புளிய மரம் ரயில்வே குடியிருப்பில் உள்ளது. இந்த மரம் அந்த இடத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த மரம் சுமார் 100 அடிக்கு பரந்தும் விரிந்தும் சுமார் 90 அடி உயரத்துக்கு  காணப்பட்ட  புளிய மரம் அந்த பகுதி பொது மக்களுக்கு நிழலாக காணப்பட்டன. அப்போது அந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் உடும்பு ஒன்றை கண்டனர் அந்த உடும்பு மரத்திற்கு உள்ளே சென்றதால் அவற்றை பிடிக்க கம்பில் துணியை கட்டி அந்த மரத்து அடிப்பகுதியில் தீயை வைத்தனர். இதனால் அந்த மரம் மல மல வென தீ பற்றி பிடித்தது. இவற்றை அணைக்க முயன்றாலும் அவற்றை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் அந்த மரம் கீழே சாய்த்து.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை






 

அஸ்ஸாம் மக்களுக்கு துணிகளை வசூல் செய்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம்.










முத்துப்பேட்டை, செப்டம்பர் 24: அஸ்ஸாமில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட நமது இஸ்லாமிய சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 4 லட்சம் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உடுத்த ஆடைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் உடை இல்லாமல் அவதிப்படும் நிலையில் சென்னையில் உள்ள மக்கா பள்ளி தலைமை இமாம் சம்சுதீன் காசிமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தன்னார்வ தொண்டாக முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள குழுவினர்கள் கடந்த    ஜும்மாஹ்  தொழுகைக்கு பிறகு முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜும்மாஹ் பள்ளி வாசலிலும் இது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட அனைத்து முஹல்லாவை சார்ந்த முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அதிகமான துணிகளை வாரி வழங்கியும் உள்ளனர். வசூல் செய்யப்பட்ட அனைத்து துணிகளையும் சென்னையில் உள்ள மக்கா  மஸ்ஜித் தலைமை இமாமிடம்  கொண்டு  சேர்க்கப்படும்  வந்த துணிகளை பிரித்து அவற்றை சரி செய்யும் பணி நேற்று காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து இளைஞர்கள் மூலம் அவற்றை பிரித்தெடுத்து சரி செய்யப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது. 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரசீத் அலி (சிங்கப்பூர்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)