முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

உலகில் முதன் முதலில் "ரோபோ இயந்திரத்தை" அறிமுகம் செய்தவர் முஸ்லிம்களே.!!!


சவூதிஅரேபியா, ஏப்ரல் 30 : உலகின் முதலவாது ரோபோ இயந்திரம் முஸ்லிம்களால் கண்பிடிக்கப்பட்டது என உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பக்ரி அஸாஸால் தெரிவித்துள்ளார். புனித மக்கா நகரின் உம் அல்குரா பல்கலைக்கழகத்தில் புத்துருவாக்க மற்றும்விஞ்ஞான மன்றம், பல்கலைக்கழகத் தலைவர் பக்ரி அஸாஸால் புதன்கிழமையன்று திறந்துவைக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள புத்துருவாக்க மற்றும் விஞ்ஞான மன்ற நிகழ்வுகளில் சவூதிஅரேபியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புத்தருவாக்க சிறப்புத்தேர்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.

"ஹிஜ்ரி 6ஆம் நூற்றாண்டில் வாழந்த அபுல்இஸ் பின் இஸ்மாயில் பின் அல்ராஸ்அல்ஜஸாரி எனப்படும் முஸ்லிம் விஞ்ஞானியால் முதலாவது நடமாடும்ரோபோ கண்பிடிக்கப்பட்டதுடன் வீட்டு வேலைகள் செய்வதற்காக இது பயன்படுத்தப்பட்டது.

துருக்கியின் நாஸிர் அல்தீன் மஹ்மூத் எனும் கலீபாவின் வேண்டுகோளுக்கு இணங்க 'நடைமுறை இயந்திரக்கலை கோட்பாட்டுச் சுருக்கம்' என்ற புத்தகத்தை அல்ஜஸாரி எழுதினார். மத்தியகாலத்தின் சிறந்தவிஞ்ஞானியாகவும் தலைசிறந்த இயந்திரப்பொறியிலாளராகவும் அல்ஜஸாரி விளங்கினார்.

அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது ரோபோ இயந்திரமானது கி.பி.1174இல் பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.
தொழுகை நேரம் வரும்போது ரோபோ இயந்திரத்தின் தலைப்பகுதியில் உள்ள குருவி கீச்சிடும். பின்னர் ரோபோ இயந்திரம் கலீபாவை நோக்கி வருவதுடன் கலீபாவுக் வுழூ செய்வதற்குத் போதுமான நீரைவழங்கும். கலீபா வுழூ செய்துமுடிந்ததுடன்,ரோபோ இயந்திரத்தில் உள்ள குருவி மீண்டும் கீச்சிடும் பின்னர் ரோபோ இயந்திரம் முன்னர் இருந்த இடத்திற்கு செல்லும்.

அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ இயந்திரத்தின் செயற்பாடு இவ்வாறாக காணப்பட்டது." மேலும் முஸ்லிம்களால் விஞ்ஞானத்துக்கு செய்யப்பட்ட பல்வேறு பங்களிப்புக்கள் பற்றி உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் தமது உரையின் போது தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், யூசுப் அலி (ஆலிம்)

கடலுக்கு ஏழையாக சென்று பணக்காரவராக திரும்பி வந்த முஸ்லிம் மீனவர்.!!


குஜராத்,ஏப்ரல் 29 : குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே இருந்தது. அதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், இப்போது அதிர்ஷ்டப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக உயரிய விலை கொண்ட 380 கோல் ரக மீன்கள் சிக்கின. மீன்களிலேயே மிக உயரிய ரகமாக, இந்த மீன்கள்தான் கருதப்படுகின்றன. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த வகை மீன்களுக்கு நல்ல கிராக்கியுண்டு. இந்த கோல் மீனின், இதயப் பகுதி, "கடல் தங்கம்' என, அழைக்கப்படுகிறது. அதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பல வகையான மருந்துக்கள் தயாரிக்க இது பயன்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மீனின் துடுப்புபோன்ற பகுதியை, மருந்து தயாரிப்பு கம்பெனிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனவாம். ஒயினை சுத்தப்படுத்தவும் இது பயன்படுமாம். இந்த வகை மீன்கள் சந்தையில், கிலோ ஒன்றுக்கு 450 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. ஒரு கோல் மீன் 15 முதல் 20 கிலோ எடை இருக்கும். ஹசன் வாகருக்கு 380 மீன்கள் சிக்கியதால், அதை தனது படகில் மட்டும் வைத்து கொண்டு வர முடியாது என்பதால், உறவினர்கள் இருவரின் படகுகளையும் வரவழைத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இந்த மீன்களை விற்றதில், அவருக்கு ரூபாய் 80 லட்சத்திற்கு மேல் கிடைத்துள்ளது. ஏழையாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர், கோடீஸ்வரராக கரை திரும்பியுள்ளார் என, ஹசன் வாகரை அனைவரும் பாராட்டுகின்றனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

சிங்கள அரசை கண்டித்து INTJ நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம்..











சென்னை, ஏப்ரல் 29 : இலங்கை மகத்தாளை மாவட்டம் தம்புள்ள எனும் ஊரில் முஸ்லிம்கள் 60 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தினர் இடித்து சேதப்படுத்தி உள்ளனர். இந்த புத்த மதத்தினவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ராஜபக் ஷே அரசானது, அவர்களுக்கு ஆதரவு காட்டும் வகையில் பேசியது மட்டும் அல்லது அடுத்து ஹிந்து மத கோவிலையும் தாக்குவோம் என்று கொக்கரித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட உலக மக்கள் அனைவரும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று (28 .04 .2012) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராஜபக் ஷே அரசை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜனாப். முஹம்மது முனீர் சேட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாநில துணைப் பொது செயலாளர் ஜனாப். செய்து இக்பால், மாநில பொருளாளர் ஜனாப். தொண்டியப்பா என்கிற அபூபக்கர் சித்திக், மாநில செயலாளர் செங்கிஸ்கான், மற்றும் சமூக ஆர்வலர் திரு. T.S.S.மணி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் மாநில செயலாளர் அபூ ஃபைசல், கலிபுல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆர்பாட்ட முடிவில் போலிசார் அனைவரையும் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
source from: www.mttexpress.com,www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)