முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை SDPI -யின் கோரிக்கையை ஏற்று உறுதியளித்த வட்ட வழங்கல் அலுவலர்!



முத்துப்பேட்டை, மார்ச் 21 : திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக முறையற்ற முறையில் சமையல் எரிவாயு கேஸ் வினியோகம் செய்யும் மரியா (HP) மற்றும் - இன்டேன் கேஸ் நிறுவனத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி 22 .03 .2012 அன்று அறிவித்தது தொடர்பாக திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜாராம். அவர்கள் முன்பாக சமாதான கூட்டம் நேற்று
20 ௦.03 .2012 மாலை நடைபெற்றது. கூட்டத்தில் SDPI கட்சி சார்பில் கேஸ் சிலிண்டர் டோர் டெலிவரி கட்டாயமாக செயல்பட வேண்டும். சிலிண்டர் வரும்போது வாடிக்கையாளர்களுக்கு தெரிவதற்கு முன்பாக புரோக்கர்களுக்கு முன் தெரிந்து அவர்களே பெற்றுச் சென்று விடுகின்றனர் என்று புகார் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் கிடைக்கப் பெறுவதில்லை. முன் பதிவு முறையில் கேஸ் பதிவு செய்தவர்களுக்கு எடுத்து வருவதை இடையில் பதிவு செய்தவர்களுக்கு வழங்குவதால் தான் பதிவு செய்த நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் முறையை கைவிட வேண்டும். ஏற்றத்தாழ்வு பாராமல் பதிவு முப்பது அடிப்படையிலே நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும், என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மரியா கேஸ் நிறுவனத்தின் சார்பில் மேலாளர் திரு. ராஜாராமன் என்பவர் போராட்டக் குழுவினர் கூறியவாறு பதிவு மூப்பின் அடிப்படையில் டோர் டெலிவரி மூலம் வரிசையாக வழங்குவதாகவும், இனிவரும் காலங்களில் வாடிக்கையாளர் வீடுகளுக்கு முறையாக சமையில் எரிவாயு உருளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். பின்னர் 22 .03 .2012 யில் நடக்க விருந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கைவிடப்பட்டது. மேலும் போராட்டக்குழுவினர் தரப்பில் சூழ்நிலை சமரச நிலைக்கு வந்ததாக உறுதியளித்தனர்.



இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் அவர்கள், நாங்கள் கொடுத்துள்ள மனுவிற்கு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் எங்களை அழைத்து பேசினார்கள், மேலும் அவர்கள் எழுத்து பூர்வமாகவும் எழுதியும் கொடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மிகப்பெரிய அளவில் இவற்றை நாங்கள் நடத்த தயாராக உள்ளோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் ஜனாப்.பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் ஜனாப்.நெய்னா முஹம்மது, நகர செயற்குழு உறுப்பினர் ஜனாப். நிசார் அஹமது, மற்றும் SDPI யின் துபாய் பிரதிநிதி ஜனாப். M .காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

O .M .சுபைத் கான், ANA .நவாப்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)