முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்.


வாஷிங்டன், மார்ச் 02 : ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. இந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க செனட்டர்களுடன் நடத்திய சந்திப்பில் ஹிலாரி இதனை தெரிவித்தார். ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் இந்நாடுகளுக்கு எண்ணெய் நெருக்கடி ஏற்படாது என்றும், அமெரிக்கா முன்வந்து மாற்று வழிகளை உருவாக்கும் என்றும் ஹிலாரி கூறினார். மூன்று நாடுகளுடனும் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இந்நாடுகள் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. நமது அணு வல்லுநர்களும், தூதரக பிரதிநிதிகளும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். ஈரான் மீது கூடுதல் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.’ என்று ஹிலாரி கூறினார். அணுசக்தி துறையில் தனது சாதனையை ஈரான் வெளியிட்டதை தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. கடுமையான தடைகளை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஈரான் மீது விதித்தாலும் ஈரான் அசரவில்லை. சில ஐரோப்பிய நாடுகளுக்கு இனிமேல் எண்ணெய் ஏற்றுமதிச் செய்யமாட்டோம் என்று ஈரான் அறிவித்திருந்தது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)