முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்


உலகம், பிப்ரவரி 14 : வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது
.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்
.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

நமது நிருபர்

சுல்தான்

இஸ்லாத்தின் பார்வையில் "காதலர் தினம்" INTJ தலைவர் SM .பாக்கர் அவர்களின் பேட்டி..




சென்னை, பிப்ரவரி 14 : இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம் என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் SM . பாக்கர் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு: இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் வலிகெடுவதற்கு உண்டான வாசல்கள் திறந்து விடப்படுகின்றது. அதில் ஒரு புறம் இந்த காதலர் தினம். காதலை இஸ்லாம் மறுப்பதில்லை. ஆனால் காதல் என்கிற பெயரில் நடக்கின்ற இந்த "காம விளையாட்டுகளைத்தான்" இஸ்லாம் தடுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் தவறான பார்வை கண்கள் செய்யும் விபச்சாரம் ஆகும். தவறான பேச்சு நாவு செய்யும் விபச்சாரம் என்றார்கள். இன்றைக்கு இந்த இரண்டும்தான் காதல் என்கிற பெயரில் நடக்கிறது. மேலும் அல்லாஹ் திருமரையிலே விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று கூறுகிறான். இந்த அடிப்படையில் எந்த ஓர் முஸ்லிம் பெண்ணோடு அல்லது ஆணோடு தவறான பார்வை மற்றும் தவறான பேச்சு, தனித்திருத்தல் ஆகியவைதான் இன்றைக்கு காதலாக காதலர் தினத்தன்று நடக்கின்ற நிகழ்வாக கருதப்படுகின்றது. ஆணும், பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கு ஷைத்தான் இருக்கின்றான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் ஷைத்தானுடைய வலையிலே இருந்து தங்களுடைய மார்கத்தை இழப்பதோடு தங்களுடைய குடும்பத்திற்கும் தவறான பெயரை வாங்கித்தருகின்றனர். இதைத்தடுக்கும் முகமாக கடந்த காதலர் தினத்தன்று கலாச்சார சீரழிவின் களமாக சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளீர் அணி தாவா பணியிலே இறங்கி இந்த சீர்கேட்டை தடுக்க முனிந்த போது இந்த சமுதாயத்தின் அவளம் வெளிப்பட்டது. கடற்கரையில் காதலர்களோடு இருந்த பர்தா அணிந்த 10 ஜோடிகளிடத்தில் தங்கள் தாவாவை செய்த போது அதிலே 9 பேர் முஸ்லிம் அல்லாத ஆணுடன் இருந்தது தெரியவந்தது. அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மகளீர் குழுவினர் சம்மந்தப்பட்டவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எடுத்துச் சொல்லி ஒரு சில குடும்பத்தாரிடம் தெரியப்படுத்தி சீர்கேட்டை தடுத்தனர். சென்னை மெரீனா கடற்கரையில் பிடிப்பட்ட 10 பேரில் 9 பேர் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களோடு காதல் என்றால் சென்னை, மற்றும் மாநிலம் முழுவதும் எவ்வளவு பேர் என்பதை நினைத்து பார்க்கும் போது சமுதாயத்தின் நிலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கிய முதலே இதற்கான பிரச்சாரங்களை INTJ தொடங்கி விட்டது. இருப்பினும் INTJ வாழ் மட்டுமே இந்த கலாசார சீர்கேட்டை தடுத்து நிறுத்திவிட முடியாது. இதற்கான அனைத்து சமுதாய அமைப்புகளும், அனைத்து முஹல்லா ஜமாஅத்தார்களும் களமிறங்கி போராடினால் தான் இந்த கலாசார சீர்கேட்டுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அப்போது அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாநில செயலாளர் செங்கிஸ்கான் உடனிருதார் .
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com

தொகுப்ப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

மவுத்து அறிவிப்பு: "ரஹீமா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: PKT ரோடு மர்ஹும் தே.கு.மு அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் மு.சே.மு. தாவூத் அவர்களின் மனைவியும், மர்ஹும் தே.கு.மு.ச.அப்துல் ரஜாக், சே.கு.மு.ச.அப்துல் வஹாப் மர்ஹும் தே.கு.மு.சபூர் முஹைதீன், மர்ஹும் தே.கு.மு. ஜியாவுதீன் ஆகியோரின் சகோதரியும் மு.அபுல் ஹசன், மு.ஷாகுல் ஹமீது இவர்களின் தாயாருமாகிய "ரஹீமா அம்மாள்" அவர்கள் இன்று காலை 5 :30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் திருவாரூர் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from; www.mttexpress.com
அறிவிப்பவர்
சே.கு.மு.ச.அப்துல் வஹாப்

நமது நிருபர்

KM . காதர் கனி (பாடகர்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)