முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாரதீய ஜனதா கட்சியின் 3 அமைச்சர்கள் வெளி ஏற்றம்.





ஆந்திரா, பிப்ரவரி 09: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில சட்ட சபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த மொபைல்போனில் ஆபாச படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விசயமாகும். அது மட்டுமல்லாமல் அவர் அருகில் அமர்திருந்த பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி. பாட்டிலும் அவர் கூட சேர்ந்து கொண்டு அவற்றை பார்த்தது இதைவிட ஒரு வெட்க கேடான விஷயம் இல்லை என்றே சொல்லலாம். மக்களைப் பற்றிய சிந்தனை இல்லாதவர்களை, ஒழுக்ககேடானவர்களை, சட்ட மன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான் நடக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த மிருகங்களின் செயல்களை கண்டிக்காமல், தண்டிக்காமல் தொடர்ந்து சட்டமன்றத்தில் அனுமதித்தால் சட்டசபைலேயே "காபரே நடனம்" கூட கூசாமல் பார்க்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்துவிடும். இவர்களையெல்லாம் சட்ட சபையிலிருந்து மட்டுமல்ல அரசியலை விட்டே மக்கள் தூக்கி எரிய வேண்டும். ஏனெனில் இவர்கள் சமூகத்தின் விசப்பாபுகள்
source from: www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டே இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் மூத்த குடிமக்கள் நடத்தும் இருதய பரிசோதனை மருத்துவ முகாம்..



முத்துப்பேட்டை, பிப்ரவரி 09 : முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் சிறப்பு இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று இப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். நியூ மெடிக்கல் S .சகாப்தீன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை மூலம் ஊருக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்ய உள்ளதாகவும், அதில் முதல் காரியமான முத்துப்பேட்டையில் பழைய துறைமுகம் இருந்த அதே இடத்தில் மீண்டும் கொண்டு வர இருக்கிறோம் என்றும், முத்துப்பேட்டையில் அகல ரயில் பாதையாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறோம் என்றும், மேலும் மூத்த குடிமக்களுக்கு அரசுகள் மூலம் கிடைக்கக்கூடிய பல்வேறு நல திட்டங்களை இதன் மூலம் பெற்று தர பாடுபடுவோம் என்றும், அவர் தெரிவித்தார். இந்த செயல் திட்டத்திற்கு இளைஞர்கள் நல் ஆதரவு தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை, முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை KG . மருத்துவமனை இணைந்து இருதய பரிசோதனை மருத்துவமுகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதில் எக்கோ ஸ்கேன் (ECHO SCAN),E .C.G . இரத்த சர்க்கரை பரிசோதனை, உணவியல் ஆலோசனை மற்றும் இருதய மருத்துவர் ஆலோசனை உட்பட அனைத்தும் வெறும் 500௦௦ ரூபாயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: சிதம்பர மஹால் பேங்க் தெரு முத்துப்பேட்டை, நாள்: 11 .02 .2012 சனிக்கிழமை, காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. எனவே அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவையின் பொறுப்பாளர்கள்:
நியூ மெடிக்கல் S .சகாப்தீன், S .பன்னீர் செல்வம் ரோட்டரி கிளப், M.முஹம்மது முஹைதீன் Ex .கவுன்சிலர், கோ. அருணாச்சலம், MA .இபுனு ஹமீது, MKN . முஹம்மது முஹைதீன்,வெங்கட் ராஜ், KM . தலைர் ஹனிபா. இளைஞர்கள் உறுதுணையாளர்கள்: அமீருதீன் நியூ மெடிக்கல், S .சேக் அப்துல்லாஹ் கேம்ப் ஆஸ்திறேலியா.
source from www.mttexpress.com
நமது நிருபர்

J . ஷேக் அப்துல் காதர்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)