முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று தி.மு.க. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் M.S. கார்த்திக் அவர்களின் புகுமனை புகுவிழா மிக சிறப்பாக திறக்கப்பட்டது. இதில் திருவாரூர் மற்றும் தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை குத்பா பள்ளி, புதுப் பள்ளி, நூர் பள்ளி, ஆசாத் நகர் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அவற்றில் சில புகைப்படக் காட்சிகள் உங்கள் பார்வைக்கு..
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
துபாய், அக்டோபர் 27 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் 30 ஆம் ஆண்டு விழா சார்ஜா அல் குவையர் மார்கெட் அருகில் சுமார் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஹசன் அலி கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். N. சேக் தாவூது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு வரவேற்ப்புரை நிகழ்த்திய TES. யூசுப் சுகைல், சிறப்பு விருந்தினர்கள் M. ஜாபர் அலி (துபாய் இஸ்லாமிய வங்கியின் தலைவர்), KAM . ஹாரூன் ராசீத் (கமர்சியல் வங்கியின் துணைத் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சங்கத்தின் செயல்பாடு குறித்து சங்கத்தின் தலைவர் H. சேக் தாவுது விரிவாக விளக்கி கூறினார். இதனைத் தொடர்ந்து PM. ஜாகிர் உசேன் மற்றும் M. அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்கள். கடந்த 29 ஆம் ஆண்டில் உள்ள சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை S. ஜஹபர் உசேன் அவர்கள் வாசித்து காட்டினார். இந்நிகழ்ச்சியின் இறுதியாக சபீர் ஸாலிஹ் அவர்கள் நன்றயுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து இரவு சிறப்பு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்
புளியந்தோப்பு, அக்டோபர் 22 : புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் நபிகளாரை இழிவாகப் பேசிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு தினங்களாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராடிக் கொண்டுள்ளன.
இதனால் போலிஸ் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிகக் இந்து முன்னணியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கமிசனர் அலுவலகம் முற்றுகை இட முயன்றனர். இதை அறிந்த எஸ்.எம்.பக்கர், செய்யது இக்பால்.பிர்தவ்ஸ் உள்ளிட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளும் இஸ்மாயில், சிக்கந்தர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் கமிஷனரை சந்தித்து 'கடவுள் கொள்கை பற்றிய ஒரு தஃவா நோட்டிஸ் போட்டவர்களை கைது செய்' என பிரச்சனையை திசை திருப்ப இந்து முன்னணியினர் நாடகம் ஆடுகின்றனர்.
இதை நீங்கள் அனுமதிக்க் கூடாது இல்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்று வலியுறுத்தினர். அனைத்தையும் கமிசனர், சம்பந்தப்பட்ட இருவரும் தலைமறைவாகி விட்டதால் தேடி வருகிறோம் கைது செய்வது உறுதி என கூறினார். வெளியில் பத்த்ரிக்கையாலர்களை சந்தித்த எஸ்.எம்.பாக்கர் நபிகளாரை இழிவுபடுத்தும் எவரையும் முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என பேட்டியளித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ஷேக் பரீத்
முத்துப்பேட்டை, அக்டோபர் 21 : புதுத் தெரு மர்ஹும் KM.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் KMS . மன்னர் என்கிற ராவுத்தர் அவர்களின் சகோதரரும், KMS . நிஜாம் அவர்களின் தகப்பனாருமாகிய "KMS. காதர் பாட்சா" அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ASNS.அப்துல் பாரி
திருவாரூர், அக்டோபர் 20 : SDPI கட்சியின் சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 17 லில் சென்னையில் தலைமை செயலகத்தையும்,பிற இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா அறிவித்திருந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்படுவதற்காக SDPI கட்சி தொண்டர்கள் தயாராயினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் படையெடுத்து வந்தவண்ணம் இருந்தனர். கூட்டம் கூட கூட போராட்டக்களமாய் உருவெடுத்ததை உணர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை சீர்படுத்தினர்.
சரியாக காலை 11 மணிக்கு ரயில்நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட SDPI கட்சியினர், தமிழக அரசே தமிழக அரசே, மதுவிலக்கை அமுல்படுத்து, டாஸ்மாக்கை இழுத்துமூடு, என்ற கோசத்துடன் கடைவீதி, மார்கெட் வழியாக மணிகூண்டு வந்தடைந்தனர் .
கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் A. அபூபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். பின்னர் மணிக்கூண்டிளிருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஒன்றன் பின் ஒன்றாக கைதுசெய்யப்பட்ட அனைவரும் திருவாரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறைவைக்கப்பட்டனர். சிறைவைக்கப்பட்ட அனைவரும் மாலை 4 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
source from: www.muthupettaiexpress.com
களத்தொகுப்பு:
ஜே .ஷேக் பரீத்
முத்துப்பேட்டை, அக்டோபர் 20 : முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் நூற்றாண்டுகளை கடந்த மிகவும் பழமை வாய்ந்த வழி தடமாகும். இங்கிருந்து சென்னை முதல் காரைக்குடி வரை பல்வேறு ரயில்கள் சென்று வந்தன. இதனால் சுற்றுலாதலமான முத்துப்பேட்டை மக்கள் என்றும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் ரயில்வே துறை இந்தியா முழுவதும் படி படியாக எல்லா வழி தடங்களையும் அகல ரயில் பாதையாக மாற்றினார்கள். ஆனால் முத்துப்பேட்டையை உள்ளடக்கிய திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான பாதை மட்டும் மாற்றப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த வழி தடங்களையும் மாற்ற நிதி வந்த நிலையில் படி படியாக பணிகள் துவங்க ஆரம்பிக்கப்பட்டன. அதன் வகையில் காரைக்குடி, திருவாரூர் பகுதிகளில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மீதி உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி திருவாரூர் வரை பழமை வாய்ந்த பேசென்ஜர் ரயில் சென்று வந்தன. இந்த அனைத்து வழித்தடங்களும் பிரிக்கப்பட்டு பணிகள் துவங்க இருப்பதால் நேற்றுடன் இந்த பேசென்ஜர் ரயிலை நிறுத்த தென்னக ரயில்வே முடிவு செய்து அறிவிக்கப்பட்டன. இதனை முன்னிட்டு பேசென்ஜர் ரயில் கடைசி பயணமாக திருவாரூரிலிருந்து நேற்று காலை முத்துப்பேட்டைக்கு வருகை தந்தது. முத்துப்பேட்டை வர்த்தக கழகம் சார்பில் தலைவர் இரா. இராஜாராமன், கெளவர தலைவர். திருஞானம், ஆகியோர் தலைமையில் பிரியா விடைபெறும் ரயில் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேசென்ஜர் ரயிலுக்கு பெரிய அளவில் மாழை அணிவித்தும் டிரைவருக்கு இனிப்பு வழங்கியும் வழி அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வர்த்தகக் கழக பொதுச் செயலாளர் எம்.எஸ். ராமலிங்கம், துணைத் தலைவர் முஹைதீன் பிச்சை, செயற்குழு உறுப்பினர் அசோகன், ரோட்டரி துணை மண்டல ஆளுநர் மெட்ரோ மாலிக், நுகர்வோர் பாதுகாப்பு கழகம் நிர்வாகி சுல்தான் இபுறாஹீம், SDPI கட்சியின் நகர பொறுப்பாளர் நிசார் அஹமது, சேக் முஹைதீன், முஹம்மது முஹைதீன், மற்றும் வர்த்தக கழக நிர்வாகிகள், வியாபாரிகள் பள்ளி மாணவர்கள், பாயணிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
சென்னை, அக்டோபர் 13: இஸ்லாமிய பிரசாரகரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனருமான சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு வலது தோள்பட்டையில் கேன்சர்கட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .அவர் பூரண குணமடைந்து மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் சமுதாய பனி செய்வதற்கு வல்ல ரஹ்மானிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்திகிறது ... இந்த சகோதரருக்கு அல்லாஹ் விடம் துவ செய்ய வேணுமாய் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
source from: www.muthupettaiexpress.com
இப்படிக்கு :
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
துபாய்,அக்டோபர் 13 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துபாய் டெனாட்ட பார்க்கில் சரியாக 8.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக M. முஹம்மது அலி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு மூத்த ஆலோசனைக் குழு உறப்பினர் ஜனாப். M. முஹம்மது ஹிலால் அவர்கள் தலைமை வகித்தார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து H.ஷேக் தாவூது அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 29 ஆம் ஆண்டின் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகள் குறித்து தலைவர் S. ஜஹபர் உசேன் அவர்கள் உரைநிகழ்த்தினார். இதனை தொடர்ந்து பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் கண்காணிப்பாளராக M. சாகுல் ஹமீது அவர்கள் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுபினர்கள் மற்றும் ஊர்வாசிகள் அனைவருடைய ஒத்த கருத்தோடு ஏக மனதாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள்.
ஆலோசனை குழு உறுப்பினர் P.M. ஜாகிர் உசேன் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார். மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களின் விபரம்:
தலைவர்: H. ஷேக் தாவுது
இணை தலைவர்: M.R.S. அஹமது ராவுத்தர் (செல்லாப்பா)
துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ்
பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ்
இணைச் செயலாளர்: H. தாவூது கான்
துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்
பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன்
மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்
தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ்
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
முத்துப்பேட்டை, அக்டோபர் 12 : முத்துப்பேட்டையில் உள்ள செம்படவன்காடு பாமணி ஆற்றில் இளம்பெண் குத்தித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகள் மீனா (27) பீகாம் பட்டதாரியான இவர் கடந்த ஒருவருடம் தனது தாயார் உடல் நிலை சரி இல்லாததால் ஜாம்புவோநோடை தர்ஹாவில் வேண்டுதலுக்காக தனது தாயாருடன் மீனா தங்கி உள்ளார்.
பல மாதங்கள் தங்கி உள்ள மீனா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல் காதர் அவர்களின் மகன் மீரா உசேன் மீது காதல் ஏற்பட்டு கடந்த வருடம் இருவரும் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் தனது தாயாரும் இறந்து விட்டார். இந்த நிலையில் மதுக்கூரில் உள்ள மீனாவின் அண்ணன் வீட்டில் இருவரும் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.
அப்போது மீரா உசேனும் அங்குள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேன் அடிக்கடி காணமல் போவதும் திரும்ப வருவதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேனுக்கு ஏற்கனவே ஆலங்காட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி உள்ள சம்பவம் தெரிகிறது அதிர்ப்த்தி அடைந்த மீனா மீரா உசேனிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மீரா உசேனை காணவில்லை. மேலும் மீனா எங்கும் தேடியும் கிடைக்காததால் முத்துப்பேட்டைக்கு வந்து முதல் மனைவியிடம் விசாரித்தார் அப்போது முதல் மனைவிடம் தங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் இருவரும் மீனாவை திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் மீரா உசேன் மீனாவை பார்த்து நான் இனிமேல் உன்னிடம் சேர்ந்து வாழமாட்டேன் என்றும் உறுதியுடன் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்பப்த்தி அடைந்த மீனா என்ன செய்வது என்று நடந்தே பல மீட்டர் தூரம் சென்றுள்ளார். மேலும் இதனால் ஆத்திரம் அடைந்த மீனா இனி நம்ம வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணி ஒரு வெள்ளை பேப்பர் தாளில் என் சாவுக்கு காரணம் மீரா உசேனும் அவரின் முதல் மனைவியும் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு செம்படவன் காடு பாமணி ஆற்று பாலத்தின் மீது ஏறி குத்தித்து உள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஸ்டாலின், அழகர் ஆகியோர் குதித்த பெண்ணை காப்பாற்றி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீனாவை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், ஏட்டு சந்திரமோகன் ஆகியோர் விசாரித்து மீனாக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மீனா தற்போது 5 மாதம் கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை, அக்டோபர் 11: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணியாற்றியவர் ஷேக்பரீத் .இவர் முத்துப்பேட்டையில் உள்ள மரைக்காயர் தெருவை சார்ந்தவர் .த .மு .மு .க .வில் ஆரம்ப காலத்தில் அடிப்படை உறுப்பினராக தனது அஸ்தி வாரத்தை துவக்கிய ஷேக்பரீத் பின்பு நகர செய்தி தொடர்பாளர் ,நகர மருத்துவ சேவை அணி செயலாளர், நகர துணை செயலாளர் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர், என்று படிப்படியாக உயரம் நோக்கி சென்றார் . பிறகு சிறிது காலம் இவர் சென்னையில் பணியாற்றிகொண்டிருக்கும்போது தென் சென்னை மாவட்ட மாணவரணி செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டார் . வின் தொலைக்காட்சியில் வளைகுடா செய்திபிரிவின் துணை ஆசிரியராக பணியாற்றியவர் . இளம் வயதிலேயே பத்திரிக்கை துறையில் ஆர்வம் கொண்ட இவர் த.மு.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான மக்கள் உரிமை ,மற்றும் வேறு சில பத்திரிக்கைகளிலும் ஆக்கங்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை எழுதி வந்தார் .
கடந்த சுனாமி பேரழிவின் போது நாகை ,கீச்சாங்குப்பம், நாகூர்,திருப்பட்டினம், காரைக்கால், போன்ற பாதிக்க பட்ட இடங்களில் மக்கள் பணியாற்றியவர். மதவாத, தேசவிரோத, பா.ஜ .க . இந்து முன்னணி, ஆர் .எஸ் .எஸ் போன்ற வகுப்புவாத சக்த்திகளை எதிர்ப்பதை தனது உயிர் மூச்சாய் கொண்டவர். முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, கடந்த 8 ஆண்டுகளாய் சகோதரத்துவத்தை உண்டாகும் கைப்பந்து போட்டிகளை மாநில அளவில் நடத்தி அணைத்து சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்தவர் .கடந்த ஆண்டு நடை பெற்ற விளையாட்டு போட்டியில் ,பா .ஜ .க .வில் மத்திய அமைச்சராக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அறந்தாங்கி திருநாவுக்கரசரை அழைத்து வந்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியவர் .
அறந்தாங்கி திருநாவுக்கரசர் முத்துப்பேட்டைக்கு இவர் நடத்திய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வந்த போது ,இவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் சாலைமறியலில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது .
நமது நிருபர் : AKL. அப்துல் ரஹ்மான்
சென்னை :அக்டோபர் 11: போராட்டம் நடத்திய அமைப்புகளை விட்டு விட்டு போராட்டம் கூடாது என அறிக்கை விட்ட காசிமியை அமெரிக்க தூதரக் அதிகாரிகள் சந்திப்பது ஏன் என்று புரியவில்லை!
படத்தை நீக்கா விட்டால் எங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாது என இவர் சொன்னாராம்! கட்டுப் படுத்த இவர் யார்? சென்னை கிடுகிடுக்கும் போராட்டததை நடத்திய இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரா? அல்லது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏதேனும் அமைப்பின் பிரதிநிதியா?
போராட்டமே கூடாது என மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கப் பார்த்த இவர் மக்கள் இனி பெட்ரோல் குண்டு வீசுவார்கள் என்று சொன்னதைக் கேட்டு அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள் என கதை அளப்பதேன்?
மொத்தமே 2 இமாம் இருக்கும் மக்காப் பள்ளியின் தலைமை [!?] இமாம் என தன்னைத்தானே அழைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையில் தமிழகத்தின் தலைமை இமாமாக தன்னைக் காட்ட முயற்சிப்பதேன்?
தன்னையும் தன் பள்ளியையும் காக்கவே அடுத்த இயக்கங்களை நம்பி இருக்கும் இவர்
தன்னை அமெரிக்க தூதரகத்தை காக்கும் ஆபத் பாந்தவனாக காட்ட முயல்வது ஏன்?
தொகுப்பு :ஜே :ஷேக் பரீத்
முத்துப்பேட்டை, அக்டோபெர் 08 : முத்துப்பேட்டையில் இன்று காலை காரைக்
குடியிலிருந்து திருவாரூர் செல்லும் ரயில் முத்துபேட்டையில் கைகாட்டி இறக்காததால் நடு ரோட்டில் அதிக நேரும் நின்று கொண்டிருந்தது. இதனால் முத்துப்பேட்டை
யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from:
www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை, அக்டோபர் 07 : தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் முத்துப்பேட்டை கிளைகள் சார்பாக தமிழகத்தில் மக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதுடன் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதை அறிந்தும் மழை வேண்டி புதுத் தெரு ASN தெருவில் நடைபெற்றது. நூர் பள்ளி தலைமை இமாம் மற்றும் மாநில பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் நபிவழி முறைப்படி தொழுகை நடத்துவது எப்படி என்றும் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சிறப்புரை நிகழ்த்திவிட்டு தொழுகையை நடத்தினார். இதில் TNTJ நகர செயலாளர் முஹம்மது புஹாரி, பொருளாளர் கே.சுஹைபுகான், துணைத் தலைவர் அப்துல் வக்கீல், துணைச் செயலர் முஹம்மது லுக்மான், மாநில நிர்வாகி அன்சாரி, மற்றும் பிர்தவ்ஸ்கான், நஜிபுதீன், கட்டினானா, துபாய் சேக்காதி, நுகர்வோர் அமைப்பு நிர்வாகி சுல்தான் இபுறாஹீம், உட்பட ஏராளமான பெண்களும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை ,
அக்டோபர் 07 :
SDPI கட்சியின் சார்பாக மது ஒழிப்பை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன .கடந்த 2 ஆம் தேதி முத்துப்பேட்டையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நூற்று கணக்கானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது .இந்நிலையில் வருகின்ற 11 ஆம் தேதி மது ஒழிப்பை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .இது குறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் ,மற்றும் மாவட்ட தலைவர் பாவா பகுருதீன் இருவரும் கூட்டாக அறிவித்தது பின்வருமாறு:
SDPI கட்சியானது சமுகதீமைகளுக்கு எதிராய் போராடக்கூடிய ஒரு மக்கள் இயக்கமாகும் .மது என்பதுசமூகத்தை வலிகெடுக்க கூடிய ஒரு கொடிய அரக்கனாக உள்ளது . இன்றைய சூழ்நிலையை எடுத்து பார்த்தால், முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ,கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளிக்கூட மாணவர்கள் வரை, குறிப்பாக இளைய சமுதாயம் மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் ஒரு அவல நிலை இந்த தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது . ஒருபுறம் நலத்திட்டங்களை வழங்கிவரும் தமிழக அரசு ,மறுபுறம் வீதியெங்கும் மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை சீரழிக்கும் வேலைகளையும் செய்து வருகிறது .எனவேதான் தமிழக அரசின் கவனங்களை ஈர்க்கும் வகையில் ,பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டங்களை SDPI கட்சி நடத்தி வருகின்றது .
SDPI நடத்திய மது ஒழிப்பு போராட்டத்தை கண்ட அணைத்து அரசியல் கட்சிகளும் ,இன்று மதுவிற்கு எதிராய் வாய்திறக்க ஆரம்பித்துள்ளது .திருவாரூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக வருகிற 17 -10 -2012 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது .மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் மாவட்டத்திலிருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கிறார்கள் .இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்கள் .
source from: www.muthupettaiexpress.com
சந்திப்பு : ஜே .ஷேக் பரீத்