முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருமணச் செய்தி: "S.ஹபீப்கான்,ஆய்ஷா பர்வீன்"








முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 11 , 30.08.2012 மாலை 4 மணியளவில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு ஜனாப் மர்ஹும் சர்புதீன் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S.ஹபீப்கான் மணாளருக்கும், முத்துப்பேட்டை ஜனாப்.இக்பால் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி ஆய்ஷா பர்வீன் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 1 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை பேட்டை பள்ளி இமாம். U. பத்ரு ஜமான், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.) இந்த திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A. அபூபக்கர் சித்திக், திருவாரூர் மாவட்ட தலைவர். தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

M.கபீர்

முத்துப்பேட்டை 13 வது வார்டு SDPI யின் புதிய கிளை சார்பாக கொடி ஏற்றப்பட்டது.











முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 30: முத்துப்பேட்டை புதிய கிளை SDPI கட்சியின் சார்பில் நேற்று கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் M.தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கிளை பொருப்புத் தலைவர் தேனா,சீனா.ஜெஹபர் அலி 13 வது வார்டில் நடக்கக்கூடிய பிரச்சனைக் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A.அபூபக்கர் சித்திக் அவர்களிடம் மனு ஒன்றை கொடுத்தார். இதில் நகரத் தலைவர். நிசார் அஹமது மற்றும் 50 க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

M.கபீர்

மவுத்து அறிவிப்பு: " அஹமது ஜலாலுதீன்"


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 29 : குண்டாங் குலத்தெரு PSK காலனி மர்ஹும் நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், ஜா(என்கிற)செக்கரியா அவர்களின் சகோதரரும், PKT மஜ்பா வாட்சி கம்பேனி முஹம்மது ரபீக், முஹம்மது ரியாஸ், அப்துல் சலாம் ஆகியோரின் தகப்பனாரும், குரைசி அவர்களின் சிறிய தகப்பனாரும், அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், பெட்டிக்கடை முஹம்மது தாவூது, முஹம்மது இலியாஸ், ஆகியோரின் மாமனாரும், PSK அப்துல் காதர் அவர்களின் சகலையுமாகிய "அஹமது ஜலாலுதீன்" அவர்கள் இன்று காலை 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹீ ராஜிவூன்). அனாரின் ஜனாசா இன்று மாலை 7 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

ஜா (என்கிற)செக்கரியா

நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

செவ்வாய் கிரகத்தில் மனித குரல் கேட்கிறதாம்..!



உலகம், ஆகஸ்ட் 29 : செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சப்தங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கு ஏற்ற சூழ்நிவை நிலவுகிறதா என்பதை ஆராய, கடந்த 6ம் தேதி அங்கு தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒரு முஸ்லிம் தேசம் 2020 இல் வாழத் தகுதியற்றதாகிறது..!









பலஸ்தீனின், ஆகஸ்ட் 29 : பலஸ்தீனின்ச காசா பகுதி 2020 ஆம் ஆண்டாகும் போது வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உடன் சுகாதாரம், நீர் விநியோகம், மின்சக்தி மற்றும் பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

“காசாவில் வசதிகள் உடன் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 2020 ஆம் ஆண்டில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். தற்போதே அங்கு வாழ்வது கடினமாக உள்ளது” என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் மக்ஸ்வெல் கெய்லாட் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது குறித்த ஐ.நா. அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காசாவின் தற்போதைய சனத்தொகை 1.6 மில்லியனாக உள்ளது. அது 2020 ஆம் ஆண்டாகும்போது 2.1 மில்லியனாக அதிகரிக்கும். இந்த சனத்தொகை அதிகரிப்பால் அங்கு ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 5,800 பேருக்கு மேல் வசிப்பார்கள் என ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் காசாவின் நிர்வாகக் கட்டமைப்பு ஜனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வளர்ச்சியடையவில்லை. குறிப்பாக மின் விநியோகம், நீர் விநியோகம், சுகாதாரம், நகர அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் வளர்ச்சியடையவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காசாவின் கால் பங்கு கழிவு நீரே, மீள் பயன்பாட்டுக்கு பெறப்படுகிறது. எஞ்சிய நீர் மத்திய தரைக் கடலுடன் கலக்கிறது. காசா கடற் பகுதியை இஸ்ரேல் முழுமையாக முடக்கியுள்ளதால் அங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதோடு அதன் காரணமாக தொடர்ச்சியான மின் தடைக்கும் உள்ளாகி வருகிறது. அதேபோன்று காசாவில் வேலையில்லா தோர் எண்ணிக்கை 45 வீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் காசாவின் குடிநீர் தேவை 60 வீதமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ள ஐ.நா. பிரதான நீர் ஆதாரங்களான நீர்த் தேக்கங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் அங்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். உடன் சரி செய்யப்படாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டாகும் போது காசா பகுதிக்கு மேலும் 440 க்கு மேற்பட்ட பாடசாலைகள், 800 மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மேலும் 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் முற்றுகை

கடந்த 2006 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் போராளிகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கான விநியோகப்பாதைகளை இஸ்ரேல் முடக்க ஆரம்பித்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட வீரரே கடந்த ஆண்டு ஒக்டோபரில் கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் 1,027 பலஸ்தீன கைதிகளுக்கு பதில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேல் அந்த பகுதிக்கான முழு விநியோகப் பாதைகளையும் முடக்கியது.

இதனால் குறுகிய கடற்கரை பகுதியான காசாவில் ஐ.நா. உதவி, வெளிநாட்டு நிதியுதவி மற்றும் சுரங்கப்பாதை ஊடாகவே அங்குள்ள வர்களுக்கு உணவு, கட்டுமானப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், கார்கள் என்பன எகிப்தினூடாக கிடைக்கப் பெறுகின்றன.

காசாவில் 80 வீதமானோர் உதவிகளிலேயே தங்கியிருப்பதால் அப்பகுதிக்கான சர்வதேச உதவிகளை அதிகரிக்குமாறு ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் கெய்லாட் கோரியுள்ளார். “அவர்கள் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளார்கள்.

அவர்களுக்கு அரசியல் மற்றும் சாதாரண விசயங்களிலும் எமது உதவி தேவைப்படுகிறது” என்றார். எனினும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்த வண்ணமே உள்ளது. காசாவில் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வான ஹமாஸ் அமைப்பை மேற்கு நாடுகள் தீவிரவாத அமைப்பாகவே கருதுகிறது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நன்றி - அல் ஜஸீரா

முத்துப்பேட்டையில் கொடிய விசமுள்ள இரு பாம்புகள், பொதுமக்களே பிடித்தனர்..






முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28 : முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அதிகமான கருவை காடுகள் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் நடமாட அச்சம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியிலிருந்து ரோட்டுக்கு வந்த நல்ல பாம்பு மற்றும் காட்டு விரியன் பாம்பும் அங்குள்ள குடியிருப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது இவற்றை கண்ட அப்பகுதி பொது மக்கள் சாமாத்தியமாக அப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனை பார்க்க அனைத்து மக்களும் காட்டு பகுதிக்கே சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கருத்தப்பா கூறியதாவது. இந்த பகுதியில் அதிக கொடிய விசமுள்ள பாம்புகள் இருப்பதால் இவற்றை பொது மக்களுக்கு இடையூர் இல்லாமல் ஏற்படுத்தும் பொருட்டு இவற்றை உடனே வனத்துறையினர் பிடித்து உரிய இடத்தில் விடவேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

மவுத்து அறிவிப்பு: "நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால்"


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : PKT ரோடு மர்ஹும் நே.கா.மு. சேக் முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் லத்திப், மர்ஹும் மவுளா அபூபக்கர் ஆகியோரின் தம்பியும், H. முஹம்மது லத்திப் அவர்களின் தகப்பனாரும், ஜெஹபருதீன் அவர்களின் மாமனாருமாகிய நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால் அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்) நாளை காலை 10 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.
H. முஹம்மது லத்திப்

நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டம்..



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இச்சங்கத்தின் தலைவர் ஜனாப். ஜஹபர் உசேன் அவர்களின் இல்லத்தில் நேற்று அஷர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. மேலும் முத்துப்பேட்டை பிரதிநிதி கா.மு நெய்னார் முஹம்மது அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் ஃபித்ரா அரிசி விநியோகம் மற்றும் உதவித்தொகை பெர கடிதம் எழுதி அனுப்பிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் விரைவில் உதவித்தொகைகள் வழங்கப்படும் என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது. மேலும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் கல்வி குறித்து மாபெரும் விழிப்புணர்வு மாநாடு விரைவில் நடத்த உள்ளதாக அப்போது முடிவெடுக்கப்பட்டது. இந்த மாநாடு குறித்த செய்தி மேலும் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தான் வெளியிடப்படும் என்றும் இச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசூல் செய்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா...



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : அசாமில் பாதிக்கப்பட்ட நமது முஸ்லிம் சமுதாய மக்களை கொன்று குவித்து வரும் புத்த மத வெறியர்களுக்கு அல்லாஹ் விரைவில் ஹிதாயத் கொடுக்க இந்த இனிய நாளில் நாம் துவா செய்வோம். இந்த முஸ்லிம் சமுதாய மக்களின் அழிவை பார்த்து எத்துணையோ மனித உரிமை ஆணையம் வாய் பொத்தி மவுனம் சாதித்து வருகிறது. இந்த மக்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு இன்று நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நமது சமுதாய மக்களிடம் நிதிகளை திரட்டி வருகிறது. இதன் அடிப்படையில் இன்று முத்துப்பேட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகைக்கு பிறகு நிதிகளை மாநில உறுப்பினர் ஜனாப் A. அபூபக்கர் சித்திக் அவர்களின் தலைமையில் இன்று வசூல் செய்யப்பட்டது. உடன் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

O.M. சுபைத் கான், AKL.அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் குறித்த ஓர் பார்வை...














முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினரும் ஒன்று சேர்ந்து அவரவர்களுக்கு தெரிந்ததை மிக சிறப்பான முறையில் பேனர்களை வைத்து குட்டியார் பள்ளி வாசல் மற்றும் ஆசாத் நகர் பள்ளி வாசலை சுற்றி அலங்கரித்துல்லானர். இது குறித்த ஓர் பார்வையாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
source from:www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப் பட்ட நோன்பு பெருநாள் ஓர் பார்வை.













முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20: முத்துப்பேட்டையில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை சரியாக 7.30 மணியளவில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுத்தெரு திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். தொழுகைக்கு பின்பு சிறப்பு பயனும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து குட்டியார் ஜும்மாஹ் பள்ளிவாசலில் சரியாக 9 மணியளவில் தொழுகை நடைபெற்றுது. இதனைத்தொடர்ந்து ஆசாத் நகர் ஜும்மாஹ் பள்ளி வாசாளில் தொழுகை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்பு பயானும் நடைபெற்றது. பயன் முடிந்த வுடன் ஒவ்வொரு சகோதரரும் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் புதுத்தெரு பள்ளிவாசல் மற்றும் மக்கா பள்ளி வாசலிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)