முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய பரிசளிப்பு விழா ஓர் பார்வை...







முத்துப்பேட்டை,ஜூன் 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய வினா, விடை போட்டி 30.05.2012 முதல் 30௦.06.2012 வரை கடந்த 1 மாதமாக மிக சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுபெற்ற முதல் மூன்று நபர்களை ஊக்கவிக்கும் விதமாக நேற்று மாலை 4.30 மணிக்கு நமது முஹைதீன் பள்ளி வாசால் மதரசாவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. U. பத்ரு ஜமான் (அரூஷி) முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் துணைத் தலைவர் அவர்கள் தலைமை வகித்தார். M.ஷேக் மியான் (பேஸ் இமாம் அரபு சாஹிப் பள்ளி வாசல்) அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக க.மு.நெயினார் முஹம்மது (சோழநாடு) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள தலைவர் EKA. முனவ்வர் அஹமது கான் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார். இதில் இமாம்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பரிசு பெற்றவர்களின் விபரம்:

முதல் பரிசு ரூபாய்: 1000 பெற்றவர். J. லாமியா புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை.

இரண்டாம் பரிசு ரூபாய்: 750 பெற்றவர். M. செய்து அஹமது கபீர், திமிலத் தெரு முத்துப்பேட்டை.

மூன்றாம் பரிசு ரூபாய்: 500 பெற்றவர். ANA. ஹாஜா நஜுபுதீன், புதுத் தெரு முத்துப்பேட்டை.

பரிசு வழங்கியவர்களின் விபரம்:

முதல் பரிசு வழங்கியவர், A. அல் அமீன் (SDPI 13 வது வார்டு கிளை).

இரண்டாம் பரிசு வழங்கியவர், S. ஜஹபர் உசேன்.

மூன்றாம் பரிசு வழங்கியவர், P.M. ஜாஹிர் உசேன்.

தேநீர் உதவி வழங்கியவர்களின் விபரம்:

M.A.K. ஹிதாயத்துல்லா. DCHT,
P.M. ஜாஹிர் உசேன்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைத்தளத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் ஓர் பார்வை.


துபாய், ஜூன் 17: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் டேரா துபாயில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ASNS. அப்துல் பாரி அவர்கள் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் உதவிகள் வழங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் புதிய நிர்வாகிகளும் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்:
1) ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்குவது.என முடிவெடுக்கப்பட்டது.
2) IFS, IAS, IPS போன்ற படிப்புகளுக்கு ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
3) முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் இவற்றை வீடு வீடாக எடுத்துரைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
4) பத்திரிகை துறையில் பின்தங்கிய மானாவ, மாணவியர்களுக்கு மத்தியில் இத்துறையின் ஆர்வத்தை எடுத்துரைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
5) குழந்தைகள் தொழிலாளர் முறையை அடியோடு ஒழிக்க பாடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகளின் விபரம்:

கெளரவ தலைவர்:
AKL.L.முஹமது மன்சூர்.

தலைவர்:
EKA.முனவ்வர் அஹமது கான். BHM,

துணைத் தலைவர்:
U.பத்ரு ஜமான் (அரூசி)

பொதுச் செயலாளர்:
ASNS.அப்துல் பாரி

செயலாளர்கள்:
M.முஹைதீன் பிச்சை,
M.சலாஹுதீன்
யூசுப் அலி (ஆலிம்)

துணைச் செயலாளர்:
J.ஷேக் பரீது. DHM,

பொருளாளர்:
M.A.K.ஹிதாயத்துல்லா. DCHT,

துணைப் பொருளாளர்:
H.தமீம் நியாஸ். DEE,

இணையத்தள ஆலோசகர்கள்:
M.செய்யது அப்துல் ரஹ்மான் (பூ கொய்யா)
A.சாதாத் பாட்சா ( கொய்யா)
P.M. ஜாகிர் உசேன்
I. அப்துல் ஹமீது.B.Com, PGDCA
M.சித்திக் ரஹ்மான். Bsc,

ஒருங்கிணைப்பாளர்கள்:
A.முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication.
T.E.S.சுகைல்

நிருபர்கள்
AKLT.அப்துல் ரஹ்மான். BBA,
S.ஷாகுல் ஹமீது (தண்டையா)
K.எர்சாத் அஹமது. MCA,
O.M.சுபைத் கான். BE,
கோவிலூர் லட்சுமணன்
எடையூர் பாலா
source from: www.muthupettaiexpress..blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நகர கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு.





முத்துப்பேட்டை, ஜூன் 17 : முத்துப்பேட்டை சோஷியல் டெமாக்ரட்டிக் பார்டிஆஃப் இந்தியா சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நகர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இதில் 21.06.2012 அன்று SDPI கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிக சிறப்பாக நடத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் விபரம்:
தலைவர். S. நிஷார் அஹமது, துணைத்தலைவர் சேக் மைதீன், செயலாளர் பாட்சா, துணைச் செயலாளர். ஷாகுல் ஹமீது, பொருளாளர் சலீம், மற்றும் நகர செயற் குழு உறுப்பினர் ஷேக், பெரோஸ் கான், யாசிர், ஹபீப் கான், நெய்னா முஹமது, முஹைதீன், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் நெய்னா முஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspotcom
நமது நிருபர்

O.M. சுபைத் கான்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பேரணி.



முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டை புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. மாணவர் சேர்க்கை பேரணியை உதவித்தொடக்கல்வி அலுவலர் ரகுராமன், இன்பவேணி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு. வ.க. ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணி புதுத் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஆஸ்பத்திரி தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது. சேர்க்கை பேரணியில் ஆசிரியர்களான இராமகிருஷ்ணன், ஆசிரியை முத்துலட்சுமி, அமிர்தம், துர்கா தேவி மற்றும் உறுபினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியர் ஆரோக்கிய அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

யூசுப் அலி ஆலிம், AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் உயர் மின் அழுத்த மின் கம்பம் பழுதடைந்து விழும் அபாயம்..



முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டையில் பட்டுக்கோட்டை சாலை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் வாசலில் உயர் மின் அழுத்த மின் கம்பம் உள்ளது. அதே இடத்தில் தற்போது தலைமை தபால் நிலையம் உள்ளது. அங்கு உயர் மின் கம்பம் அது இரும்பு போஸ்டில் உள்ளது. அதிலிருந்துதான் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருக்கின்றது. எந்நேரத்தில் கீழே விழும் என்ற அபாயம் அந்த பகுதி மக்களுக்கு அச்சமாகவே உள்ளது. மேலும் அந்த பகுதி எந்நேரமும் மக்கள் அலைமோதும் பகுதி முக்கியமான இடங்கள், கடைகள், முக்கிய பள்ளிவாசல்கள்,முக்கிய அலுவகம் பள்ளிக்கூடம் ஆகியவைகள் இரவு பகல் மக்களின் நடமாடும் பகுதிகளாகும். அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும் பகுதியாகும்.அந்த பகுதியில் இந்த மின்கம்பம் அறுந்து கீழே விந்தால் அதிக உயிர்சேதம் ஏற்படும்.இந்த நிலை குறித்து மக்கள் அதிகம் புலம்பி வருகின்றனர். இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு நிர்வாகி சுல்தான் இபுராஹீம் (சு.இனா) அவர்கள் கூறியதாவது. இந்த மின் கம்பத்தால் பலரது உயிர்கள் பலியாகும் நிலை உள்ளது என்றும் ஆனால் மின்சார வாரியம் இவற்றை சரி செய்யாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.அரசு இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகுதான் சரி செய்வார்கள். ஒரு மின்வாரிய ஊழியர் மரத்தில் ஏறினாலே கம்பம் முறிந்து கீழே விழுந்து விடும் தருவாயில் உள்ளது. இந்த நிலைக்கு மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பாப்போம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், U .பத்ரு ஜமான் (அரூஷி)

முத்துப்பேட்டை மக்களுக்கு பயன் பட தயாராக இருக்கும் ஆசாத்நகர் பாலம்..



முத்துப்பேட்டை, ஜூன் 11 : முத்துப்பேட்டை ஆசாத நகர் ஜாம்வோனோடை புதிய இணைப்பு பாலம் விரைவில் திறப்பு விழா கண்டு மக்களின் பயன் பாட்டிற்கு தயாராக உள்ளது. அதன் காட்சியை இங்கு பாப்போம்..

நமது நிருபர்

ரிப்போர்ட்டர் கோவிலூர் லக்ஷ்மணன்

முத்துப்பேட்டையில் தி.மு.க. ஜாம்பை கல்யாணம் காரை உடைத்த R.S.S. தீவிரவாதிகள்..!!!




முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை ஜாம்வோநோடையில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதிகள் முழுவதும் மின் விளக்கு மற்றும் ஸ்பீக்கர் கட்டப்பட்டு பாட்டுகள் ஒழிக்கப்பட்டன. அவற்றில் கருப்புதான் எனக்கு புடித்த கலரு என்று பாடலை கேட்ட RSS தீவிரவாதிகள் அந்த பாட்டை போடா கூடாது என்றும், இந்த பாட்டை போட்டால் எங்களுடைய தலைவன் பெயர் வருகிறது என்றும் கூறி வாய்த்தகராறில் இறங்கினர். இதனால் அங்குள்ள பொது மக்களுக்கும் கலவர காரவர்களுக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை கேட்ட முத்துப்பேட்டை தி.மு.க. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு. ஜாம்பை கல்யாணம் அவர்கள் காதுக்கு எட்டியது. அப்போது அவர் இருவருக்கும் மத்தியில் சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்தார். இதுபுடிக்காத R.S.S. தீவிரவாதிகள் மத்தியில் மேலும் ஆத்திரம் அடைந்து அங்கு நிறுத்தப்பட்ட ஜாம்பை கல்யாணம் அவர்களின் காரை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துப்பேட்டை பிஜேபி முருகானந்தம், மற்றும் மகேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை வாழக்காய் பச்சில் மிருக உருவங்கள்..!!!




முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வடைகடை உள்ளது. இந்த கடையில் எந்நேரமும் கூட்டமாக இருந்தது. இந்த நிலையில் அந்த கடை மாஸ்டர் முஹம்மது இபுராஹீம் போட்ட வாழைக்காய் பஜ்ஜிகளில் ஒரு பஜ்ஜி முயல் உருவத்தில் இரண்டு முயல் கட்டி பிடித்து பாசத்தை பரிமாற்றம் செய்வது போலவும், இன்னொரு செம்மறி ஆடு அமர்ந்து அசை போடுவது போலவும் இருந்தது.இவற்றை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

அகலத்.அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது..!




முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய நிகழ்வு விடிய விடிய நடைபெற்றது. முன்னதாக மண்ணை சாலை ரயில்வே கேட்டிலிருந்து மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர். கே. இளங்கோ தலைமை வகித்தார். இச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் திரு.கே.வி.ராஜேந்திரன், சி.பி.எம்.நகர செயலாளர் ஏ. காளிமுத்து, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச் செயாளர் ஆர்.எஸ்.ராமநாதன், காங்.பிரமுகர் நா.ஜீவானந்தம், உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். அப்போது ஊர்வலமாக குமரன் பஜார், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக ஆசாத் நகர் பழைய பேருந்து நிலையம் சென்று விழா மேடையை அடைந்தனர்.மேலும் இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தஞ்சை ஜான் பீட்டரின் தப்பாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகியதும் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKLT.அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய வினா,விடையும், வெற்றி பெற்றவர்களின் விபரமும்..


முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகமான வாசகர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தனர். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட முதல் மூன்று பரிசை பெற்ற வாசகர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் இதில் கலந்து கொண்டு அனைத்து வாசகர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் தங்களுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வெற்றி பெற்றவர்களின் விபரம்:

முதல் பரிசு பெற்றவர் J.லாமிய அவர்கள் புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 26 பதில்.சரியானவை

இரண்டாவது பரிசு பெற்றவர் ம.கபீர் அவர்கள் தெற்கு தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 24 பதில்.சரியானவை

மூன்றாவது பரிசு பெற்றவர் ஆ.நே. ஹாஜா நஜுபுதீன் அவர்கள் புதுத் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 18 பதில் சரியானவை
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

பெற்றோல் விலையை கண்டித்து திருவாரூரில் SDPI நடத்திய மாபெறம் ஆர்பாட்டம்...





திருவாரூர், ஜூன் 02 : SDPI திருவாரூர் மாவட்டம் சார்பாக பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு 01 /06 /2012 அன்று மாலை 4 .30 மணிக்கு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலமை தங்கினார் , மாவட்ட தொழிற்சங்க தலைவர் அப்துல் கரீம் , மாவட்ட பொருளாளர் நைனா முஹம்மது, நன்னிலம் தொகுதி கமிட்டி உறுப்பினர் அப்துல் ஹமித், ஆகியோர் கலந்து கொண்டனர் . .மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினர் .மாவட்ட செயலாளர் N .m .பாவா பக்ருதீன் கண்டன உரை ஆற்றினார் .ஷேக் முஹைதீன் நகர செயற்குழு கண்டன கோஷம் ஆற்றினார் .இறுதியாக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் A . முஹம்மது பைசல் அவர்கள் நன்றி உரை ஆற்றினார் இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அணைத்து கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் .இதில் நூற்றுகணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)