முத்துப்பேட்டை, டிசம்பர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 28 .10 .2011 அன்று பெய்த கடுமையான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெறிதளவு பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில் புயல் எச்சரிக்கை, வெள்ள அபாயமும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டன. அன்றைய தினம் முத்துப்பேட்டை பேட்டை ரோட்டில் உள்ள ஹாஜா மைதீன் என்பவர் வீட்டில் பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாடிமுத்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வீட்டு சுவர் மழைநீரை உள்வாங்கியதால் அந்த சுவர் எதிர்பாராமல் இடிந்து விழுந்ததில் இதில் நாடிமுத்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்து வருவாய் மற்றும் காவல்துறை விசாரணையில் நாடிமுத்து மழைக்கு பலியானார் என்று அறிக்கை அளித்தனர். அப்போது மழைக்கு பலியானவர்களுக்கு நிவாரண நிதி கொடுப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அந்த நிவாரண நிதி அவரது குடும்பத்திற்கு கிடைக்கவில்லை, அதனால் அவருடைய மணைவி புவனேஸ்வரி தமிழக முதல்வருக்கு இந்த நிவாரண நிதி கிடைப்பதற்கு உருக்கமான கடித்தத்தை எழுதி உள்ளார். இக்கடிதத்தில் கூறி இருப்பதாவது : எனக்கு 4 வயதில் ஓர் ஆண் குழந்தையும், 6 மாதத்தில் ஓர் பெண் குழந்தையோடும் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகிறேன். என் கணவனின் வருமானத்தில் தான் என் குடும்பத்தை நடத்தி வந்தேன். அவர் இறந்ததில் நானும் எனது பிள்ளைகளும் எந்த வருமானமும் இன்றி வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
source from. www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,ASNS.அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், U . பத்ரு ஜமான் ஆலிம்,