முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் வெள்ளத்தடுப்பு பணிக்காக வெளி நாட்டவர் ஆய்வு









முத்துப்பேட்டை, நவம்பர் 25 : தமிழ்நாடு பொது பணித்துறை மூலம் வெண்ணார், காவேரி, மற்றும் கல்லனைக் கால்வாய் பாசன பார்வையில் மழை நீரை பாது காப்பாக கடலுக்கு கொண்டு சேர்ப்பதற்கும், மக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் விதமாக, அவற்றிருக்கு வெல்ல தடுப்பு முறையை செயல்படுத்த ஆசியா வளர்ச்சி வங்கி முடிவு செய்துள்ளது. இந்த செயல் திட்டத்தை முத்துப்பேட்டையில் எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருமதி. சிண்டி மால்விசின் தலைமையில் ஆஸ்திரேலியா, சைனா, நிவ்ஸ்லாந்து, இலங்கை ஆகியா நாடுகளை சார்ந்த 5 பேர் கொண்ட குழு நேற்று முத்துப்பேட்டையில் உள்ள லகூன் பகுதிக்கு சென்று அவற்றை பார்த்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி சுமார் 3 மணிநேரம் வரை நடைபெற்றது. இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாரூர் செயற் பொறியாளர் திரு. A . மணி அவர்கள் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் நமது ஊரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கும், மழை நீரை பாதுகாப்பாக கடலுக்கு கொண்டு சேர்பதற்கும் வங்கியின் மூலம் நமது ஊருக்கு லோன் தருவதாக கூறினார்கள். இது குறித்து தான் அவர்கள் இன்று முத்துப்பேட்டைக்கு வருகை தந்து ஆராய்ச்சியில் இறங்கினார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இதில் காவேரி கிழக்கு செயற் பொறியாளர் திரு. பக்தவச்சலம், வனக்காவலர் திரு. மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், AKL . அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டையில் தொடர் மழையால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை







முத்துப்பேட்டை, நவம்பர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நள்ளிரவிலிருந்து பெய்து வரும் கனத்த மழையால் ஆ.நே பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிர்லியான்ட் பள்ளி, பேட்டை பள்ளி, ஆகிய அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழையால் முத்துப்பேட்டையில் வியாபாரம் சற்று குறைவாகவே இருக்கின்றது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் இம்மழையால் அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது .

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)