முத்துப்பேட்டை, நவம்பர் 08 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இந்த குடிநீர் பராமரிப்பின் காரணமாக வருகிற நவம்பர் 10 , 11 , 12 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு நிறுத்திவைக்கப்பட உள்ளது. எனவே பொது மக்கள் நாளை வரக்கூடிய தண்ணீரை மூன்று நாட்களுக்கு சேமித்து, குடிநீரை சிக்கனமாக செலவு செய்யுமாறு முத்துப்பேட்டை நிர்வாக அதிகாரி, மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.கோ.அருணாசலம் ஆகியோர் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும் இதற்க்கு பொது மக்கள் நல் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறார்கள்.
source from www.muthupettaiepxress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்
AKL .அப்துல் ரஹ்மான்