முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சுய இன்பம் ஆண்மைக்கு ஆபத்து (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுயஇன்பம் எனப்படுகிறது. பரவலாக இளைஞர்களிடம் இந்த வழக்கம்காணப்படுகிறது.சுய இன்பம் ஆண்மைக்கு ஆபத்து (வயது வந்தவர்களுக்கு மட்டும்)இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிரதமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.(திருக்குர்ஆன் 23:5,6,7)ஆண்கள் தமது மனைவியர் மூலம் அல்லது அடிமைப் பெண்கள் மூலம்தவிர மற்ற வழிகளில் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும்,இவ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக்கொள்வோர் பழிக்கப்பட்டவர்கள் என்றும் வரம்பு மீறியவர்கள் என்றும்இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. இப்போது அடிமைப்பெண்கள் இல்லாததால் மனைவியர் மூலம் தவிர வேறு வழிகளில்இச்சையைத் தீர்த்துக் கொள்வது வரம்பு மீறிய குற்றம் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை.

விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போதுஏற்படுவது போலவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது.இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்று வழியையும் நமக்குச்சொல்லித் தந்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்;கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்புஹாரி 1905,

இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன்தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடாகஇருக்க சுய இன்பப்பழக்கம் நிச்சயம் உதவவே செய்யாது. நோன்புநோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம்விபச்சாரத்தில் இருந்து காப்பற்றும்.

இதையும் மீறி உடலில் ரொம்ப முறுக்கு ஏறி விட்டால் தூக்கத்தில்ஸ்கலிதமாவதன் மூலம் அதற்கு அல்லாஹ் இயற்கையாக வடிகாலைஅமைத்துள்ளான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற செயலில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்கள்அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ளவேண்டும்.

சுய இன்பம் பற்றி விஞ்ஞானம்...!

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை பாதிக்கும் சில முறைகளை கூறினார்.

01.அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது (சுய இன்பம்)

02.உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது,

03எப்போதுமே குப்புறப்படுத்துக் கொள்வது,

04.மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது,

05.கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது.

06.பெண்களை நிமிர்ந்து பார்க்கக்கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது.

07.செக்ஸ் புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பது,

08.செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது,

09.சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம்,

10.தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.

”இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.“

சாதியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு - அறிஞர் அண்ணா உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்-

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)